மனசாட்சி - வெங்கடேஷ். மு
This is entry #57 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
தேதி: 6-ஆகஸ்டு-2012 (திங்கள் கிழமை)
நேரம்:காலை 8.30
இடம்:சென்னை அண்ணா நகர் - 6 வது தெரு.
கதிரேசன் (எ) கதிர், தான் சொந்தமாக நடத்திவரும் "கதிர் ஒர்க் சாப்" கடையைத் திறக்க வந்து கொடிருந்தான்.6வது தெருவில் அவன் பைக் திரும்பியதும், வழக்கத்துக்கு மாறாக எங்கு பார்த்தாலும் போலீசும்,மக்கள் கூட்டமுமாக இருந்தது.என்னவென்று தெரியாமல் கூட்டத்தில் புகுந்து தன் கடைக்குச் சென்றான். நேராகக் கடைக்குச் சென்றவன் கடையைத் திறப்பதற்கு முன் பக்கத்துக்கு டீக் கடைக்காரர் பாண்டி அண்ணனிடம் தான் கொண்டு வந்த டிபன் பாக்ஸ் ஐக் கொடுத்துவிட்டு,
என்ன அண்ணே ஒரே கூட்டமாவும் போலீசுமா இருக்கு?
ஆமாப்பா நேத்து ராத்திரிப் பக்கத்துக்கு ப்ளாட் "A பிளாக்" ல ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிகிச்சாம்,"B பிளாக்" ல ஒரு வீட்ல திருட்டாம். நாடு எங்க போதுனே தெரியல,வர வர வாழ்றதுக்கேப் பயமா இருக்குப்பா.
அப்படியா என்று கேட்டுக்கொண்ட கதிர், தன் கடையைத் திறக்கச் சென்றான்.
நேரம்:காலை 10 மணி:
கடைப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிய கதிர்,டீ கடைக்காரப் பாண்டி அண்ணனையும் அழைத்துக்கொண்டு பக்கத்துக்கு பிளாட்ஸ் அருகில் சென்றான்.அப்போதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமும் போலீசுமாக இருந்தனர்.கூட்டத்தை விளக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.
கதிர்:"A பிளாக்" ல யாண்ணே பொண்ணு செத்து போச்சு?
பாண்டி அண்ணன்:ஆமாம்பா.
கதிர்:"B பிளாக்" ல திருட்டுப் போச்சா?
பாண்டி அண்ணன்:அட ஆமாம்பா.நீ என்னப்பா போலீஸ் மாதிரி கேள்விலாம் கேட்டுட்டு இருக்க?
கதிர்:யார்ணே அந்தப் பொண்ணு?
பாண்டி அண்ணன்:அட ஏதோ IT கம்பெனில வேலை செய்தாம்பா.நீ முதல்ல வா நாம இடத்தக் காலி பண்ணலாம்.
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர முயற்சிக்க,போலீஸ் லத்தியை எடுத்து கூட்டத்தை நோக்கி அடிக்கத் தொடங்கினர்.மக்கள் அனைவரும் கலைந்து சென்று பின் சிறிது நேரத்தில் மீண்டும் கூடினர்.
நேரம்:மதியம் 3 மணி:
டீக் கடைக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்,அருகில் இருக்கும் அணைத்துக் கடைக்காரர்களையும் ஸ்டேஷன்கு வரச் சொன்னார்.கதிர்,பாண்டி அண்ணன்,மற்றும் அனைத்துக் கடைக்காரர்களும் விசாரணைக்காக அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.சென்ற அனைவரையும் தனித் தனியே உள்ளே அழைத்த இன்ஸ்பெக்டர் முந்தின இரவு யார் யாரெல்லாம் எத்தனை மணி வரைக் கடையைத் திறந்து வைத்திருந்தனர்,யாரவது புது ஆள் நடமாட்டம் இருந்ததா என்பது போல் பல கேள்விகளைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக் கொண்டார்.கதிர் வொர்க் சாப் வைத்திருப்பதாலும் பாண்டி அண்ணன் டீக் கடை வைத்திருப்பதாலும் அவர்கள் இருவரும் இரவு 11 மணி வரை கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறினர்.அதனால் அவர்கள் இருவரை மட்டும் தனியாக அழைத்து துருவித் துருவி விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.அவர்கள் கூறிய அனைத்தையும் குறிப்பு எடுத்து வைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் "இனி நான் உங்கள எப்போ கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும்,இல்லேன்னா உள்ள தள்ளிருவேன்" என்று மிரட்டினார்.இருவரும் "சரி சார்" என்று கூறி விட்டுச் சென்றனர்.
நேரம்:இரவு 8 மணி:
கதிர்:பாண்டி அண்ணே வாங்க சீக்கிரம் கடையைச் சாத்திரலாம் இல்லேன்னா அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏன் திறந்த,எதுக்கு திறந்தநு கேட்டு பாடாப் படுத்திருவார்.
பாண்டி அண்ணன்:ஆமாம்பா நீ சொல்றதும் சரி தான்,பேசாம இன்னும் 10 நாளைக்குக் கடைப் பக்கமே வரக்கூடாது.
கதிர்:அண்ணே அப்படி ஏதும் பண்ணிறாதீங்க, பிறகு சந்தேகம் உங்க மேல வந்துரப்போது.அந்த ரெண்டு கேசையும் உங்க மேல போட்டு உள்ள தள்ளீரப் போறாங்க.சிரித்தான்.
பாண்டி அண்ணன்:ஏம்பா நா புள்ள குட்டிக்காரன்,கத்திப் பேசாதப்பா,நீ எடக்குக்குப் பேசுறது உண்மைன்னு நெனச்சி என்ன புடிச்சிரப்போறாங்க.
கதிர்:எண்ணனே நீங்க பாக்காத கேசா? சிரித்தான்.
பாண்டி அண்ணன்:சும்மா இருப்பா.சரி வா போலாம்.நாளைக்குக் காலைல வழக்கம் போலக் கடையைத் திறந்துற வேண்டியதான்.
இருவரும் புறப்பட்டனர்.அப்போதும் கூட ஓரிரு போலீஸ் நடமாட்டம் அத்தெருவில் காணப்பட்டது.