ராமசாமி போஸ்ட் மாஸ்டர் - கிருத்திகா
ராமசாமி போஸ்ட் மாஸ்டர்.
அவருக்கு இரண்டு பசங்க ... ராமசாமி வேலை செஞ்சிட்டு இருக்கும் பொது நெறைய கஷ்ட்டப்பட்டு இருக்கார்
அந்த சைக்கிளில் கிராமம் கிராமமாக பொய் தபால் மணி ஆர்டர் கொடுத்துட்டு வரதுக்குள்ள முதுகு வலி அவரை ஒரு வழி பண்ணிவிடும்
கனகம்மா அவரின் மனைவி அவள் அவருக்கு ஒரு வரம் எல்லா கஷ்டத்திலேயும் அவருக்கு கூட நின்று எப்போதும் சிரிதமுகமகவே அவருக்கு துணை நின்றவர்
இதோ ரெண்டு பசங்களும் நல்ல படிச்சு அமெரிக்க போயாச்சு .. பசங்களும் பாசமானவங்க தான் இவங்களையும் அமெரிக்கா கூப்டாங்க ஆனா இவர்களுக்கு இந்த ஊர் தான் இங்கத மனுஷங்க தான் ரொம்ப பிடிச்சுபோச்சு
அதுனால எவ்ளோ வருந்தி கூப்பிட்டும் போகவில்லை ..
இதோ பசங்க பேர புள்ளைங்க எல்லா வந்துட்டுபோய் ஒரு வருஷம் ஆச்சு அடுத்து எப்போ வருவாங்க நு ரெண்டுபேரும் காத்திகிடகாங்க ..
ஒரு மத்தியான நேரத்துல உள்ளே இருந்து அம்பது வயது கனகம்மா
"என்னங்க..ஏசி மிசினு வச்சா வீடெல்லாம் குளிருமின்னு சொல்றாங்களே..
அத ஒண்ணு வாங்கினா தான் என்னவாம்?" என்று அப்பாவித்தனமாக கேட்கிறாள் .
வாசலில் ஈசி [,?] நாற்காலி யில்அமர்ந்திருக்கும் போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்ற , "அந்த விசிறி மட்டைய எடுத்து வா.. விசிறிகிட்டே பேசுவோம்"என்கிறார் .
ம்ம்..
அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் தன் பிள்ளைகளைப்பற்றி
பெருமையாக பேச நிறைய கதைகள் இருக்கிறது .
எத்தனையோ முதியவர்களின் வாழ்க்கை இப்படிதான் இருக்கிறது ... கனகம்மாவின் மறைவுக்குப்பின் அல்லது ராமசாமின் மறைவுக்கு பின் இருக்கும் அடுத்தவரின் நிலை என்ன ....???
முதியோர் இல்லங்கள் உள்ளது இதற்காக தானோ????????
{kunena_discuss:926}