ரெண்டுல ஒன்னு - கிருஷ்ண பாபு
Excuse me! இந்த ரெண்டுல ஒண்ணைத் தொடுங்களேன்!' விரல்களை நீட்டினான்.
திடுக்கிட்டு பின் சுதாரித்தவள் சிறு புன்முறுவலுடன் ஒரு 'சாரி'யை உதிர்த்துவிட்டு அவசரமாக பஸ் ஏறினாள்.
அவனும் பஸ் ஏறி அவளுக்கு மிக அருகில் வந்தான்.
'இந்த ரெண்டுல ஒண்ணைத் தொடுங்களேன்!'
டீச்சரிடம் பர்மிஷன் கேட்பது போல் நீட்டி நின்றான்.
கடுப்பாகி சீறினாள்.
'stupid..who the hell are you man?'
சட்டென பஸ்ஸின் அனைத்து எனிப்ராப்ளம் ஷாலினி?களால் சூழப்பட்டான் அவன்.
'ஈவ் டீசிங்ல உள்ளே தள்ளணும் இவனுகளைலாம்!'
'வேணாம் சார்,படிக்கிற பையன் போல இருக்கான்!'
'முதல்லயே கண்டிக்கலைனா ஆசிட் வரை போயிடுவானுக!'
'அதுவும் சரிதான்! தம்பி,அந்த பொண்ணுகிட்ட ஏன் வம்பு பண்ற?போலீஸ்ல சொல்லவா?'
தன்னை நோக்கி வரும் அத்தனை கமெண்ட்களுக்கும் மனதுக்குள் லைக் போட்டுவிட்டு சிரித்தபடி மீண்டும் அவளிடம் விரல்களை நீட்டினான்.
'ப்ளீஸ், இந்த ரெண்டுல ஒண்ணைத் தொடுங்களேன்!'
அவளுக்கு அவனைப்பார்க்க பாவமாக இருந்தது.ஒரு வேளை மனநிலை சரியில்லாதவனோ?
இரக்கத்தோடு முடிவெடுத்தாள்.
அவனது ஆள்காட்டி விரலை சின்னதாக தொட்டுவிட்டு வெடுக்கென கையை இழுத்துக்கொண்டாள்.
'WOW!Very Thanks Buddy!!!'
விசிலடித்தபடி அழகாய் நாலைந்து டான்ஸ் ஸ்டெப்ஸ் போட்ட பின் பஸ்ஸைவிட்டு இறங்கி ஓடி மறைந்தான்.
அவளுக்கு ஒரே குழப்பம்..
இனம் புரியாத ஏதோ மகிழ்ச்சியும் கூட..
யாரவன்?
அப்படி என்ன நினைத்திருப்பான் விரல்களுள்?
இத்தனை பேர் இருக்கும்போது என்னிடம் ஏன் கேட்க வேண்டும்?ஒரு வேளை காதல் கீதல் என்று தொல்லை செய்வானோ?
நினைக்கவே பயமாக இருந்தது.
பயத்தோடு சின்ன வெட்கமும் ஏனோ வந்தது.
நாளை வந்தால் கேட்போம்.
மறுநாள் அவன் வரவில்லை.
அடுத்தடுத்த நாட்களிலும்தான்…
'இந்த ரெண்டுல ஒண்ணைத் தொடேன்'
தோழிகளிடம் அவளும் விரல்களை நீட்ட ஆரம்பித்தாள்.
அவன் வருவானா? மாட்டானா?
ஏனோ அவன் வரவே இல்லை.
அந்த இடத்தில் ஒரு ஆடியோ பேக்ரவுன்டில் ஒலிக்கிறது...
""வாழ்வின் பொன்னான தருணங்கள் வியர்வையால் மாறிப் போகலாம்..ஆகவே உபயோகியுங்கள் எங்கள் குரங்கு மார்க் குளியல் சோப்.இது ஸ்கின் டாக்டர்கள் பரிந்துரைக்கும் அழகு சோப்.."
எப்டி நம்ம ad concept? ஒரு வாரமா யோசிச்ச ஐடியா சார் இது!'
ஆர்வமாய் நெருங்கினான் இவ்வளவு நேரம் தன் ஐடியாவை தன் மேனேஜரிடம் சொன்ன அசிஸ்டண்ட்.
'நல்லாதான் இருக்கு!நீயே ஸ்கின் டாக்டரா நடிச்சுடு! ஆமா, ஒரு வாரமா யோசிக்கிறதை தவிர வேற எதுவுமே செய்யலையா நீ?' நெருங்கியவனை விலக்கி இரண்டு குரங்குகளை கையில் திணித்தார் டைரக்டர்.
'ஐயே!எனக்கேவா?போங்க சார்'
கிளம்பினான்.
{kunena_discuss:785}