ஐய்யோ பல்லி - கிருஷ்ண பாபு
ரூம்ல பல்லி இருக்குறது எனக்குச் சுத்தமா பிடிக்காது.அதோட வாலும் சொரசொர தோலும்… உவ்வே!
வால் விழுந்தா முளைக்குமாம். இதென்ன அதிசயம்?வாலில்லாம இதைப் பார்க்க படைச்ச கடவுளுக்கே கண்றாவியா இருந்திருக்கும்!
ரசத்துல விழுந்தா வெஷம்.
பால்ல விழுந்தா படையல்.
மோர்ல விழுந்தா நோ மோர்.
தலைல விழுந்தா மரணம்.
கைல விழுந்தா………ம்…ம்… என்ன பலன்னு தெரியல,ஆனா ஏதாவது கெடுதலாதான் இருக்கும்!
இத்தனை அருவெறுப்பான பிராணி வேறு ஏதாவது உண்டா?ச்சே! இதுக்குப் பயந்தே நான் வீடு மாத்தணும் போல!
நோ! நெவர்! மீசை துடிக்கிறது! ஏதாச்சும் பண்ணனுமே!
கதவு திறந்தது.
'யீயீஈஈஈஈஈஈ………' nighty போட்ட ஒரு பெண் என்னை கண்டதும் அலறினாள்.
'என்னடி?' அவள் பின்னாலுருந்து ஒரு குரல் கேட்டது.
'அம்மா, பாத்ரூம்ல ஒரு கரப்பான் பூச்சி!' அந்த பெண் என்னை பார்த்து முகம் சுழித்தபடி பதில் கூறினாள்.
'சே!! குடும்பமே HIT அடிச்சு விரட்டுது என்னை!
பல்லியை விட இந்தப் பயலுக ரொம்ப மோசம்டா சாமி' அவர்கள் என்னை கொல்லவரும் முன்னமே பாதரூம்பில் இருக்கும் ஒரு ஓட்டை வழியே ஒடி மறைந்தேன்.
{kunena_discuss:785}