(Reading time: 2 - 3 minutes)

உதவி - வின்னி

Swing

காலை மூன்று மணி, யாரோ கதவைப் பலமாகத் தட்டுகிறார்கள்.

கணவன், அரைத் தூக்கத்தில், வேண்டா வெறுப்பாக கதவைத் திறக்கிறான். வெளியில் மழை பெய்தபடி இருக்கிறது. 

அந்த மழையில் நனைந்தபடி ஒருவன் "தள்ளிவிட முடியுமா சார்?" என்று கெஞ்சுகிறான்.

"இப்ப காலை மூன்று மணி இந்த மழையில் என்னால் முடியாது" என்று சொல்லிக் கதவை அடித்துச் சாத்திவிட்டு, மீண்டும் படுக்கப் போகிறான்.

"யார் அது?" மனைவி கேட்கிறாள்!

"யாரோ ஒரு ஊர் பேர்தெரியாத குடிகாரப் பயல், எதையோ தள்ளிவிடச் சொல்லுகிறான்"  என்றான் கணவன்.

"அவனுக்கு உதவி செய்தீங்களா?", அவள் கேட்கிறாள்.

"இல்லை! இப்ப மூன்று மணி. இந்த அடித்துக் கொட்டுகிற மழையில என்னால் வர முடியாது என்று சொல்லி விட்டேன்! " என்றான் கணவன்.        

 “மூன்று மாதத்துக்கு முன் கார் பழுதடைந்து, அந்த முன் பின் தெரியாத,   இரண்டு பேர் எங்களது காரைத் தள்ளிவிட்டு  உதவி செய்தது! ஞாபகமில்லையா?". "இவ்வளவு விரைவாக மறந்து விட்டீர்களா?".

“குடிகாரனுக்கும் கடவுள் உதவுவார் என்பதை மறந்து விடவேணாம்!”

“நீங்க கட்டாயம் அவனுக்கு உதவி செய்ய வேணும்”. மனைவி சொல்கிறாள்.

கணவன் அவள் சொன்னபடி செய்ய, உடுப்பை மாத்திக்கொண்டு, அந்த கொட்டும் மழையில் வெளியே போகிறான்.

 "ஹலோ! நீ இன்னும் இங்கேயா நிற்கிறாய்?”,கத்துகிறான் அந்த மனைவியின் சொல்லைத் தட்டாத கணவன்.

"ஆமாம்!",  பதில் வருகிறது!

"நான் இன்னும் தள்ளி விட வேணுமா?" கேட்கிறான் கணவன் 

"ஆமாம்!",  இருட்டில் இருந்து பதில் வருகிறது!

ஆனால், ஒரு காரையும் காணவில்லை!

 “நீ எங்க  நிற்கிறாய்?” கணவன் மீண்டும் கத்துகிறான்!

 "நான் இங்க  ஊஞ்சலிலை இருக்கிறேன்", குடிகாரன் அழைக்கிறான்!

எதைத் தள்ளுவது என்று கணவனுக்குப் புரிந்துவிட்டது! 

மனைவி நிம்மதியாகத் தூங்குகிறாள்!

 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.