(Reading time: 7 - 13 minutes)

2017 போட்டி சிறுகதை 40 - என்னவென்று சொல்வதம்மா - பூஜா பாண்டியன்

This is entry #40 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை -கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

Love
 

ணமேடையில் அமர்திருந்தவளின் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது....

கெட்டி மேள  சத்தத்தில் மங்கள நாண் இனிதே சுபத்ராவின் கழுத்தில் அர்ஜுன் கையால் பூட்டபட்டது. மேடையில் அமர்திருந்தவளின் நினைவுகள் பின்னோக்கி அவளுடனே பயணப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், இன்ஜினியரிங் கல்லூரியில் முதல் நாள் சுபத்ரா புது மாணவியாக நுழைந்த பொழுது ராகிங் என்ற பெயரில் சீனியர் பட்டாளம் ஒன்று இறுதி வருட மாணவர்கள் இந்த அர்ஜுன் தலைமையில் வருகிற போகிற முதல் வருட மாணவர்களை ராக் செய்து கொண்டிருந்தனர்.

ஒதுங்கி சென்ற இவளை அர்ஜுன் அழைத்து

‘உன் பெயர் என்ன? என்றான்.

“சுபத்ரா” என்றவுடன்

உன் அண்ணன் பெயர் கிருஷ்ணனா?

ஆமா , அவள் ஆச்சர்யமாக சொல்ல....

ஒ ஹோ .... என நண்பர் பட்டாளம் குதூகலித்தது.....

உனக்கு ஆள் கிடைச்சாசுடா..... என கூட்டத்தில் ஒருவன் கத்த........ மீதி அனைவரும் ஒ...... என்று கூச்சலிட்டனர்.

சுப்த்ரவிற்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அதை கண்ட அர்ஜுன் மற்றவர்களை அமைதியாக இருக்கும்படி சொல்லி அவளை அங்கிருந்து அனுப்பு வைத்தான்.

அவளை பார்த்ததில் இருந்து அவனுக்கும் மனதிற்குள் ஒரு மெல்லிய A.R.ரெஹ்மான் மியூசிக் கேட்கத்தான் செய்தது.

அது அடுத்து வந்த நாட்களிலும்  அது வளர்ந்துகொண்டே வந்தது. அவனும் பல முறை முயன்றும் சுபத்ராவிடம் பேச முடியவில்லை. அவளும் அவனை முடிந்தவரை தவிர்த்து வந்தாள்.

இப்படியாக அந்த வருட படிப்பும் அவனுக்கு முடிவுக்கு வந்தது. அன்று அவன் நண்பன் வினோத்திடம் பேசிய போது இன்று எப்படியும் சுபத்ராவிடம் தனது காதலை சொல்லபோவதாக பேசியதை சுபத்ரா கேட்கும்படி ஆயிற்று.

அதை அவள் பயத்துடன் தனது தோழி பூஜாவிடம் சொல்லும் போதே கண்களின் ஓரம் கரிக்க தொடங்கியது. வீட்டில் காதல் என்றாலே ஏதோ கொலை குத்தம் என்ற கோட்பாட்டில் வளர்க்கப்பட்ட சுபத்ரா, கெஞ்சி கூத்தாடி தான் காலேஜில் சேர்ந்தாள். அதையும் மீறி அர்ஜுன் பால் தனது மனம் செல்வதை அறிந்து.... அர்ஜுனிடம் என்ன சொல்லுவது என்று குழம்பி தவித்தது மனது.

பூஜாவிடம் , கல்லூரியில்  ஓரமாக இருந்த அடர்ந்த செடியின் அருகே பேசி கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ வேகமாக வந்த அர்ஜுன் அவளது சுடிதார் மேல் போட்டிருந்த துப்படாவை பிடித்து இழுக்கவும் பின் செய்திருந்த டாபின் சிறு துண்டும் கிழிந்து அவன் கையோடு வந்தது.

அவ்வளவு தான் அங்கிருந்து பிடித்த ஓட்டம், வீடு சென்று  தான் நின்றது. அதன் பின் காயிச்சலில் விழுந்து எழவே சரியாக இருந்தது.  இந்த மூன்று ஆண்டுகளில் தன்  மனதுக்கு பிடித்தவன் இவ்வாறு செய்து விட்டானே , அதனால் அப்பா யாரை சொன்னாலும் ஏன் என்று கேட்க்காமல், போட்டோ பார்க்க கூட எண்ணாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்

அதன் பின் இன்று தான் அர்ஜுனை  மணமேடையில் பார்க்கிறாள்.

கல்யாணம் என்றவுடன் அப்பா சொன்ன, மாப்பிள்ளை  தூரத்து  சொந்தம், அவளை ஏதோ கல்யாண வீட்டில் பார்த்து பிடித்து போய், உடனே கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்றும், அப்பாவும் அந்த கல்யாண வீட்டில் வைத்து மாப்பிள்ளை பாண்டியனிடம் பேசியதாகவும் மிகவும் பிடித்து போனதால் , மாப்பிள்ளை ஒரு மாத onsite ல் அமெரிக்க சென்று வந்தவுடன் திருமணம் என்று மாப்பிள்ளை குடும்பத்தார் வந்து பெண் பேசி பூ வைத்து சென்றதும் இனிதே நடந்தேறியது.

ர்ஜுனுக்கோ தான் நேசித்தவளே வாழ்க்கை துணையாக வருவதில் மிக மகிழ்ந்து போய் இருந்தான். ஒரு மாதத்திற்கு முன் அத்தை மகன் சந்தோசின் கல்யாணத்தில் ,

அம்மா ”அர்ஜுன் உனக்கு ஒரு வரன் வந்திருக்கு , ஜாதகம் கூட அருமையா பொருந்திருக்குடா, பேர் பொருத்தம் ரொம்ப பிரமாதம். அர்ஜுன் – சுபத்ரா. “

அதை கேட்டவுடன் வானத்தில் பறப்பது போல் இருந்தது.

“ அதோ கல்யாண பெண் பக்கத்தில் நிற்கிறளே, லைட் ரோஸ் நிற பட்டு புடவையில் அவ தான் சுபத்ரா. உனக்கு பிடிச்சா சொல்லு, சுபத்ரா அப்பா உன்னோட பேசறேன்னார்.

அவ அப்பா இளங்கோவிடம் பேசும் பொழுது “சுபத்ராவின் சம்மதமும் கேட்டுக்கொள்ள வேண்டினான். அவர் எனக்கு புடிச்சா என் மகளுக்கும் பிடிக்கும் என கூறி முடித்துவிட்டார்.

அன்று கல்லூரியில் கடைசி நாள் நடந்தது பற்றி சுபத்ராவிடம் பேச நினைத்து........ மறு நாள் onsite இல் ஒரு மாதம் அமெரிக்கா சென்றதில் அவளுடன் பேச வாய்ப்பே கிட்டவில்லை .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.