(Reading time: 17 - 34 minutes)

போக மாட்டீங்கள்ள… உடனேயே….”

தன்னைப் பிடித்திருந்தவளின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்டே, “போகமாட்டேன்….” என்றான் அவன்…

“நீங்களே கிளம்பினாலும் நான் விடமாட்டேன்…”

“தடுத்துடுவேன்னு சொல்லுறியா?...”

“ஆமா….”

“எப்படி?....”

அவன் கேட்டதும் சற்று நேரம் புரியாமல் விழித்தவள், பின் புன்னகையோடு, அவனின் நெஞ்சில் முகம் புதைத்து, அவனின் முதுகை சுற்றி வளைத்துக்கொண்டாள் தன் கரங்களால்…

அவனுக்கு நடப்பதை நம்பவும் முடியவில்லை… நம்பாமல் இருக்கவும் முடியவில்லை…

தன்னை சுற்றி வளைத்திருந்த அவளது கரங்களுக்குள் கட்டுப்பட்டு நின்றவன், சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலக, அவள் புருவம் உயர்த்தினாள்…

“என்னைப் பிடிக்கலையா உங்களுக்கு?... நீங்க தான சொன்னீங்க எனக்கு உங்க மேல எல்லா உரிமையும் இருக்குன்னு… அதான்….”

தரையை நோக்கி அவள் பார்வை இருக்க, அவன் தன் ஒருவிரலால் அவளின் முகம் நிமிர்த்தி தன்னைப் பார்க்க செய்தான்…

“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… இத நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நைட்டே சொல்லணும்னு நினைச்சேன்… ஆனா முடியலை…. ம்ம்… சாரிம்மா…”

அவன் கெஞ்சலாய் கூற, அவள் சிரித்தாள்…

“ஐ… லவ்… யூ… சகி….” அவன் தன் காதலை சொல்லிவிட்டு, அவளைப் பார்க்க, அவளின் முகத்திலோ நாணம் படர்ந்திருந்தது அழகாய்…

அதை கை கட்டி நின்று ரசித்தவன், சிறிது நேரம் கழித்து, “சரிம்மா… டைம் ஆச்சு… தூங்கு…” என்றபடி இரண்டடி தான் எடுத்து வைத்திருப்பான்… அவனைப் பின்னிருந்து அணைத்துக்கொண்டாள் அவள்…

“ஐ… லவ்… யூ…. ராஜா…..”

அவளிடமிருந்தும் காதல் வெளிப்பட, அவனோ சட்டென திரும்பினான்…

அவன் திரும்பியது தான் தாமதம் என்பது போல் நகர்ந்து கொள்ள இருந்தவனின் விரல் பற்றினான் அவன் அவளை நகரவிடாமல்…

“ம்ம்… விடுங்க… ராஜா……”

“இன்னொரு தடவை அப்படி கட்டிப்பியா?...”

“ம்ம்… ஹூம்…..” அவள் சிணுங்க,

“சரிம்மா… உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம்….” என அவளின் கரத்தினை அவன் விட,

“நான் சொன்னா விட்டுடுவீங்களா?... எதிர்த்து பேச மாட்டீங்களா?...” என அவன் விழிபார்த்து கேட்டாள் அவள்…

“ஹ்ம்ம்…ஹூம்… என் சகி டார்லிங்க் சொல்லுறது எதுன்னாலும், அதுக்கு மறுபேச்சே கிடையாது…”

“ஓஹோ…. அப்போ ஓகே… எனக்கு சம்மதம்…”

“எதுக்கு சம்மதம்?...”

“ம்ம்… போங்க… ஒன்னும் தெரியாத மாதிரி தான்…”

“ஹே… நிஜமாடி… நீ என்ன சொல்லுறேன்னு எனக்குப் புரியலை…”

“என் கையைப் பிடிச்சு இப்போ என்ன கேட்டீங்க?...”

“அது….” என யோசித்தவனுக்கு தான் கேட்டது விளங்க, அவன் முகத்திலோ குறும்பு கொப்பளித்தது…

“ம்ம்… புரிஞ்சிட்டு… நான் ரெடி….” என்றவன் தன் கைகளை விரிக்க, சட்டென அதற்குள் வந்து அடைக்கலமானாள் அவள்…

அதன் பின் அவனின்றி அவளில்லை… அவளின்றி அவனும் இல்லை… இருவரும் ஒருவரை ஒருவர் மனமார காதலித்தனர்… கணவன் மனைவியாக….

ரியாக ஒருமாதம் கழித்து, அவன் அவளை விட்டு பிரிந்து செல்ல நேர, மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டவன்,

“நீ சொல்லுடா சகி… உனக்கு பிடிக்கலைன்னா நான் கிளம்பலை…” என்றான் முகம் எங்கும் அவள் என்ன சொல்லுவாள் என்ற எதிர்பார்ப்புடன்…

அவளோ சிரித்த முகத்துடன், “போயிட்டு வாங்க ராஜா… உங்களுக்காக நான் காத்திட்டிருப்பேன்…” என்று வழி அனுப்பி வைத்துவிட்டு, தனதறைக்கு வந்து கதறி அழுதாள் அவள் வேதனை தாங்காமல்…

அவன் அங்கே சென்று சேர்ந்த நொடி, அவளுக்கு போன் செய்தான்… அன்று தொடங்கிய அந்த போன் கால், இன்றளவும் தொடர்கிறது… மாதக்கணக்காக… கூடவே அவனுடன் வேலை பார்க்கும் வெற்றியுடனும் சகோதர பாசம் தொடர, நாளும் அப்படியே போய்க்கொண்டிருந்த வேளையில், தெரியாமல் இன்று விட்டுவிட்ட ஓர் வார்த்தை பல மைல் தொலைவில் இருக்கும் அவனுக்கு எத்தகைய எண்ணத்தை கொடுக்கும் என்று அறியாமல் இல்லை அவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.