சிறுகதை - மசாலா கபே - சிவாஜிதாசன்
சீன் 1 :
தனது சிறிய ஹோட்டலை விசாலப்படுத்தியதில் பரம திருப்தி அடைந்திருந்த அண்ணாச்சி மகிழ்ச்சி பொங்க கடையில் அமர்ந்திருந்தார் .
இன்னைக்கு நிறைஞ்ச பௌர்ணமி காசால கல்லா நிறைஞ்சி என் மனம் குளிரனும்
இங்கே வெயில் வெறுப்பேத்திட்டு இருக்கு உங்களுக்கு குளிர்ச்சி கேக்குதோ என்று கூறி கொண்டே ஹோட்டல் உள்ளே நுழைந்தான் முத்து
இதான் வேலைக்கு வர லட்சணமா
அண்ணாச்சி நீங்க தான தக்காளி வாங்கிட்டு வர சொன்னிங்க
ஆமா
மார்க்கெட் போனா ராணுவம் குவிஞ்சி கிடக்கு
ஏன் தீவிரவாதி யாராவது உள்ளே நுழைஞ்சிட்டானா
அது எல்லாம் இல்லை முதலாளி தக்காளிக்கு பாதுகாப்பாம்
இதென்னடா கொடுமை. இந்த ஆட்சில மாடு தக்காளிக்கெல்லாம் பாதுகாப்பா . அந்த காலத்துல ஊடு பயிரா வெளைஞ்சி கிடைக்கும் அறுக்கிறதுக்கு நாதி இருக்காது. விவசாயியை காப்பாத்துங்கடான்னா தக்காளியை காப்பாத்துறானுங்க
முதலாளி சத்தமா பேசாதீங்க .குண்டர் சட்டம் பாயும்
சரி சரி தக்காளி வாங்கிட்டு வந்தியா இல்லையா
முத்துவா கொக்கா ஐநூறு கொடுத்து ஒரு கிலோ தக்காளி வாங்கிட்டு வந்துட்டேன். வர வழியில பயங்கரமான கொள்ளை கூட்டம் நான் வச்சிருக்க தக்காளியை கொள்ளை அடிக்க துரத்துச்சு
அப்புறம்
எனக்குள்ள இருந்த ஸ்பைடர்மேன் பேட்மேன் சூப்பர்மேன் உதவியால தக்காளிக்கு எந்த சேதாரமும் இல்லாம கொண்டு வந்துட்டேன்
அப்படியா தக்காளியை கொடு
முத்து தக்காளியை முதலாளியிடம் கொடுத்தான்
அதை எடை போட்டு பார்த்தார் முதலாளி
என்னடா கால்கிலோ கம்மியா இருக்கு
GST முதலாளி
கந்து வட்டியை விட கொடுமையா இருக்கேடா இந்த GST
தக்காளியை கொடுங்க முதலாளி சாம்பார்ல போடணும்
அடி செருப்பால இதெல்லாம் அழிஞ்சிட்டு வர பொருள் இதை பத்திரமா பீரோல வச்சி பூட்டிட்டு வரேன்
சீன் 2 :
தம்பி சாப்பாடு கேட்டு எவ்வளவு நேரமாச்சு என்ன பண்ணிட்டு இருக்க
கோச்சுக்காதீங்க சார் நாயர் சமையல் முடிக்க நேரமாயிடுச்சு என்று சாப்பாட்டை கொண்டு வந்து எதிரே வைத்தார் முத்து
என்ன வந்தேறி நாய் சமைச்சதை நான் சாப்பிடணுமா
நாய் இல்ல சார் நாயர்
அவன் மலையாளி
அதுக்கு
தமிழச்சி மார்ல பால் குடிச்ச ஒரு தமிழன் சமைச்சதை மட்டும் தான் நான் சாப்பிடுவேன்
அவனா நீ? உன்னை தாண்டா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்
ஆ ஊன்னா தமிழ்நாட்டுல பரம்பரை பரம்பரையா வாழ்ந்துட்டு இருக்கவங்கள வந்தேறி வந்தேறினு சொல்லுறியே. தமிழனை எப்படி கண்டுபிடிக்குறது அந்த பார்முலா சொல்லு
அது வந்து தம்பி தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் கிடையாது
வேற யார் தான் தமிழன்
தமிழச்சி வயித்துல யார் எல்லாம் பொறந்தாங்களோ அவங்க எல்லாம் தமிழர்கள்
டேய் தமிழனை எப்படி கண்டுபிடிக்குறதுனு கேட்டேன்
அது வந்து தம்பி .உங்களுக்கு புரியலை. என் முப்பாட்டன் முருகனை யார் எல்லாம் வேண்டுகிறார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள்
தமிழ்நாட்டுல பெரும்பாலானவர்கள் முருகனை கும்பிடுறாங்க
முருகனை கும்பிட்டா மட்டும் தமிழனாய் ஆகிட முடியாது
இப்போ தான முருகனை கும்பிடுறவன் எல்லாம் தமிழன்னு சொன்ன
அது வந்து தம்பி
சரி விடு நீ எதுக்கு அரசியலுக்கு வந்த அதை சொல்லு
தமிழனை தமிழன் தான் ஆள வேண்டும்
நல்ல விஷயம் தான் அப்போ இப்படி வச்சுக்கலாம் .நீ சொல்லுற குவாலிஃபிகேஷன் உடைய ஒரு தமிழர் முதல் அமைச்சர் ஆகிட்டார்னு வச்சுக்கோ.நீ அரசியலை விட்டு போயிடுறீயா
நான் எதுக்கு போகணும்
அதான் தமிழன் முதலமைச்சர் ஆகிட்டாரேப்பா