”நான் எவ்வளோ அடிச்சாலும் தாங்குவேன் பாஸ்” என்றபடி சிரிப்புடன் நின்றான் அவன்.
“தமிழ், உங்ககிட்ட சில விஷயங்களை நான் சொல்லனும்..”
“யெச் ப்ரொசீட்”
“இதுவரைக்கு அப்பப்போ உங்க்கிட்ட யாழினியப் பற்றி பேசினாலும் அவகிட்ட உங்களைப் பற்றி பேசினாலும்,உங்க காதல் விஷயத்துல நான் பெருசா தலையிடல.. ஏன்னா அது உங்களுடைய ஸ்பேஸ்.. அதே மாதிரித்தான் எங்க நட்பும்! என்னால எப்பவும் யாழியை விட்டு கொடுக்க முடியாது..அவளை நீங்க நல்லாத்தான் பார்த்துபீங்க.. அவளுக்கு இனி தமிழும் முக்கியம்.. ஆனா தமிழிடம் கூட சொல்ல முடியாத விஷயம் அவளுக்கு வந்தால், அதை கேட்க அங்க நான் இருப்பேன்.. இதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது.”
“ புரியுது தமிழ்”
“இதை நான் ஏன் சொல்லுறென்னா, பொதுப்படையாக பார்க்குறதுக்கு, என்னைவிட யாழினி எமோஷனல் அதிகம் உள்ளவளாக இருக்கலாம்.. ஆனா எங்க நட்பை பொறுத்தவரைக்கும் நான் தான் எமொஷனல். எங்க நட்பை யாரு எப்படி புரிஞ்சுகிட்டாலும் பரவால.. ஆனா குடும்பத்தில் ஒருத்தர் தப்பாக புரிஞ்சுகிட்டா என்னால சகிக்க முடியாது.. அதுவும் யாழினிக்கு ஒரு கெட்ட பேருன்னா நான் தாங்கிக்க மாட்டேன்” என்றான் புகழ். அவன் பேசிக்கொண்டே, தமிழின் மனதில் உயர்ந்திருந்தான்.
“புகழ், எப்படி யாழினிக்கு நீதான் முதல் ஃப்ரண்டோ எனக்கும் அப்படித்தான்..அதனால்தான் இன்னமும் என் மனசை அவகிட்ட சொல்லாமல் உன் கிட்டசொல்ல வந்தேன்”என்றான் தமிழ். தமிழை ஆச்சர்யமாக பார்த்தான் புகழ்.
“என்னது.. இன்னும் லவ்வ சொல்லலையா?” என்று அவன் கேட்க இல்லை என தலையாட்டினான் தமிழ்.
அப்போ அடுத்த எபிசோட்ல அவரை காதல்சொல்ல வைப்போமா ப்ரண்ட்ஸ்?பாய்
தொடரும்
{kunena_discuss:994}