தொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 03 - அனிதா சங்கர்
“பசி வந்தா குருவி ரொட்டி
தண்ணிக்கு தேவகுட்ட..
பறிப்போமே சோள தட்ட
புழிதி தான் நம்ப சட்டை..
புழிதி தான் நம்ப சட்டை....”
பள்ளிபருவம் எல்லாரது வாழ்விலும் மறக்க முடியதா நினைவுகள்.அந்த பள்ளி பருவத்தில் காலடி எடுத்துவைத்தாள் தேன்நிலா.
இதுவரை வீட்டிலேயே தனது பொழுதை போக்கியவளுக்கு,அந்த சூழல் புதியதாய்...
முதல் நாள் பள்ளியில் அவளை சேர்க்கும் பொழுது அவளது பள்ளி பதிவேட்டில் அன்னம் பெயரே தாயின் பெயராய் தேவி கொடுத்துவிட்டாள்.
வாய் வார்த்தையை மட்டும் அல்ல,அனைத்திலும் அன்னமே தேன்நிலாவின் அன்னையாய் இருக்க அவள் உறுதி எடுத்திருந்தாள்.
புது சூழல் தேன்நிலாவிற்கு பிடித்திருந்தாலும் தாய்,தந்தையை விட்டு விட்டு இருக்க அவளால் ஒரு மணிநேரத்திற்கு மேல் முடியவில்லை.
சின்ன பெண் தானே அவள்.இதுவரை முழு நேரமும் தனது வீட்டில் இருதவளுக்கு,இப்படி தனியே இருப்பது பிடிக்கவில்லை.இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இப்பொழுது அந்த புது சூழ்நிலை பயம் கொடுக்க,தனது அன்னை அங்கு இல்லை என்பதை உணர்ந்தவளது உதடுகள் பிதுங்க இதோ,அதோ..என்று கீழே விழும் நிலையில் கண்ணீர் துளிகள்....
அவள் அழுகையை ஆரம்பிக்க நினைத்த அந்த நொடி அவளது கண்ணில் விழுந்த அந்த உருவத்தின் நிழலில் அழுகையில் இருந்த உதடுகள் இப்பொழுது புன்முறுவல் பூத்தது.
அவளது கண்களின் மணியில் மறைத்திருந்த கண்ணின் நீரையும் தாண்டி அவளது அண்ணனின் உருவம் அழகாய் தெரிந்தது.
“அண்ணா..” என்று அழைத்தவள் அவனது அருகினில் ஓடினாள்.அவனுக்கு பிரேக் விட்டிருக்க தனது தங்கையை காண அவன் ஓடோடி வந்திருந்தான்.
அழும் நிலையில் இருந்த தனது தங்கை தனது தங்கை தன்னை கண்டதும் மலர்ந்து சிரித்ததை பார்த்தவன் தேன்நிலா தங்களை காணமால் பயந்துள்ளால் என்பது புரிந்தது.
மதிவேந்தனும் அந்த வகுப்பறைக்கு வந்திருந்தான்.அவனது வீட்டிற்க்கு பக்கத்தில் இருந்த அவனது சித்தப்பா முறை வருவரின் பையனையும் பள்ளியில் அன்று சேர்த்திருந்தனர்.
அவனை பார்த்துக் கொள்ளுமாறு மதிவேந்தனிடம் அவர் சொல்லி விட்டு போக அதனால் அவன் அந்த வகுப்பறைக்கு வந்திருந்தான்.
வந்தவனது கண்களில் அனைத்தையும் ஒரு வித மிரச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த தேன்நிலா பட்டாள். அவளை நோக்கி அவன் அடி எடுத்து வைக்க போக அதற்குள் கௌதம் வந்ந்திருந்தான்.
அதை பார்த்தவன் நிலாவிடம் செல்லாமல் தனது தம்பியை நோக்கி சென்றான்.
அதன் பிறகு கௌதம் தனது தங்கையை சமாளித்து அவளுக்கு மிட்டாய் எல்லாம் வாங்கி தருவதாய் கூறி சமாதானப் படுத்திவிட்டு சென்றான்.
மதிய உணவை அன்னமே பள்ளிக்கு எடுத்து வந்தார்.அவருக்கும் இது நிலாவை பிரிந்து கழித்த முதல் பொழுது.அதனால் தனது பெண்ணைப் பார்க்க மதிய உணவுடன் வந்துவிட்டார்.
உணவு இடைவேளை மணி அடித்தவுடன் தனது பெண்ணையையும்,பையனையும் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டவர்,தனது அண்ணன் மகனையும் அழைத்துக் கொள்ள மறக்க வில்லை.
அப்பொழுதுதான் மதிவேந்தனை பார்த்த தேன்நிலாவின் கண்களில் ஒரு வித சந்தோஷம் வந்து சென்றது.
“வேப்பங்கொட்டை அவிச்சி ரத்தம் ரசிச்சோம்
வச்சிகுத்தி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணி இல்ல ஆத்து கிட்ட புல்ல அறிச்சோம்
தண்டவாளம் மேல காசு வச்சி தொலைச்சோம்”
“அம்மா..,மதி மச்சான்..,என்ன இந்த ஸ்கூலா...”என்று நிலா கேட்க
“ஆமாம்டா..தேன் குட்டி..” கூறினால் அன்னம்.
“ஐய்..ஜாலி,அண்ணாவும் இருக்கான்,மச்சானும் இருக்கான் ..,அம்மா நான் இனி இங்க இருக்குறதுக்கு அழுவ மாட்டேன்..”என்று கூறினால் தேன்நிலா.
“அப்படியா...,அப்ப என்னோட தேன் குட்டி அழுதாளா...”என்று கேட்டாள் அன்னம்.
“ஆமாம் பெரியம்மா,நான் ப்ரேக்ல போய் பார்க்க போனேன்,அப்ப பாப்பா அழுதுக்கிட்டு இருந்துச்சு..”என்று கூறினான் கௌதம்.
தன் மகளின் நிலை அந்த தாய்க்கு புரிய தான் செய்தது.வளர்ந்த அவருக்கே தனது மகளை இவ்வளவு நேரம் பிரிந்திருந்தது வேதனையை கொடுக்க,அந்த குட்டி தேவதைக்கு அது வருத்தத்தை கொடுக்காமலா இருந்திருக்கும்.
“இனிமே என் தேன்குட்டி அழ மாட்டா,அவளை பார்த்துக்க அவ சொன்ன மாதிரி
ரெண்டு பெரிய மனுசங்க இருகாங்க..,என்னடா வேந்தா தேன பார்த்துப்பல..” என்று அன்னம் கேட்க