(Reading time: 15 - 29 minutes)

“உங்களை பசியோட காக்க வைத்துவிட்டேன்.”

“இப்பல்லாம் பசிக்கிறதே இல்லை மகேன். ஏதோ இருக்கனும்கிறதுக்காகதான் சாப்பிடறதே.”

அவன் அமைதியானான்.

கிருஷ்ணவேணியைக் காணவில்லை.

பொன்னிதான் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வந்தாள்.

“கிருஷ்ணா எங்கே?”

மகேந்திரன் கேட்டான்.

“தம்பி. சமையல் அறையில் உங்களுக்கு தோசை ஊத்திக்கிட்டு இருக்கு.”

“பொன்னி. அவளை வரச்சொல்லு.”

ரவிச்சந்திரன் சொல்லவும் அவளும் உள்ளே சென்றாள்.

“வாம்மா கிருஷ்ணா. வந்து எங்களோட உட்காரு.”

“பரவாயில்லை மாமா. நான் உங்களுக்குப் பரிமாறிவிட்டு அப்புறம் சாப்பிடுகிறேன்.”

“அதெல்லாம் வேண்டாம். நாமே எடுத்துப் போட்டுக்கிட்டு சாப்பிடுவோம். மகேன் பக்கத்தில் உட்காரு.”

அவள் தயக்கத்துடன் அவனைப் பா

...
This story is now available on Chillzee KiMo.
...

எல்லாம் நினைத்துப் பார்த்துவிட்டு தான் அவள் தங்கள் அறைக்குச் செல்லத் தயங்கினாள்.

அவன் உறங்கிவிடுவான். அதன் பிறகு செல்லலாம் என்று எண்ணியிருந்தாள்.

அவள் அறைக்குள் நுழைந்தபோது அவன் அறையின் ஜன்னலை ஒட்டி வெளியில் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.