(Reading time: 12 - 23 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இருக்கும். நேரத்திற்கு அங்கு சென்று விடலாம்" என்று அதிரதன் சொன்னான். அதிதியும் அதை ஒப்புக் கொண்டாள்.

 " ஆமா மாமா எனக்கு தெரியும். இங்கிருந்து நாம் செல்வதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் "என்று கூறினாள்.

 அனைவரும் நடக்க ஆரம்பித்தனர். காட்டு வழியில் மலைப் பாதையில் விரைவாக நடக்க ஆரம்பித்தனர். அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு காரணத்திற்காக உறுதி இருந்தது. தளராத நடையினால்  ஒரு மணி நேர  பயணத்தின் பின் அவர்கள் மலைச் சரிவில் இருந்த கிருபாவின் வீட்டை அடைந்தனர்.

அதிதி கிருபாவிடம் கையெடுத்து வணங்கி,

" என்னை மன்னித்துவிடுங்கள் அங்கிள். நான் இத்தனை நாள் உங்களை தவறாகதான் நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் எனக்கு எல்லா விவரமும் தெரிந்தது. என்னையும் அக்காவையும் நீங்கள் எந்த அளவிற்கு கவனித்து பாதுகாத்து இருக்கிறீர்கள் என்பதும் எனக்கு புரிந்தது. என்னுடைய தாத்தா கூட இதுபற்றி என்னிடம் ஒன்றும் ஒரு வார்த்தை சொன்னதில்லை."என்று கூறினாள். அதற்கு கிருபா,

" இல்லையம்மா. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சூறாவளிக்கும் புயலுக்கும் நான்தான் காரணம் ஆகி விட்டேன். என்னால் அந்த விஷயத்தை மறுக்கவே முடியாது. எனக்கு இப்பொழுது இருக்கும் ஒரே லட்சியம்  அபியை சரி செய்ய வேண்டும் என்பது மட்டுமே…  அது மட்டும் நடந்து விட்டால் என்னுடைய ஆத்மா என்னை மன்னித்து விடும்" என்று கூறினார்.

"சரி நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று அது திட்டமிடுவோம்." என்று கங்காதரன் சொன்னார் . அதற்கு அதிரதன்,

" அப்பா, அது ஒரு வரியில் முடிக்க வேண்டிய திட்டம் கிடையாது. நாம் பல செயல்முறைகளை திட்டமிட வேண்டும். முதலில் அபி இந்த சிகிச்சைக்கு முழுமனதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த சிகிச்சை முறையில் வலியும் வேதனையும் அதிகமாக இருக்கும். நீண்ட நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு உடனடியாக தீர்வும் கிடைக்காது. ஏனெனில் மரபணுவில் ஏற்பட்ட மாற்றங்களை ரிவர்ஸ் செய்யவேண்டும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.