யாருமே மதிக்கலை”
”வேங்கையனும் மூர்த்தியும் அப்படியே ஆப்போசிட் டைப் போல ம் உன்னோட குணத்துக்கு மூர்த்திதான் கரெக்டான ஆளு”
”சரியா சொன்ன மஹதி” என சொன்னவள் கடிகாரத்தின் மணியை பார்த்துவிட்டு
”சரிடி நேரமாச்சி நான் கிளம்பறேன்” என்றாள் ஜானகி
”ஏய் எங்க கிளம்பிட்ட”
”வேற எங்க என் புகுந்த வீட்டுக்குதான், நான் இங்க வந்து ரொம்ப நேரமாச்சி இங்கயே இருந்தா அங்க திட்டுவாங்க”
”பிடிக்கலை பிடிக்கலைன்னு அங்கயே தங்கற போல”
”வேண்டாவெறுப்பாதான் தங்கறேன், வெறும் 6 மாசத்துக்கு மட்டும்தான் ஏற்கனவே 6 மாசத்தை பல்லை கடிச்சிக்கிட்டு தள்ளிட்டேன், மீதியிருக்கற நாளையும் கஷ்டப்படுத்தி தள்ளிட்டா, அப்புறம் அந்தாள்கிட்டயிருந்து எனக்கு விடுதலை கிடைச்சிடும், நானும் மூர்த்தி மாமாவை கல்யாணம் செய்துக்குவேன், சந்தோஷமா வாழ்வேன்” என்றாள் உற்சாகமாக அதைக்கேட்ட மஹதியும் மென்மையாகச் சிரித்தாள்.
தொடரும்...