மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 39 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
“சத்யா, யூ ஆர் ஆன் டைம்! பிரணய் பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன்னு சொன்னான். உட்கார். என்ன சொல்றான்னு பார்ப்போம்!” சத்யா வந்ததும் பரபரப்புடனே அவளை வரவேற்றாள் சக்தி.
“என்ன சக்தி, வீடு அமைதியா இருக்கு? யாரையும் காணோம்?”
“போலி டாக்டர் ஹாஸ்பிட்டல் போயிருக்கான். பாட்டி கோவிலுக்கு போனாங்க!”
“டாக்டர் எதுக்கு ஹாஸ்பிட்டல் போனார்?”
“பிரசாத்தோட ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு சேர்ந்திருக்கானாம்!”
“அப்போ சார் போலி டாக்டர் இல்லை, நிஜ டாக்டர் தான்!!!!”
சக்தி பதில் சொல்வதற்கு முன், அவளின் ஃபோன் இசைத்தது.
“பிரணய் தான் பேசுறான்!” சக்தி அழைப்பிற்கு உயிர் கொடுத்தாள்.
வீடியோ காலில் அவர்கள் முன் தோன்றினான் பிரணய்.
“ஹலோ பிரணய்! நான் கேட்ட டீடெய்ல்ஸ் கிடைச்சுதா?” சக்தி நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்!
“நான் எப்போவாவது முழு தகவல் சேகரிக்காம இருந்திருக்கேனா சக்தி. எல்லா விபரமும் சேகரிச்சாச்சு. நீங்க கேட்டப் பொண்ணு தமிழ் பொண்ணு. ஆனால் வளர்ந்தது மும்பைல. ஒரு அக்கா, அம்மா இருக்காங்க. அவங்க இரண்டுப் பேரும் இன்னும் மும்பைல இருக்காங்க. அக்காக்கு கல்யாணம் ஆயிடுச்சு. எந்த வம்பு தும்புக்கும் போகாம வளர்ந்த அந்த அஹல்யாக்கு திடீர்னு நடிக்கனும்னு ஆசை வந்துச்சு. அப்படி போன இடத்துல கௌரவ்னு ஒருத்தன் அவளுக்கு அறிமுகம் ஆகி இருக்கான்.”
பிரணய் சொல்லிக் கொண்டே போக சக்தியும், சத்யாவும் கவனத்துடன் கேட்டுக்