சாதனாவும், ப்ரியாவும் ஒன்றாக இதே போர்ஷனில் ஒன்றரை ஆண்டுகளாக தங்கி இருக்கிறார்கள். ஆனாலும், இருவருக்குள்ளும் சாதாரண பரிச்சயம் இருந்ததே தவிர, நட்பு என்று ஏதுமில்லை... சாதனாவின் வேலைக்கு இது மிகவும் ஏதுவானதாக இருந்ததால் அவள் அதை கண்டுக்கொள்ளவில்லை... ப்ரியாவும் அதற்காக வருந்தியதாக தெரியவில்லை...
இருவரும் தனி தனியே தங்களுக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வார்கள். அப்படி சமைத்ததை இது போன்ற விடுமுறை நாட்களில் கொஞ்சமாக பகிர்ந்துக் கொள்வார்கள்! மற்றபடி, கரண்ட் பில், வாடகை இத்தியாதி இத்தியாதி செலவுகளை எந்த கணக்கும் பார்க்காது இரண்டாக பிரித்து வீட்டு ஓனரிடம் கொடுத்து விடுவார்கள்...
🌼🌸❀✿🌷
மற்ற ஞாயிறுகளைப் போலவே அன்றும் சோம்பலுடன் நாள் நகர்ந்தது... பார்த்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி நிறைவுப் பெறவும், தொலைக்காட்சி பெட்டியை அணைத்த சாதனாவின் காதில் அடுத்த அறையில் மெல்லிய ஒலியில் பிரியா கேட்டுக் கொண்டிருந்த பாடல் விழுந்தது...
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள், அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள்,
வெளியே சொல்லவும் மொழியில்லை, வேதனை தீரவும் வழியில்லை,
ப்ரியா இருந்த அறையில் எட்டிப் பார்த்தாள் சாதனா!
“ப்ரியா, உங்களுக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமா? நிறைய தடவை இதையே கேட்குறீங்க?”
“ஆமாம், சாதனா பிடிக்கும்...” ப்ரியா இப்போதும் சுருக்கமாகவே பதில் சொன்னாள்!
“ம்ம்ம்... நல்ல பாட்டு தான்... ஆனால், வெளியே சொல்ல முடியாம அப்படி மனசிலேயே ஏன் வச்சிருக்கனும்? எழுதி வென்ட் அவுட் செய்திடலாமே?”
“செய்யலாம் தான்...” என்ற ப்ரியாவின் பார்வை, தன்னிச்சையாக அவள் அருகே இருந்த