அவனின் கண்ணில் இருந்து மறையவும், நேராக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு சீட்டில் நன்றாக சாய்ந்துக் கொண்டான்...!
ஒரு வாரம் குடும்பத்தினருடன் கழித்ததிலேயே அவனின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது...!
‘வீட்டுக்கு வர மருமகள் பொறுப்பானவளா இருக்கனும், பொறுமை, அன்பு உள்ளவளா இருக்கனும்... பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவளா இருக்கனும்... பார்க்கவும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கனும்... படிச்சிருக்கனும், பண்போட இருக்கனும்...’
அம்மா சொன்னது மீண்டும் அவனின் காதில் ஒலித்தது...
ஏன் என்று புரியாமலே போட்டோவில் பார்த்த ப்ரியாவின் முகம் அவன் நினைவில் தோன்றியது...
'பத்து வருஷம் முன்னாடி அவசர அவசரமா நடந்த கல்யாணம் ஒரு வாரத்தில் முடிஞ்சுப் போச்சு! அதுக்காக, அவ வாழ்க்கை அவ்வளவு தான்னு அப்படியே விடனுமா?'
போட்டோவில் இருக்கும் ப்ரியாவிற்கே இருபத்தி ஐந்து இருபத்தியாறு வயது தான் இருக்கும்... பத்து வருடங்களுக்கு முன் என்றால், எத்தனை சின்ன பெண்ணாக இருந்திருப்பாள்... பாவம்... பட்டாம்பூச்சியாக சிறகடித்துப் பறக்க வேண்டிய நாட்களில் சிறையில் மாட்டிக் கொண்டது போல் அடைப்பட்டு, சிறகும் ஒடிந்துப் போனது போலிருந்திருக்கும்... அதற்கு மேல் படித்து, பட்டம் பெற்று, குடும்பத்திற்காக எல்லாம் செய்வது என்றால் அம்மா அவளை பற்றி சொல்வது அதிகமில்லை தான்...
இந்த எண்ணம் மனசுக்குள் ஓட, அப்படியே தூங்கிப் போனான் விக்கிராந்த்...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...