தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 24 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“இந்தாப்பா விக்கிராந்த் பிரசாதம்...”
மற்ற நாட்களை போல் கிண்டலாக எதுவும் சொல்லாமல், ராஜம் கொடுத்த கிண்ணத்தை கையில் வாங்கிக் கொண்ட விக்கிராந்த்,
“என்னம்மா இன்னைக்கு விசேஷம்? காலையிலேயே கோவில் பக்கம் போயிருக்கீங்க?” என வினவினான்.
“இப்போ தெரிஞ்சு என்ன செய்ய போற கும்பகர்ணா? எப்போ பாரு சனி ஞாயிறுன்னா நல்லா குறட்டை விட்டு தூங்க வேண்டியது,” என்றாள் வர்ஷா கேலியாக!
“சும்மா இரு வர்ஷா! பாவம் அவனே இந்த ஒரு நாள் தான் தூங்குறான்...”
“ஹ்க்கும்!!! நான் ஒன்னு சொல்லவா அம்மா, நீங்க தான் செல்லம் கொடுத்து இந்த துரையை கெடுத்து குட்டிசுவராக்கி வச்சிருக்கீங்க! ஆனாலும் அண்ணா, இப்போவே தூங்கிக்கோ, கல்யாணம் ஆன அப்புறம் உனக்கு கூஜா தூக்கவே நேரம் இருக்காது, தூக்கமாவது மண்ணாவது...”
வர்ஷா திருமணம் பற்றி பேசவும் விக்கிராந்தின் பார்வை தானாக சற்று தள்ளி நின்றிருந்த ப்ரியாவின் பக்கம் சென்றது...
அவள் இங்கே நடந்த பேச்சை கவனித்ததாக தெரியவில்லை... மிக மும்முரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
தானாக ஆர்வம் எழ, வர்ஷாவிற்கு பதில் சொல்லாமல் ப்ரியாவின் அருகில் சென்றான் விக்கிராந்த்.
“புதினா நிறைய இருக்கு நான் புதினா சட்னி ரெடி செய்துட்டு கூப்பிடுறேன் எல்லோரும் சாப்பிட வாங்க...” என்ற ராஜமோ, அங்கே நடப்பது எதையும் கண்டுக் கொள்ளாமல் பேப்பரில் தன்னை மறந்திருந்த கணபதியோ அவனை கவனிக்கவில்லை! ஆனால் வர்ஷாவின்