தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
59. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“இன்னைக்கு ஈவ்னிங்கே அர்ச்சனாவை டிஸ்சார்ஜ் செஞ்சிடலாம்னு சொல்லி இருக்காங்க... எதுக்கும் இன்னும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கன்சல்ட் பண்ண சொல்லி இருக்கேன்...”
சாப்பிட்ட படி காஞ்சனா சொல்லவும்,
“ஆமாம் அத்தை, அதென்னவோ சரி தான், இப்போ எல்லாம் டாக்டர்ஸயும் நம்ப முடிறதில்லை,” என்றாள் கண்மணி.
அதே டைனிங் டேபிளில் காஞ்சனாவின் எதிரே அமர்ந்திருந்த கீதா, ராஜீவ் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
காஞ்சனா, கண்மணியின் பேச்சை கேட்டப்படி வந்த சஞ்சீவ்,
“சரி அம்மா நான் கிளம்புறேன்...” என்றான்.
“என்ன சஞ்சீவ் சாப்பிடலயா? சாப்பிட்டுட்டு போங்க,” என்றாள் கீதா.
“இல்லை அண்ணி, கார் சரி ஆயிடுச்சான்னு போய் பார்க்கனும்... வேற நிறைய வேலையும் இருக்கு,” என்றான் சஞ்சீவ் இயந்திரத்தனமாக!
“என்னடா வாங்கி எவ்வளவு நாள் ஆச்சு, அதுக்குள்ளே கார்ல பிரச்சனை,” என்றாள் காஞ்சனா!
“அதை செலக்ட் செஞ்சவங்க சரி இல்லை அம்மா... அது எப்படியோ போகட்டும், நான் இப்போ கிளம்புறேன்,” என்றான் சஞ்சீவ் எரிச்சலுடன்!
“இரு சஞ்சீவ், ஒரு அஞ்சு நிமிஷம் இப்படி உட்கார், நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...”
காஞ்சனா தன்மையாக தான் சொன்னாள்... ஆனாலும், முடியாது என்று சொல்லி விட்டு போய் விடலாமா என்ற யோசனை சஞ்சீவிற்குள் எழுந்தது! முன்பானால் இவ்வளவு யோசிக்காமல் எப்போதோ முடியாது சொல்லிவிட்டு போயிருப்பான்! இப்போது அப்படி முகத்தில் அடித்ததுப்