தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 30 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
பதிலுக்கு புன்னகை புரிந்த ஜீவா, ப்ரியாவும் அவனின் அம்மா ஹேமாவும் இருந்த இடத்தை மீண்டும் ஒரு தடவை பார்த்து விட்டு பேச்சை தொடர்ந்தான்.
“அம்மாக்கும் ப்ரியாக்கும் ஏன் ஒத்து போகுது தெரியுமா விக்கிராந்த்? அம்மாக்கு நான்-ஸ்டாப்பா பேசிட்டே இருக்க பிடிக்கும்... ப்ரியா வாயே திறக்காம கேட்டுட்டே இருக்காங்க... ஸோ பாருங்க, அவங்க ரெண்டுப் பேர் ஃபிரிக்வன்சி சூப்பரா செட் ஆகிடுச்சு...”
“ம்ம்ம்...”
தொடர்ந்து எதையோ சொல்ல விக்கிராந்தின் பக்கம் திரும்பிய ஜீவா, விக்கிராந்தின் பார்வை வேறு இடத்தில் இருப்பதை கவனித்தான். ஆர்வத்துடன் அவனின் பார்வையை தொடர்ந்தவன், அந்த இடத்தில் ஹேமாவும் ப்ரியாவும் இருப்பதை பார்த்தான்!
ஜீவாவின் முகத்தில் இருந்த புன்னகை விரிந்தது!
“உங்களுக்கு ப்ரியாவை ரொம்ப நாளா தெரியுமா விக்கிராந்த்?”
ஜீவாவின் அந்த கேள்வியினால், ப்ரியா பக்கம் இருந்த பார்வையை திருப்பி அருகில் நின்றிருந்த ஜீவாவை பார்த்தான் விக்கிராந்த்.
ஜீவாவின் பார்வை இப்போது ப்ரியாவின் பக்கம் இருந்தது! சட்டென்று விக்கிராந்தின் மனதில் கோபமும், பொறாமையும் சேர்ந்து ஜுவாலையாக ஒரு உணர்வு எழுந்தது!!!
“ஆமா, ப்ரியாவை ரொம்ப நாளா மட்டும் இல்ல, ரொம்ப நல்லாவும் தெரியும்!”
விக்கிராந்தின் குரலில் வேறுபாடு உணர்ந்து ஜீவா விக்கிராந்தை திரும்பி பார்த்தான். விக்கிராந்த் முகத்தை திருப்பிக் கொண்டான்!
“ஓ! ஐ சீ!” என்றப் போதும் ஜீவாவின் முகத்தில் மீண்டும் அதே புன்னகை உதயமாகி இருந்தது.