தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 33 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
வெள்ளி இரவு சென்னையில் இருந்து கிளம்பி அதிகாலையில் வீடு வந்து சேர்ந்த விக்கிராந்தின் முகத்தில் வருத்ததிற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. எப்போதும் இருப்பது போல மகிழ்ச்சியுடனே வந்தவன், தங்கையை சீண்டி, அம்மாவை கிண்டல் செய்து நேரத்தை கடத்தினான்.
அவனே பேச்சை தொடங்குவான் என்று காத்திருந்த ராஜம், அவனாக பேச்சை எடுப்பதாக தோன்றாததால், தங்கையுடன் சேர்ந்து நொறுக்கு தீனியை தீர்க்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தவனிடம்,
“விக்கி, அப்பா சொன்னார் நீயும் ஜீவாவை பார்த்தேன்னு. போட்டோவில் ஸ்மார்ட்டா இருந்தான், நேருல பார்க்க எப்படி இருக்கான்?” என பேச்சை தொடங்கினாள்.
“அவனா! ஒகே என் அளவுக்கு ஹான்ட்ஸம் இல்லை பட் ஓகே,” என்றான் விக்கிராந்த்!
வர்ஷா சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.
“உனக்கென்னடி இதுல சிரிப்பு வேண்டி இருக்கு? அந்த பையனை தான் ப்ரியாவுக்கு பேசி முடிவு செய்யலாம்னு இருக்கோம். வைஜெயந்தி அக்கா கிட்டேயும் சொல்லி இருக்கேன். ப்ரியாவுக்கும் அவனுக்கும்...”
“சரியா வராது! அந்த பேச்சே எடுக்காதீங்க அம்மா!” பேசிக் கொண்டே போன ராஜமின் பேச்சில் குறுக்கிட்டு சொன்னான் விக்கிராந்த்!
“ஏன் விக்கி சரியா வராதுன்னு சொல்ற?”
“நான் சொன்னது இருக்கட்டும், ஜீவா என்ன சொன்னார்?”
மகனை பார்த்தப் படியே,
“அவன் ஓகேன்னு சொல்லிட்டான்,” என்றாள் ராஜம்.