தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 37 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ராஜமின் கேள்வி விக்கிராந்தை அதிர செய்தது! அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை!
அடிப்பட்ட பாவனையுடன் அவன் ராஜமை பார்க்க, அவனை அமைதியாக எதிர்கொண்டாள் ராஜம்!
அம்மாவாக மேலே எதுவும் பேச போவதில்லை என்பது புரியவும், “என்னைப் பத்தி உங்களுக்கு தெரிஞ்சது இவ்வளவு தானாம்மா? எனக்குன்னு மனசுல சில ஆசை வச்சிருந்தேன். அது எல்லாம் ரெடிமேடா கிடைக்கனும்னு நினைச்சேன்... ஹுஹும் கிடைச்சிடும்னு நினைச்சேன்! அதனால தான் அன்னைக்கு நீங்க ப்ரியா பத்தி கேட்டப்போ அப்படி சொன்னேன். ஆனால் பொண்ணு பார்க்க போனப் போ கூட, போட்டோல பார்த்த ப்ரியாவை மனசில் வச்சு தான் பார்த்தேன். அது தப்பு தான்! ஆனால், ப்ரியா அப்போவே என் மனசுக்குள்ள வந்துட்டது எனக்கு புரியலை,” என விளக்கம் கொடுத்தான் விக்கிராந்த்!
அப்போதும் ராஜமின் முகம் இளகவில்லை!
“நீ சொல்றது சரின்னா, அப்போ ஆர்த்தி எப்படி வந்தா?”
விக்கிராந்தின் முகத்தில் ‘பாயிஷ்’ தோரணை வந்தது! உண்மையை சொல்ல அவனுக்கு தயக்கமாக தான் இருந்தது! ஆனாலும் அம்மாவிடம் இப்போது சொல்லாமல் இருக்கவும் மனம் வரவில்லை!
“உங்க கிட்ட ப்ரியாவை விட சூப்பரான பொண்ணை கண்டுப்பிடிக்கிறேன்னு சொன்னேனே அம்மா! அதனால் வந்த விளைவு தான் அது!”
ராஜமின் உதட்டில் சின்ன புன்னகை உதயமானது!
“அதை தான் சிம்பிளா ஈகோ ஈகோன்னு சொல்வாங்க விக்கி!”
ராஜமின் முகமாற்றம் விக்கிராந்திற்கு பெரும் அசுவாசத்தைக் கொடுத்தது!