04. காதல் நதி என வந்தாய் - வினோதா
ஆர்த்தியின் வீட்டிற்கு சென்ற அரை மணி நேரத்திலேயே, விக்கிராந்த் சொன்ன ‘பிரென்ட்லியான பேச்சு’ அவர்கள் அனைவருக்கும் புரிந்து போனது! ராஜம், கணபதி மட்டும் அல்லாமல் வர்ஷாவிற்கும் கூட குமாரையும், வசந்தியையும் மிகவும் பிடித்து போனது. புதிதாக சந்திப்பவர்களுடன் பேசுவது போல் இல்லாமல் வெகு நாள் பழகிய நண்பர்களுடன் பேசுவது போன்ற அவர்களின் கலகலப்பு பேச்சு விக்கிராந்தின் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது!
“ஆர்த்தி எனக்கு இன்னும் சின்ன குழந்தை போல தான்... அவளுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தது... இப்போ உங்களோட பேசின பிறகு எல்லாம் சரி ஆகிடுச்சு..." என்றாள் அவள் சின்ன புன்னகையோடு.
விக்கிராந்தின் முகத்திலும் மலர்ச்சி தோன்றியது.
"தேங்க்ஸ் ஆர்த்தி, என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்... எதுவா இருந்தாலும் இதே போல் என்னிடம் நேராகவே கேளு ஓகே?"
"சரி...”