(Reading time: 22 - 43 minutes)

15. காதல் பயணம்... - Preethi

ஹல்யா சொல்றதுலயும் தப்பேயில்லை இவனை நம்பி நம்ம அர்ச்சனா வீட்ல பேசியிருந்தால் என்ன ஆகிருக்கும்... ஒரு வேலை சும்மா விளையாடி பார்க்கிறானோ?!?! ஆனா நம்மள்ட்ட பொய் சொல்லி என்ன ஆக போகுது??? என்று கணினி முன் அமர்ந்திருந்தாலும் நவீனை பற்றிய நினைப்பே அர்ஜுன் மூளைக்குள் சுத்திக்கொண்டிருக்க, பலமாக யோசித்தான். யோசித்தவனுக்கு பொரிதட்டிவிட அட இதை நம்ம யோசிக்கவே இல்லையே... இப்படிதான் இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வந்தவனாய் மகிழ்ச்சியோடு கணினியில் மூழ்கினான்.

Kaathal payanamஎப்போதும் போல் நினைத்த நேரத்திருக்கு வந்த நவீன் வேலையில் மூழ்கி இருந்த அர்ஜுனின் முதுகில் தட்டி “என்ன மச்சா சுவிஸ்ல பணம் போட்டாச்சா?” என்று கேட்கவும், என்ன சொல்கிறான் இவன் என்பதுபோல் புரியாமல் பார்த்து “என்னடா உளறுற?” என்று வினவினான்.

“ஆமாம் நீ வேலை செய்யுறதை பார்த்தால் உனக்கு மட்டும் பணத்தை கொட்டோ கொட்டுன்னு கொட்டுற மாதிரிதான் வேலை செய்யுற... அதான் அந்த பணத்தை சுவிஸ்ல போட்டுயிருக்கியோனு கேட்டேன்..” என்று அவன் கிண்டல் செய்யவும் பதிலுக்கு அர்ஜுன் முறைத்தான்.

“பின்ன என்னடா?!?! இப்படி overtime வேலை செய்யுற உனக்கும் ஒரே சம்பளம் தான் என்னை பார் எனக்கும் ஒரே சம்பளம்தான்” என்று நக்கலாக கூறினான் நவீன்.  

“போதும் போதும் உன் கிண்டல் எல்லாம் அதை அப்பறம் பார்த்துக்கலாம். உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு கேட்கணும்” என்று அவன் கூறவும் ஆர்வமாக அர்ஜுனை பார்த்தான் நவீன்.

“என்னடா பொடியெல்லாம் பலமாய் இருக்கு... சொல்லு என்ன விஷயம்?”

“நீ அத்தை பொண்ணுன்னு சொன்னது பொய் தானே?!?” என்று அவன் குரலில் மகிழ்ச்சி பொங்க கேட்டான்.

மாறாக அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி நவீனை தொற்றிக்கொள்ளாமல் குழப்பமாக நோக்கி, “என்னடா உளறுற நிஜமாகத்தான் சொல்லுறேன்” என்று மீண்டும் அவன் அடித்து சொல்லவும் இப்போது அர்ஜுன் குழம்பி போனான்.

“அதெப்படிடா அர்ச்சனா அர்ச்சனான்னு சுத்திட்டு டக்குனு மாறிட்ட என்னால நம்பவே முடியலை... எனக்கு என்னவோ நீ எங்களோட விளையாடி பார்க்குரியோனு தான் தோணுது” என்று கூறினான்.

மெல்லியதாக சிரித்தவன், “இதில் ஆச்சர்யப்பட என்னடா இருக்கு? நினைத்தது கிடைக்கலைனா கிடைத்ததை ஏற்துக்கவேண்டியதுதான்” என்று இலகுவாக கூறிவிட்டு, “ஆமாம் எங்களைனு யாரை சொன்ன? எதை வைத்து நான் விளையாடுறேன்னு சொல்லுற?” என்று பொறுமையாகவே கூறினான்.

“வேற யாரை என்னையும் அஹல்யாவையும் தான், என்கிட்ட இப்படி சொன்னால் நான் கண்டிப்பா அஹல்யாகிட்ட சொல்லிடுவேன்னு தெரியும், அவளும் கண்டிப்பா அர்ச்சனாகிட்ட சொல்லுவாள்னு தெரியும் அதான் விளையாடிருக்கனு நினைச்சேன்..”

அவன் கூறிய பதிலுக்கு மெல்லியதாக சிரித்தவன். “நீ அவள்கிட்ட போய் எனக்கு கல்யாணம்னு சொன்னால் கூட அவள்கிட்ட எந்த வேறுபாடும் இருக்காதுடா. அதுனால இந்த மாதிரி முயற்சி எல்லாம் நான் எடுக்குறதா இல்லை” என்று கூறி சிறிது இடைவெளி விட்டவன், “சரி சரி ரொம்ப யோசிக்காத மச்சா அடுத்த சனிக்கிழமை நம்ம கிளம்புறோம் பொண்ணு பார்க்க சரி தானே? ஹே கண்டிப்பா அஹல்யாவும் வரணும் சொல்லிட்டேன். என்மேல கோவம் இருக்க தான் செய்யும் புரியுது ஆனால் எனக்கு தங்கச்சின்னு யாரும் இல்லன்னு சொல்லி கூட்டிட்டுவா சரியா???” என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.   

அவன் சென்றவுடன் என்னடா இவனுக்கு செண்டிமெண்டே வராதுன்னு பார்த்தால் இந்த புழி புழிந்திட்டு போறான் என்று யோசனையாகவே இருந்தான். அப்படி இப்படி என்று நாட்கள் வேகமாகவே நகர்ந்தது.

ந்த சனிக்கிழமை என்னடி பண்றது?” பொறுப்பாக கேட்டாள் அபி.

“பெருசா என்ன பண்ண போறோம் லேப்டாப்ல இருக்குற பார்த்த படத்தை எல்லாம் திரும்பி பார்ப்போம் அவ்வளவு தானே...” என்று அலுத்துக்கொண்டு கூறினால் தியா.

“ஹே இந்த சனிக்கிழமை நான் அண்ணா வீட்டுக்கு போறேன்டி” என்று அனு கூறவும், கூடுவிட்டு வெளியே செல்ல முடியாத பறவைகள் எல்லாம் சோர்ந்து போனன.

“ஏன் எல்லாரும் இப்படி பார்க்குறிங்க? நான் வேணும்னா நம்ம எல்லாரையும் அண்ணாவை கூட்டிட்டு போக சொல்லவா? எல்லாருக்கும் சேர்த்து permission fax அனுப்பசொல்லிருப்பேன்” என்று கொஞ்சம் வருந்தினாள். 

“ஆமா ஆமா அப்படியே வார்டன் விட்டுட்டாலும் ஒரு parent வந்தால் ஒருத்தர் தான் போகனும்னு ரூல்ஸ் பேசும் அந்த சிடுமூஞ்சி ஹ்ம்ம் நீ கிளம்பு அனு” என்று அலுத்துக்கொண்டாள் ஆர்த்தி.

“டேய் அஸ்வத் இந்த வாரம் படத்துக்கு போகலாம்டா வெள்ளிகிழமையே போகலாம்னு சொன்னேன், நீ தான் ப்ராஜெக்ட் விஷயமா ஒக்காந்திட்ட” என்று பொருமினான் அருண்.

அவன் கூறவும் திருதிருவென முழித்தவன், “இல்லை மாப்ள நான் அக்கா வீட்டுக்கு போறேண்டா இப்போ... அனேகமா திங்கள்கிழமை காலைல தான் வருவேன்னு நினைக்குறேன்”.

அஸ்வத் இவ்வாறு கூறியதும் அவனை திட்ட வாய்திரந்தவன், “ஏதோ எப்பாவது தான் உன் அக்காவை பார்க்க போறன்னு ஒரு காரணத்துக்காக விடுறேன் பொளச்சுப்போ ஹ்ம்ம்” என்று வெறுமனே விட்டுவிட்டான்.

ஆசையாக அர்ஜுன் கிளம்பிப்போக, அங்கே அஹல்யாவும் அர்ஜுனும் வாக்குவாதத்தில் இருந்தனர். “என்னாலெல்லாம் வர முடியாது. நீங்க மட்டும் போயிட்டு வாங்க... நான் அவர் மேல செம கோவத்தில இருக்கேன் தேவையில்லாம என்னையும் கூட்டிட்டு போய் பெருசாக்காதீங்க அப்பறம் நானே கல்யாணத்தை நிறுத்திடுவேன்” என்று பொரிந்து கொண்டிருந்தாள் அஹல்யா.

“ஹே எங்க இருந்துடி இவ்வளவு கோவம் வருது உனக்கு??? கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லா தானே இருந்த ஹ்ம்ம் இந்த பொண்ணுங்களே இப்படி தான் போல அமைதியா இருக்க மாதிரி நடுச்சு ஏமாத்திடுறாங்க...” என்று அவள் கோவத்திற்கெல்லாம் பொறுமையாக பதில் கூறிக்கொண்டிருந்தான்.

“என்ன என்ன இங்க சத்தம் அதுவும் கதவை திறந்து வச்சுக்கிட்டு?” என்று கேள்வியுடனே அறைக்கு வந்தான் அஸ்வத்.

“வாடா வா இப்பதான் உனக்கு வழியே தெரியுதா இந்த பக்கம் வர???” என்று கொஞ்சம் அதட்டல் தோரணையிலேயே வினவினாள் அஹல்யா...

“இங்க வந்து உன்கிட்ட திட்டு வாங்குறதுக்கு அங்கேயே இருக்கலாம்னு தோணிருக்கும்” என்று தன் மச்சினனுக்கு இலகுவாக வக்காலத்து வாங்கினான் அர்ஜுன். பதிலுக்கு அஸ்வத்தும் கரெக்டா சொன்னீங்க மாமா என்று கை தந்து ஆமோதித்தான்.

“ம்ம்ம்ம்.....என்ன காத்து அந்த பக்கம் அடிக்குது....?” என்று ஒரு மாதிரி குரலில் அஹல்யா அர்ஜுனை பார்த்து முறைக்கவும் பதறிக்கொண்டு பாவப்பட்டவன் போல பதில் தந்தான் அர்ஜுன்.

“இல்லையே லியா கையில ஏதோ தூசி அதத்தான் தட்டினே, நீ கைகுடுத்தேனு நினைச்சியா அட மக்கு பயபுள்ள” என்று பல்டி அடித்தான் அவள் கணவன்.

“ஹே என்ன நீ இப்படி மெரட்டுற மாமாவ???” என்று அஸ்வத் பதிலுக்கு வக்காலத்துக்கு வந்தான்.

“எப்பா போதும் போதும் நீங்க மாத்தி மாத்தி சப்போர்ட் பண்ணிகிட்டது.. உன் மாமா நடிக்குறாருடா நம்பாத...”

இப்படியே சிலமணி நேரம் வெட்டியாக நேரம் கழிய, அஹல்யா ஆதி முதல் அந்தம் வரை நவீன் விஷயத்தை கூறி இருந்தாள். பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அஸ்வத்தும் குழம்பிப் போனான். ஆனால் அர்ஜுன் அஹல்யா அளவிற்கு குழம்பி போக விருப்பப்படாமல் “சரி அதெல்லாம் நீங்களே டீல் பண்ணிக்கோங்க... நம்ம படத்துக்கு போகலாம் சீக்ரம் ரெடி ஆகுங்க...” என்று கிளப்பினான்.

“ஏன்டா இவ்வளவு அவசரப்படுற, நீ முன்னாடியே சொல்லிருந்தால் நான் அனுவையும் வர சொல்லிருபேன்ல... இரு அவளையும் கூப்பிடுறேன்” என்று கைபேசிக்கு அழைத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.