(Reading time: 12 - 23 minutes)

05. பூ மகளின் தேடல் - ஜெயஸ்ரீ

ஸ்ரீ வீடு !

காலை பொழுதினை ரசித்து கொண்டு இருந்த குருவிடம் வந்த பிரகாஷ்...

" மாமா, குட் மார்னிங்"

"குட் மார்னிங்.. என்ன விஷயம் சொல்லுப்பா?" அங்கே கோமதி காபியுடன் வர,

Poo magalin thedal

" அத்தை, நீங்களும் இருங்க ஸ்ரீ பத்தி தான் பேச போறேன்... ஸ்ரீக்கு ஒரு வரன் வந்து இருக்கு மாமா... கோயம்புத்தூர்ல பெரிய ஆளுங்க... ஸ்ரீயை அவுங்களுக்கு பிடிச்சிருக்கு... "

" அவுங்களுக்கு எப்படிப்பா ஸ்ரீயை தெரியும்... "

" ஒரு கல்யாண வீட்ல ஸ்ரீயை அந்த பையோனட அப்பா அம்மா பாத்திட்டு இந்த பொண்ணு மருமகளா வந்த நல்ல இருக்கும்னு, விசாரிச்சாங்க.. என் patient தான் அவுங்க..அதுனால தான் உங்க கிட்ட சொல்லலாம்னு வந்தேன்... "

" நல்ல இடம்னு சொல்லுற... மதுரைக்கு போனதும் ஸ்ரீகிட்ட பேசிட்டு சொல்லலாம்"

" சரி மாமா" என்று எழுந்து சென்று விட்டான்... குரு கோமதியை பார்த்து புன்னைகித்தார்...

"இந்த வரன் நல்ல அமைஞ்சா திருப்திக்கு போய் மொட்ட போடணும்னு வேண்டிக்குவோம் ரெண்டு பேறும்" என்று கோமதி சொல்ல..

" நீ சொன்ன அப்பீல் ஏது... "

"ரொம்ப தான்.. " என்று சிரித்து விட்டு சென்றார்... ( ஆனால் இவர்களின் ஆசை நிறைவேறுமா... ???)

ஸ்ரீயின் அறையில்!

அஸ்வினின் போன் அழைப்பில் பதற எழுந்த ஸ்ரீ.. பெட்டில் நேராக அமர்ந்தாள்..

"இட்ஸ் மீ அஸ்வின்"

"..."

"... ஹலோ லைன்ல இருக்கியா..?"

" ஏய் என் நம்பர் எப்படி கெடைச்சது..??"

"மீராகிட்ட இருந்து வாங்குனேன்.. இப்போ அதுவா முக்கியம்... கால் எப்படி இருக்கு... "

"ஹலோ மீரா தந்து இருக்க மாட்டாங்க... நீங்க சுட்டு கால் பண்றீங்க.. கொன்னுடுவேன் இனிமே கால் பண்ணா.. "

" ஏய் என்ன ரொம்ப பேசுற... நீ கடிச்சு வச்சு ரத்தம் வந்து ஊசி போட்டு வந்தவன் கிட்ட ரொம்ப பேசுற... ரொம்ப பேசுன போலீஸ்ல பிடிச்சு குடுத்திருவேன்... "

"பொய் சொல்லுரிங்க... "

" நம்பலியா.. உன் whatsapp பாரு எப்படி அடி பட்டு இருக்கு என்று... " அஸ்வின் மீராவின் லிப்ஸ்டிக் எடுத்து சிறு அடி போல் வரைந்து அதை படம் எடுத்து அவளுக்கு அனுப்பினான்...

" என்ன பாத்தியா... எப்படி செவந்து இருக்கு..."

" ஹையோ சாரி.. நிஜமாவே கடிச்சிடேனா... ஐ ஆம் சாரி சார்.. "

அடிபாவி என்ன சொன்னாலும் நம்புவ போலியே... ப்ச்.. நீ மட்டும் என் பக்கதுல இருந்த உன்ன நான் கடிச்சு வச்சுருபேன்.. என்று மனதுள் எண்ணினான்..

" பரவால... சரி உன் கால் எப்படி இருக்கு... "

" பெயின் கொஞ்சம் இருக்கு சார்.. "

" என்ன இது சார் மோர் சொல்லிக்கிட்டு... கால் மீ அஸ்வின்.... "

" நீங்க என்ன விட பெரியவுங்க.. உங்கள எப்படி பேரு சொல்லி குப்டறது? வேனும்ன மீரா மாதரி குப்டவா... " வேண்டும் என்றே வம்பு இழுத்தாள்...

"ஐயோ தாய்யே.. நீ சார் போடா வாடா என்ன வேணாலும் சொல்லிக்கோ... அண்ணா மட்டும் சொல்லிடாத... "

"ப்ளீஸ் ஒரே ஒரு தடவ அப்படி சொல்ரேனே.. ப்ளீஸ் அஸ்வின் அண்ண." போன் கட் செய்து விட்டான் அஸ்வின்.. இவள நாம மிரட்ட போன் பண்ணா இவள நமளியே மிரட்டி வைக்குறா.. பாதகி.. அண்ணாவாம்.. நம்ம கல்யாணம் முடியட்டும் உன்ன என்ன பண்ணுறேன்னு பாருடி.. பின் மெசேஜ் அனுப்பினான்..

" ஏய் அண்ணா சொல்லாத.. அப்பறம் நீ கடிச்சத எல்லாருகிட்டயும் சொல்லிடுவேன்.."

" ப்ளீஸ் சொல்லாதிங்க.. சாரி நான் அப்படி சொல்ல மாட்டேன்.. "

" அப்படி வா வழிக்கு.. காட் அப் ப்ரொம் பெட்?" ஐயோ இவன் என்ன இப்படி கேட்குறேன்.. மெசேஜ் பண்ணலைன எதாவது செஞ்சு வச்சிட போறான்.. வளந்து கெட்டவன் என்று மனதில் திட்டி கொண்டே பதில் அனுப்பினாள்...

" இல்ல நீங்க..."

" எந்த்ரிகல... சரி.. உன்ன பார்க்கணும்.. பேசணும்... வீட்டுக்கு வரியா.. இல்ல வெளில எங்கயாச்சும் மீட் பண்ணலாம்.. "

" நான் எதுக்கு உங்கள மீட் பண்ணனும்??"

" சும்மா தான்.. உங்கிட்ட பேசணும்.. "

" சும்மா மெசேஜ் பண்ணுங்க... நேருல எல்லாம் வர முடியாது.. "

"ஏன்?"

" நீங்க யாரு.. நான் எதுக்கு உங்கள மீட் பண்ணனும்.. சும்மா தேவை இல்லாம மெசேஜ் பண்ணாதிங்க... உங்கள கடிச்சதுக்கு சாரி.. இதுக்கு மேல போய் யாருகிட்ட வேணாலும் சொல்லுங்க.. பாய்" என்று சொல்லி விட.. அவனுக்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது... இவாள பேசுனா பேசுவோம்.. ரொம்ப பேசுற... பதில் பேச கூடாது... ப்ச் உன்ன பாக்கமா இருக்க முடியலடி.. உனக்கு என் மேல லவ் இருக்கு.. ப்ச்.. நானா உங்கிட்ட பேசவே மாட்டேன்.. நீயே பேசு... என்று மனதில் எண்ணிய வண்ணம் அவளின் profile பிக் கிளிக் செய்து பார்த்தான்.. அதில் அவள் ரூமில் அவள் கரடி பொம்மையுடன் எடுத்து போட்டோ போட்டு இருந்தாள்.. அதை பார்த்து... மிஸ் யு ஸ்ரீகுட்டி.. என்று முத்தம் கொடுத்தான்.. பிறகு போன் பெட்டில் போட்டு விட்டு குளிக்க சென்றான்..

ரொம்ப நேரம் பதில் வராமல் போகவே...

ஸ்ரீ மனதிலே வருந்தினாள்... கண்டிப்பா நீங்க பேசமாடிங்கனு தெரியும் அஸ்வின்.. ஐ ஆம் சாரி.. என்னனு தெரியல... என் மனசு தடுமாறுது.. உங்க கிட்ட பேசணும்.. பாக்கணும்.. நீங்க நேத்து என்ன அன்பா பாத்துகிட்ட மாதரி லைப் முழுக்க உங்க கூட மனசு வாழ ஆசை படுது.. பட்.. ஐ கான்ட் அஸ்வின்... இப்போதிக்கு எங்க அண்ணா கல்யாணம் தான் எனக்கு முக்கியம்.. விதி இருந்தா ரெண்டு பேறும் சேரலாம் இல்லனா செத்து போய்டுறேன் அஸ்வின்... ( அட கிறுக்கு புள்ள... நீ எவ்ளோ சொன்னாலும் தேற மாட்ட.. அஸ்வின் உன்ன எப்படி ஆட்டி படைக்க போறாரு பாத்திட்டே இரு!!)

இவள் இவ்வாறு எண்ணி கொண்டு இருக்க..

" தூங்கி எந்த்ரிசிட்டிய... கால் வலி எப்படி இருக்கு?"

"ஆங்... எந்த்ரிசிட்டேன் அம்மா.. பெயின் இல்ல.. "

" கீழே வா.. காபி தரேன்.. உனக்கு நல்ல ராசி ஸ்ரீ.. "

" எதுக்கு அம்மா அப்படி சொல்லுரிங்க?"

"எதுக்கு சொல்ல்ரேனா... சூப்பர் மாப்பிள்ளை.. ரொம்ப வசதி.. நீ குடுத்து வச்சவ... "

" ப்ச் அம்மா... இப்போ எனக்கு கல்யாணம் வேணாம்"

" அடி பிச்சிடுவேன்,,, இந்த இடம் அமையணும்னு நான் ரொம்ப வேண்டிடு இருக்கேன்... "

" ப்ச்"

" நீயும் வேண்டிக்கோ.. எந்தரிச்சு வா கீழே... "

ஐயோ என்ன இது.. இப்படி சொல்லுறாங்க.. இப்போ என்ன பண்ணுறது... என்று புலம்பி கொண்டு இருந்த நேரம் அவளது போன் அடித்தது...( போன் பண்ணது நம்ம கார்த்திக் தாங்க.. வாங்க எதுக்கு போன் பண்ணுராருனு பாப்போம்)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.