13. காதல் நதி என வந்தாய் - வினோதா
மனதில் இருந்ததை உளறிக் கொட்டி விட்டதை உணர்ந்துக் கொண்டு உதடுகளை கடித்துக் கொண்டாள் பிரியா.
அவள் மனநிலையை புரிந்துக் கொண்டவனாக, அமைதியாக அவளின் கேள்விக்கு பதில் சொன்னான் விக்கிராந்த்
"நிறைய வேலை பென்டிங்குல இருந்தது பிரியா! வீட்டுக்கு போன உடனே வேலையை ஆரம்பிச்சுட்டேன்! சாரி, அதனால தான் மெசேஜ் அனுப்ப லேட்டாச்சு!"
அத்தனை வேலையை விட்டுவிட்டு அவளுக்காக வேலை மெனக்கெட்டு எவ்வளவு தூரம் வந்திருக்கிறான்!
முன் தின மாலையில் அவளின் ஆட்டோவை அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
"நல்ல மார்க்ஸ் இருக்கே, வேற எங்கேயும் வேலை செய்யலையா இவங்க?"
"ரொம்ப டீடெயில்ஸ் தெரியாது மேம், எனக்கு தெரிஞ்சவங்க மூலமா வந்த ரெஸ்யூம்"
ஜெயந்தி ஆச்சர்யத்துடன்,
"நீ ஒரு ரெஸ்யூம் கொடுப்பதே அபூர்வம், அப்படி ஹெல்ப் செய்யணும்னு நினைக்குற அளவுக்கு யார் இது?" என்றாள்.