11. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா
தன்னை பற்றியிருந்த கையை மெல்ல விடுவித்தவன்.. மற்றவர் அருகில் வரவும் ரகுவுடன் இனைந்து நின்று கொண்டான்..
யார் கண்ணுக்கும் தெரியாதது போல் அவன் செய்தாலும் ஸ்வேதாவின் கண்களுக்கு அது தப்பவில்லை..
ஏற்கனவே இந்த இரண்டு நாட்கள் நடந்த குளறுபடியால் கொஞ்சம் குழம்பி பொய் இருந்தவள். இதை கண்டு மேலும் குழம்பி தான் போனாள்.
ஒரு வேளை அவன் சொன்னது சரி தானோ? இவள் தான் ஆதியின் மேல் அசைக்க முடியாது காதல் தனக்கு உள்ளது என எண்ணி கொள்கிறாளோ? உண்மையில் அது வெறும் ஈடுபாடோ? காதல் கத்திரிக்காய் என்று ஒன்னும் இல்லை என அவன் சீறி விட்ட சென்றது கண் முன்னே வந்தது. தன்னையும் அறியாமல் அவன் கோவத்தை எண்ணி இள நகையை இதழ்களில் தவழ விட்டாள்.
மறுகணமே திகைத்து நின்றாள். 'என்னது இது எனக்கு நிச்சயம் முடிந்து விட்டது இப்போது போய் இப்படி' என நினைத்தவாறு ஆதியை பார்க்க அவன் மதுவை குறும்போடு பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘உனக்கு மட்டும் இல்லை அவர்கள் இருவருக்கும் கூட தான் நிச்சயம் முடிந்து விட்டது’ என மனசாட்சி ஓங்கி குட்டு வைக்க.தெளியாத மனதை மீண்டும் குழப்ப வேண்டாமென. அவளும் சிந்தனையை ஒதுக்கி மற்றவருடன் இனைந்து கொண்டாள்.
ரகுவுடன் ஆதியை அதுவும் ஏதோ பல வருடமாக பழகும் நண்பர்கள் போல பார்த்தவுடன் தான் மதுவிற்கு எதுவும் விளங்காமல் போயிற்று
அதுவும் அன்று அவளை உதாசீன படுத்திவிட்டு இன்னொருத்தியை கல்யணம் பண்ணி கொள்ள சம்மதம் தெரிவித்தவன் இன்று அவள் அருகில் வந்து கை பற்றி குறும்பு பார்வை வீசவும் குழம்பி தவித்து போனாள்.
ரகுவிடம் கேட்டால் சொல்லி விடுவான் பிறகு பார்க்கலாமென அவளும் விட்டு விட்டாள்.
அனைவரும் பட்டாசு வெடித்து ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டிருக்க, பிரகாஷ் வந்து சேர்ந்தான்.
அவனை பார்த்ததும் ஏனோ மது ஆதி இருவருமே கை பொம்மையை தொலைத்து விட்ட குழந்தையை போல் ஆனனர். ஆனால் ரகு, ஆதியிடம் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லவும். அவன் சற்று தெளிவடைந்தான்.
மதுவிடம் நேராக வந்தவன், அவள் அழகில் மயங்கி நின்றான். அதை கண்டு எரிச்சலான ஆதி அங்கிருந்து சென்று விட, திவாக்கர் அவனை வரவேற்கவும் மதுவும் ஒப்புக்கு "வா.. வாங்க" என்று விட்டு சென்றாள்.
அவளது அந்த ஒற்றை சொல்லே அவனுக்கு போதுமாக இருக்கவும் புன்னகையுடன் உள்ளே சென்றான். பெரியவர்கள் அனைவரும் தோட்டத்தில் இருந்து வர, அவனுக்கு தடபுடலாக உபசாரம் நடந்தது.
பின் சிறிது நேரம் பேசி விட்டு எழுந்தவன், குடும்பத்துடன் ஊட்டி வரை செல்வதாக சொல்லி விட்டு சென்றான். போகும் பொது நின்று மதுவை ஒருமுறை பார்த்தவன் விழிகள் தானாக ஆதியையும் தழுவி சென்றது.
ஒருவாறு மதியம் வரை ஆடி முடித்து களைத்து, அனைவரும் வந்து அமர,அவர்களுக்கு ஜூஸ் போட்டு லலிதா திவ்யா ரஞ்சினி மூவரும் அனிவருக்கும் கொடுக்க அதை குடித்து சற்று இளைப்பாறி விட்டு அனைவரும் சரண்ராஜ் வீட்டிற்கு செல்ல தயார் ஆனார்கள்.
பெரியவர்கள் அனைவரும் மகேஷின் தவேராவில் ஏறிக்கொள்ள...
திவாக்கர் தன் இன்னோவாவில் தன்யா,ஸ்ரீகாந்த், ஆராதனா மற்றும் இரண்டு வாண்டுகளையும் ஏற்றி கொண்டான்..
ஸ்வேதா அவர்கள் வந்த ஐ20 எலைட்டை ஓட்ட, கற்பகம், ரகு,மேகா மூவரும் ஏறி கொண்டனர்.
ரகு தன் சார் சாவியை ஆதியிடம் கொடுத்து விட்டு, "என்ஜாய் மேன்" என்று அவன் காதில் கிசுகிசுத்து விட்டு சென்றான்
தன் வசீகரமான புன்னகையுடன் அவளுக்க முன் பக்க கதவை திறந்து அவள் ஏறி அமர்ந்ததும் அதே புன்னகையுடன் வண்டியை எடுத்தான்.
மற்ற மூன்று கார்களும் முன்னே செல்ல கொஞ்சம் இடை வெளி விட்டு பின்னே சென்றது ஆதியின் கார்.
யோசனை முடிசுகளுடன் அமர்ந்திருந்தவளை அடிகடி பார்த்த வண்ணம் அவன் காரை செலுத்த.. அவள் அவன் பார்வையை உணர்ந்து திரும்பி அவனை பார்த்தாள்.
கோவம் தான் வந்தது அதையும் மீறி சுய இறக்கம். சட்டென பார்வையை திருப்பி கொண்டாள்.
அவள் மனதில் இன்னமும் தான் இருப்பது உறுதியாக தெரிந்த படியால் அவனும் பேசாமல் ஏதோ நினைவுகளை அசை போட்டபடி வந்தான்.
சிறு நேர மௌனத்திற்கு பின், அவன் பாட்டை ஒலிக்க விட..
தனக்காகவே எழுதியது போல அந்த பாடல் ஒலித்தது... இதுவும் ரகுவின் ஏற்பாடோ என்ற எண்ணத்தில் புன்னகை இன்னும் பெரிதானது...
விளையாட்டாக பாடலை ஒலிக்க விட்டவன், பாடல் வரிகளின் தாக்கத்தில்.. சிறு குரலில் அவனும் சேர்ந்து பாட.. அந்த வரிகளின் தாக்கத்தில் மதுவும் கண் மூடி அமர்ந்திருந்தாள்.
நெஞ்சே நெஞ்சே காதல் நெஞ்சே
என்னை நீ தான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மலை துளி எங்கே
தூரம் நின்று நீ என்னை கொள்ளாதே
வெறும் பூவும் வேர் என்று சொல்லாதே
காதல் அருகே இல்லை
அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தா போனேன்
இறந்தா போனேன்
வருவேன் ஓர் தினமே
பூவை தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டு போகாதே
உந்தன் மனம்தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
பாடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் பொது
பூவே உந்தன் புடவை தோழி ….
வரிகளில் மூழ்கியவன் என் மனதை சொல்லி விட்டேன் என்பது போல் நிறுத்தி அவளை பார்க்க...