" நிஜம்மாவா தாத்தா சொல்றிங்க? " என்றான் ரகுராம் ..
" வள்ளி ....."
" என்னங்க ...."
" உன் பேரப்புள்ளைங்க என்ன கேட்குறாங்க தெரியுமா ? " என்று பெண்கள் இருந்த பக்கம் குரல் கொடுத்தார் வேலு தாத்தா ..
" என்ன ? "
" உனக்கு எசப்பாட்டு பாடத் தெரியுமான்னு கேட்குறாங்க "
" அப்பு, இதை நீங்கதான் கேட்டிங்களா ? இல்ல உங்க அய்யா பொழுது போகாமல் என்னை வம்புக்கு இழுக்குறாரா ? "
" ஆமா ... இவ என் அத்தை பொண்ணு .. இவளை வம்புக்கு இழுக்குறதுதான் என் பொழப்பு " என்று அலுத்து கொண்டார் தாத்தா ...
" காலம் போன போக்கில உங்க தாத்தாவுக்கு ஆசைய பார்த்தியா ? " என்று தாத்தாவை செல்லமாய் முறைத்தார் தாத்தா ...
" நாங்கத்தான் கேட்டோம் பாட்டி .. பாட்டு மூலமாகவே ஆணும் பெண்ணும் பேசிக்குவிங்கன்னு தாத்தா சொன்னாரு ... அப்படியா ? " - அர்ஜுனன் ..
" ஆமா கண்ணு .. ஆனா என் நேரம் .. உங்க தாத்தாவை பார்த்து பாடுறதுக்கு முன்னாடியே என்னை அவுகளுக்கு கட்டி வெச்சுட்டாங்க .. இல்லன்னா நாங்களும் ஜாடை மாடையா பாடி இருப்போம் " என்று ரசித்து சொன்னார் பாட்டி ...
" அதுகென்ன அத்தை இப்போ பாடுங்க .. நாங்களும் கேட்போம்ல " என்றார் சிவகாமி ...
" சும்மா இரும்மா .. என் பேரன் பேத்திக்கே கல்யாணம் ஆகப்போகுது .. இப்போ போயி நாங்க எசப்பாட்டு பாடிக்கிட்டா நல்லாவா இருக்கும் ? "
" இதில் என்ன இருக்கு அத்தை .. காலம் சீக்கிரம் ஓடினா பாசம் மாறனுமா இல்லை அதை காட்டத்தான் தவிர்க்கனுமா ? " - அபிராமி
அப்போதும் பாட்டி தயங்க
" அட இவ ஒருத்தி .. எல்லாத்துக்கும் யோசிப்பா ... நானே ஆரம்பிக்கிறேன் " என்று தொண்டையை செருமிக் கொண்டு பாடத் தயாரானார் தாத்தா ... ( இந்த பாடல் வரிகள் அனைத்தும் கற்பனையே .. இதுக்கு பேருதான் உங்க ஊருல எசப்பாட்டானு எனக்கு வசைப்பாடிடாதிங்க .. ஹா ஹா )
" தென்னந்தோப்பினிலே பாய் பின்னி போறவளே
என் நெஞ்ச உன்னோடு பின்னி கொண்டு போறவளே
மாமன் காத்திருக்க பார்க்காம போறவளே
மயங்கி கெடக்குதடி உன்னை பார்த்த என் மனசு " - தாத்தா
" மயங்கி கெடக்கும் உங்க மனசுக்கும் சொல்லிடுங்க
அத்தை மகளை உரசும் பார்வைக்கும் சொல்லிடுங்க
தனியா போறவளை தெவிட்டாம பார்த்திங்கன்னா
மனசு தவிக்குமய்யா ஊரும் வம்பு பேசுமய்யா " - பாட்டி
" தவிக்கும் மனசுக்கு மாமன் துணை இருக்க
ஊரு வம்புக்கு உறவும் பதில் கொடுக்க
வாரேன் சீக்கிரமா நானும் உன்பின்ன
போவோம் ஆத்துப்பக்கம் போடி நீ முன்ன "- தாத்தா
" மாசம் பொறந்துருச்சு மாசியும் வந்துருச்சு
மஞ்ச கயிறு தந்தா கூடவர மனசிருக்கு
வம்பு பேசமா கண்ணாலம் பேசி
கைய நீங்க புடிச்சா மாட்டேன்னா நான் சொல்வேன் ? " - பாட்டி
" நீ சொன்ன வார்த்தையில மாமன் மனசு நிறைஞ்சிடுச்சு
உன்கைய நான் புடிக்க ஆசை இன்னும் கூடிருச்சு
ஒத்தையடி பாதையில ஒய்யாரமா போறவளே
தேதி தான் பார்த்து தாலியோடு நான் வாரேன் " - தாத்தா
" மச்சான் சொன்னதிலே என் மனசு நிறைஞ்சிடுச்சு
மாமன் நெனப்பிலேயே மல்லிகையும் மலர்ந்துருச்சு
அத்தமவ ராத்திரியில் பௌர்ணமியும் வந்துடுச்சு
உன்ன நான் சேரும் காலம் மெல்ல கூடிருச்சு "- பாட்டி
இப்படியாய் தாத்தாவும் பாட்டியும் காதல் வசனங்களை பாடலை பாடி அனைவரையுமே ஆச்சர்யப்படுத்தினர் ... அதே நேரம் நம்ம ஜூனியர்ஸ் ரொம்ப பாவம்னு நெனைச்ச தாத்தா மறுநாளே அவங்க எல்லாரும் பேசிக்கிறதுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடிவு பண்ணாரு .... ஆனா அதுவரை அமைதியாய் இருக்க நம்ம ஹீரோஸ் எல்லாரும் சமத்து இல்லையே ..... அன்றிரவு,
" ஜானு .... ஜானு "
" என்ன பேராண்டி.... ரொம்ப கோவமா என் பேத்தியை கூப்பிடுற மாதிரி இருக்கு ? "
" அதில்ல பாட்டி .. என்னோட சார்ஜரை காணோம் "
" உங்க தாத்தா செல்போனுக்கு போடுறது அங்கதான் இருக்கு அதை எடுத்துக்கோ "
" ஐயோ பாட்டி எல்லாம் போனுக்கும் ஒரே சார்ஜர் போடா முடியாது .. "
" அப்படியா ராசா.... ஜானும்மா இங்கதான் இருந்தா .... ஜானு .. ஜானு "
" இதோ வந்துட்டேன் பாட்டி " என்று உடனே ஓடி வந்தாள் ஜானகி ..
" அடிப்பாவி இங்க ஒருத்தன் தொண்டை தண்ணி வைத்த கத்தி கூப்பிட்டா கண்டுக்கவே இல்ல .. இப்போ பாட்டி கூப்பிட்டதும் உடனே வர்றியா ? " என்று மனதிற்குள்ளே முனகினான் ரகுராம் ..
" கூப்பிட்டிங்களா பாட்டி ? "
" நான்தான் கூப்பிடேன் ஜானு " - ரகுராம்
" நான் உங்க தாத்தாவுக்கு சமையல் ரெடி பண்ணுறேன் பா " என்று அங்கிருந்து நகர்ந்தார் பாட்டி ..
" என் சார்ஜர் எங்க ஜானு ? "
" என்னை கேட்டா ? "
" அடிப்பாவி நேத்து நீதானே யூஸ் பண்ணின? "
" ஆமா ஆனா உங்க ரூமிலேயே வெச்சிட்டேனே ? "
" நான் நல்ல தேடி பார்த்துட்டேன் அங்க இல்லை .. அச்சோ இல்ல ராம் அங்கதான் வெச்சேன் "
" அப்போ நான் பொய் சொல்றேன்னா ? "
" இப்போ நான் அப்படி சொன்னேனா ? "
" அப்போ வேற எப்படி " என்றவன் அவள் கண்களை ஊடுருவ,
" ஷாபா உங்க தொல்லை தாங்களே ... இருங்க நானே எடுத்து தரேன் " என்று அவனது அறைக்குள் நுழைந்தாள்..அறையில் நுழைந்தவளின் பார்வை பதிந்தது கட்டில் மேல் தான் .. கட்டிலின் மேல் இருந்த சார்ஜர் அவளை வரவேற்க, இடுப்பில் கை வைத்து கொண்டு கோபமாய் திரும்பினாள் ஜானகி ..