"மம்ஸ் இருங்க, இந்த வேலையை நாளைக்கு முடிக்கிறேன்" என்றபடி லேப்டாப்பை மூடி வைத்த விக்கிராந்த்,
"இங்கே உட்காருங்க மம்ஸ்" என்றான்.
ராஜம் கட்டிலில் அமர்ந்த அடுத்த நொடி அவளின் மடியில் படுத்து கொண்டான்.
"டேய் இன்னும் இரண்டு மூணு நாளில் கல்யாணம் இது என்ன இப்படி சின்ன குழந்தை போல?"
கடிந்து கொள்வது போல் பேசினாலும் ராஜமின் கரம் மகனின் தலையை பாசத்துடன் வருடியது.
"நீ இப்படி சின்ன பையன் மாதிரி நடக்க கூடாது விக்கி. பிரியா நல்ல பொண்ணு இருந்தாலும் கூட... இப்போ வர்ஷாவை பாரு எப்படி பெரிய மனுஷி போல நடக்குறா?"
"பொண்ணுங்க எல்லாம் அப்படி தான் மம்ஸ் அம்மா அப்பா மேல பாசமே கிடையாது. கல்யாணம் ஆன உடனே, அது தான் என் குடும்பம்னு செட்
...
This story is now available on Chillzee KiMo.
...
, நீயும் எனக்கு மகள் போல, விக்கியை உன் கையில முழு மனசோட ஒப்படைக்கிறேன். அவன் உன்னை நல்லபடியா பார்த்துப்பான், நீயும் அவனை நல்லபடியா கவனிச்சுக்கோ... நாங்க மதுரையில செட்டில் ஆகிடலாம்னு இருக்கோம். வர்ஷாக்கு மட்டும் நல்ல வரனா பார்த்து முடிச்சா, கடமை எல்லாம் முடிஞ்சிடுச்சுன்னு ப்ரீயா இருக்கலாம்..."