13. மௌனம் எதற்கு? - ராசு
உமாவிற்கு தன்னை நிதானப்படுத்திக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அவர்களின் காரின் பின்னே வாகனங்கள் வரிசை கட்டி நின்று ஒலியெழுப்பின. ஏதோ செலுத்தப்பட்டவள் போன்று தானே டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்ட ஆரம்பித்தாள். சிவனேஸ்வர் அவள் லாவகமாக கார் ஓட்டுவதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு கார் ஓட்டத் தெரியும் என்பதே ஆச்சர்யமாகயிருந்தது. ஆனால் முகம் கடினமுற அமைதியாக அமர்ந்து சாலையில் கவனம் செலுத்தியிருந்தாள். காரை எப்படி செலுத்தினாள் என்றே அவளுக்கு தெரியவில்லை. தங்கள் பங்களாவிற்கு வந்த உடன் காரை நிறுத்தியவள் அவனை திரும்பியும் பாராமல் உள்ளே சென்றுவிட்டாள்.
உள்ளே சென்று வேறு ஒரு அறைக்குள் நுழ
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதிரியே வேறு இரண்டு பேரும் அப்போது அங்கே வந்தார்கள். அந்த இரு நாய்களில் ஒன்று அமைதியாக நின்று கொண்டிருந்தது. மற்ற ஒன்று துறுதுறுப்புடன் வழி தேடி அலைந்தது. தன் முகத்தால் தள்ளி கேட்டை திறக்க முயன்றது. மண்ணைக் கிளரி வழி தேட முனைந்தது. அது எப்படிதான் வெளியே செல்லப் போகிறது என்ற ஆவலுடன் நின்றனர்.