14. மௌனம் எதற்கு? - ராசு
“ஈஸ்வர்! ஈஸ்வர்!” என்று கதறிய உமாவின் கைகள் மூச்சுக்காற்றுக்காய் அலைபாய்ந்தன. அவளின் குரல் அந்த ஈஸ்வரனுக்கு கேட்டது போலும். சட்டென்று அவள் கண் முன்பு அவன் கைகள் தென்பட பற்றிக்கொண்டாள். அவன் கைகளை தன் மார்போடு அணைத்துக்கொண்டவளுக்கு சொல்லொவொணாத நிம்மதி கிடைத்தது.
அவளின் குரலில் திடுக்கிட்டு எழுந்திருந்த சிவனேஸ்வர் பதறிப் போனான். அவன் பார்க்கும்போது அவள் மூச்சுத் திணறுவது போல் துடிப்பதுடன் கைகளும் அலைபாயவே அவள் என்ன சொல்லிக் கூப்பிட்டாள் என்பதை சரியாக கவனிக்கவில்லை. அவனின் உள்மனம் தூண்ட அவன் உமாவின் கைகளைப் பற்றிக்கொண்டான். ஆனால் அதன் பிறகு அவள் நடந்துகொண்ட விதம் அவனுக்கு ஏனோ பரவசமாக இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ைனில் இருக்கியா இல்லையா?”
“ம். இருக்கேன்.”
“நான் யார் பேசறதுன்னு தெரியுதா?”
“தெரியுது.”
“நல்லது. உன்கிட்ட நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். சரியா ஒரு வருசம்தான். அதற்குப் பிறகு பிரியப் போறோமே என்று அவரைக் கவனிக்காமல் விட்டுவிடாதே. நல்லா பார்த்துக்கனும் சரியா.”