16. மௌனம் எதற்கு? - ராசு
மோகனாவை பேசி அனுப்பிவிட்டு கிளம்பும்போது சிவனேஸ்வர் உமாவைப் பார்த்துவிட்டான்.
‘என்னையே வேவு பார்க்கிறாளா?’ அவளின் செயல் ஒருபக்கம் கோபத்தை வரவழைத்தது.
‘பரவாயில்லையே! என்னைப் பற்றிய அக்கறை இவளுக்கு இருக்கிறதா?’ என்று மறுபக்கம் சந்தோசமும் வந்தது.
தன் உணர்வுகளை அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உமாவும் அவனை அங்கே எதிர்பாராததால் திகைத்து விழித்தாள். அவளின் திகைப்பை ரசித்தவாறே அவளருகில் சென்றவன் தன் கைகளை நீட்டினான். தயங்கிக்கொண்டே அவன் கைகளைப் பற்றினாள். அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுத்த கெடு ஒரு வருடம்தானே?’
“என்ன சொல்லு.” மீண்டும் அழுத்தமுடன் கேட்டான்.
“நான் சம்பிரதாயம் சட்டம் இரண்டையும் மதிக்கிறவ.”
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை.”
“இல்லைதான். சட்டப்படி உங்களை பிரியற வரைக்கும் சம்பிரதாயப்படி உங்களுக்கு மனைவியா நான் இருப்பேன்.”