17. மௌனம் எதற்கு? - ராசு
உமாவிற்கு ஊருக்கே போகப் பிடிக்கவில்லை. அவளின் மனமறிந்தோ என்னவோ அவளின் கால்களும் தன் செயல்பாட்டினை நிறுத்த ஆசைப்பட்டன. ஆனால் சிவனேஸ்வரா விடுவான். தயங்கிய அவளை தன் கைப்பிடியில் இழுத்துக்கொண்டு விரைந்தான். பின்னிய கால்களை எடுத்துவைக்க சிரமப்பட்டவள் அவனின் தூண்டுகோலால் நடந்தாள்.
“இந்தா! குளிச்சுட்டு இந்த டிரஸ்ஸைப் போட்டுக்கோ.”
அவன் நீட்டிய உடையைப் பார்த்தாள். ஒரு சுடிதார். அவளுக்குக்கென்றே பொருத்தமாய் தோன்றிய அந்த உடையை அவன் எப்போது எடுத்திருப்பான்? அவளுக்குத் தெரியவில்லை. உமா விதவிதமாக ஆடைகள் மற்றவர்க்கு தைத்து கொடுத்திருக்கிறாள்தான். ஆனால் அவள் எந்த நவநாகரீக ஆடையையும் இதுவரை அணிந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ூடாதா?” பயந்த குரலில் கேட்டான் சிவனேஸ்வர்.
“எதை?” புரியாமல் பார்த்தான் ரங்கநாதன்.
“அதான் உங்க பொண்டாட்டிகிட்ட அடி வாங்கறதை. நானே இப்பதான் கல்யாணமானவன். ஏதோ கொஞ்ச நாள் சந்தோசமா இருந்துட்டுப் போறேனே. என் பொண்டாட்டியும் இதை கத்துக்கிட்டான்னா என்ன பண்றது?” கவலைக் குரலில் கேட்டான்.