(Reading time: 4 - 7 minutes)

01. கல்யாணம் முதல் காதல் வரை - 01 - சஹானி 

ந்த வீடே கலகலப்பும் சுறுசுறுப்பும் துருதுருப்புமாய் இயங்கி கொண்டிருந்தது .ஆம் அந்த வீட்டில் விஷேசம் . திருமண வைபவம்.  சென்ற வாரங்களில் எல்லாம் யாராவது '' இன்னும் ஒரு வாரத்தில் உன் வீடு இப்படி கலை கட்டும் ''' என்று சொன்னால் நிச்சயம் அந்த வீட்டில் உள்ளவர்கள் கை கொட்டி சிரித்து இருப்பார்கள் . 

அன்று ,

எவன்டா ப்ரண்டு , எவன்டா ப்ரண்டு ,,....

Kalyanam muthal kathal varaiஎன்ற பாடலை ஹம்மிங் செய்தவாறு வீட்டினுள் நுழைந்தாள் அவள் திவ்யா . வாயிலில் புதிய செருப்பை கண்டவள் எதோ ஒரு புயல் வந்திருக்கு என்று எண்ணி கொண்டே நுழைந்தாள் .

ஓஓ........

ஒரு தென்றல்

புயலாகி வருதே .... என்று அடுத்ததோர் பாடல் வாயில் நர்த்தனம் ஆடியது.  

(நொடிக்கு நொடி பாட்ட மாத்திர திறமைய  நாம இவ கிட்ட தான் கத்துக்கணும் )

சிறிது நேரத்தில் அது புயல் அல்ல பூகம்பம் என்று அவளுக்கு தெரிந்து விட்டது .

மதினி, என்னைய தெரியுதுகளா , என்று பவ்யமாய் ஒரு குரல் .

நெற்றி பொட்டை சுருக்கி வலக்கையை அதன் மேல் கொடுத்து யாராய் இருக்கும் என்று யோசிக்க தொடங்கினாள் அந்த மதினி ச்ச ரஞ்சிதம்

அட, நான்தான்  கீழ வீதி ரங்கன் மகள் சுந்தரி என்று தன்னை நினைவு படுத்த உதவினாள் . 

அட ஆமாம் , பாத்து எம்பூட்டு வருஷம் ஆச்சு எப்டி இருக்க சுந்தரி , என்ன இங்கிட்டு இந்த பக்கம் ஏதானும் சோழியா வந்தியா ... இது தான் ரஞ்சிதம் வளவளா கொலகொலா இல்லாமல் பட்டென்று விசயத்திற்கு வருபவள் 

(ஆமாம் , அவங்களுக்கு அவங்க சீரியல் மிஸ் ஆகுதேன்னு கவலை)

அட என்ன மதினி , உம்ம பாக்க நா வர கூடாதா , அது சரி இந்த வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்காமே போன வாரம் தான் என் தம்பி பொண்டாட்டி வந்து பாத்தாளாமே , நீங்க கூட இப்போ வேண்டான்னு சொல்லிட்டதா , அவ வந்து போலம்புனா , அதான் ஒரு எட்டு பாத்து புட்டு  பையன பத்தி ஒரு நாலு வார்த்த  நல்லதா சொல்லலாம்னு  இவங்கள அழைச்சிட்டு வந்தா இங்க  நீங்க , அது சரி சந்தியா யாரு உன் பேத்தியா , என்று கூற 

அதற்குள் திவ்யாவின் தாய் அடுக்களைக்குள் ஓடி சூடாக டீயும் கொறிக்க பலகாரமும் எடுத்து வந்தாள் . 

அவளை கண்டு சிநேகமாய் புன்னகைத்தவள் , 

மதினி , உன்ன என்  அஞ்சு தம்பிகள்ள ஒருத்தனுக்கு எடுக்கணும்னு எங்க அம்மாக்கு ஆசை, 

அட கூறு கெட்டவளே ஏன், இன்னும் ஒரு பத்து வருசத்துகப்ரம் வந்து சொல்லேன் இத என்று அவள் நொடிக்க 

ஹாலில் இருந்த திவ்யாவும் அவள் அன்னை மேகலாவும் வாய் மூடி சிரித்தனர் .

அவர்களை ஒரு கணம் பார்த்த மற்றவர்கள், பார்வையில் அடங்கினர்.

அப்புறம் எம்மவள , உன் மவனுக்கோ இல்ல உங்க அக்கா தங்கச்சி மகன்களுக்கோ கட்டி கொடுக்கணும்னு நெனச்சேன் , எங்க, இந்த மனுஷன் விட்டா தானே,

இதை கேட்டதும் மேகலாவின் சிரிப்பு சுவிட்ச் போட்டதை போல சட்டென்று நிற்க இப்போது திவ்யாவும் பாட்டியும் சிரித்தனர். 

அது கெடக்கட்டும் கழுத நீ என்ன சோழியா வந்த ... பாட்டி தான் .

போன வாரம் என் இன்னொரு தம்பி பொண்டாடி சரசு  வந்தாளாமே,

என்று எடுத்து கொடுக்க மேகலாவின் முகத்தில் பல்ப் எறிந்தது . அட நாம கூட நம்ம கணவர்ட்ட நல்ல இடம் விட வேண்டாம்னு சொன்னோமே,இவங்களும் அந்த இடத்த பத்தி தான் பேசறாங்களா , என்று அதி விரைவாக அடுக்களைக்குள் சென்றாள்.  பாயாசம் செய்ய.  போகும் வழியில் திவ்யாவிடம் சந்தியாவை ரெடி ஆகி வர சொல்லவும் அவர் மறக்க வில்லை. ( நீங்க அக்மார்க் அம்மானு ப்ரூப் பண்றிங்க மா)

ஆனா என் தம்பி  மவனுக்கு தான் உன் பேத்தினு கடவுள் முடிவு பண்ணிட்டார் இனி பேச என்ன இருக்கு சட்டு புட்டுனு கல்யாண வேலைய பாக்க வேண்டிதான் என்று அவர் கறாராக முடித்துவிட்டார் . 

இந்தம்மா பாட்டுக்கு வந்து ஆதிகால கதைய பேசி இப்போ உனக்கு ஆப்பு  வச்சதும் இல்லாம ஆடர் போடறத பாதியா சந்து ,  -திவ்யா

அவளை ஸ்ஸ்ஸ் , என்று அடக்கிய சந்தியா பதுமையாக அவர்கள் முன் மிளிர்ந்தாள். 

சுந்தரி மா பேசுனதையே கவனிச்சிட்டு இருந்த  நான் மத்தவங்கள இன்ட்ரோ பண்ணாம விட்டுட்டேன் வந்தவங்கள அடுத்த எபிசோடுல வரவேற்களாம் அதுவரை... காத்திருப்போம்

தொடரும் . . .

Episode # 02

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.