(Reading time: 53 - 105 minutes)

12. நகல் நிலா - அன்னா ஸ்வீட்டி

ன்று ஒரு செவ்வாய்கிழமை. அவிவை ஸ்கூலுக்கு அனுப்பவில்லை நல்லிசை. அதே நேரம் தன்னோடும் அவனை அழைத்துக் கொள்ளவில்லை. சர்வன் வீட்டில் விட்டுவிட்டு அந்த ஆர்ஃபனேஜுக்கு கிளம்பிச் சென்றாள்.

“நான் எப்பவுமே அலர்ட்டா இருக்கனும் லில்….வெளிய வர ரெண்டு வழியாவது இல்லாத இடத்துக்கு நான் போறது ரிஸ்க்….சந்தேகப்படுற மாதிரி  யார் உள்ள வர்றத பார்த்தாலும் நான் உடனே வெளிய வந்தாகனும்…. இருக்ற இடத்துல இருந்து மூவ் பண்ணவோ ஹைட் பண்ணவோவாது முடியனும்…. எப்பவும் நம்ம சுத்தி இருக்ற எல்லோரையும் வாட்ச் பண்ணிட்டே இருந்தாகனும்….அதனால தான்  ஹோட்டல்ஸ் போறதுக்கே கூட எனக்கு பெர்மிஷன் கிடையாது…….அங்க நம்ம நீல்க்ரீஸ்னா அங்க இங்க மூவ் ஆக முடியுமே அதான் வந்தேன்…. 24 அவர்ஸ்ல எப்ப வேணாலும் அந்த மாஃபியா கேங்க் என்னை அட்டாக் செய்யலாம்…. அதனால  இப்டித்தான் இருந்தாகனும்…. சோ ஓபனா உன்கூட அக்கம்பைன் செய்ய முடியாது….நீ மட்டும் போய் பாரு….பட் நான் சீக்ரெட்லி உன்னை ஃபாலோ பண்ணிட்டுதான் இருப்பேன்…. “

நிக்கி சொன்னதை நினைத்துக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தாள் இசை. இப்டியே மறைந்து மறைந்து நிக்கி எத்தனை காலம் வாழமுடியும்….? துரத்துறது ஒரு தனி மனுஷன்னா துரத்தறவன்  ஆயுள் வரை….அல்லது அவன போட்டுத்தள்ற வரைனு நினைச்சுகிடலாம்….

 Nagal nilaஅந்த மாஃபியா ஹெட்டுக்கும் அவன் மகனுக்கும் டெத் பெனால்டி எக்‌ஸிக்யூட் செய்த மறுநாள் அவன் கசின் நிக்கிய கொலை செய்ய ட்ரை பண்ணிருக்கான்…..அதுவும் இனிமேல் நான்தான் அந்த மாஃபியாக்கு வாரிசு…அவன் செத்ததுக்கு காரணமானவனை பழி வாங்குவேன்ற ஒரு அறிவிப்போட….

 இப்ப இந்த கசினை பிடிச்சுட்டா நிக்கியால டெத் பெனால்டி கிடைச்சதா நினைக்ற அந்த மாஃபியாவுக்கு சொந்தம், அவருக்காக பழி வாங்க போறேன்னு நிக்கிய துரத்த இன்னொரு அங்கிள் வர மாட்டான்னு என்ன நிச்சயம்….இதுக்கு என்னதான் முடிவு????

இதுல இந்த SM3 க்ரூப்ப வேற…..அவனுங்களுக்கு பயந்து நிக்கி தலை மறைவா இருக்கனும்ன்ற அளவுக்கு இல்லைதான்…..கவர்மென்ட்டோட ஒரு டிடக்டிவ் ஆஃபீஸர் மாதிரி தன் வேலையப் பத்தி வெளிய சொல்லாம இருந்தால் போதும்…..நார்மல் லைஃப் லீட் பண்ண முடியும்தான்…..ஆனாலும் அந்த க்ரூப்பை…. நிக்கி ஹேன்டில் செய்யனும். அதுல அவன் எந்த ஒரு ஆர்மி ஆஃபீஸரோ போலீஸாஃபீஸரோ  ஃபேஸ் பண்ற ரிஃஸ்க் அளவுக்கு ப்ரச்சனையை எதிர்கொண்டுதான் ஆகனும்….

இந்த SM3 க்ரூப் வேலையே US மாதிரி எதாவது ஒரு ஃபினான்ஷியலி பெரிய நாடு இந்தியா மாதிரி டெவலப்பிங் நேஷன்ஸ் கூட முக்கிய பிஸினஸ் அக்ரிமென்ட் போட போற நேரம் அந்த ரெண்டு நாட்டுக்கும் இடையில டென்ஷன் வர்ற மாதிரி எதாவது ப்ராப்ளத்தை இழுத்துவிட்டு அந்த அக்ரிமென்டை அடுத்த நாட்டுக்கு மாத்திவிட்டுறது. அதுக்கு அப்படி அக்ரிமென்ட் மாறி எந்த நாட்டுக்கு போகுதோ அந்த  நாட்ல இந்த அக்ரிமென்ட்டால பெனிஃபிட் ஆகுற  பிஸினஸ் பீபுள் கூட முதல்லயே டீல் போட்டு பணம் வாங்கிடுறது.

இப்டி அவங்க செய்த வேலை தான் நிக்கி அரெஸ்ட் அண்ட் அதே நேரம் நடந்த அஸ்ஸாம் ஃப்ளைட் இன்சிடென்ட்னு பின்னால  கண்டு பிடிச்சதால தான் நிக்கிய அவங்களை trap செய்ற வேலைக்குன்னு யுஎஸ்ஸும் இந்தியாவுமா  சேர்ந்து ஃபிக்‌ஸ் செய்திருக்குது.

ஆக்சுவலி நிக்கி அரெஸ்ட்டே fake….அவன அரெஸ்ட் செய்துட்டதா சொல்லி அடச்சு இருந்த ப்ரிசன் செல் ஒரு செட் அப். போலீஸ்னு வந்தவங்கல்லாம் அந்த SM3 க்ரூப் ஆட்களேதான்.

அதனால் தான் அந்த கேங்கை நேரில் பார்த்த ஒருவன், அந்த கூட்டத்துடன்  அதிக நேரம் இருந்த ஒருவனான நிக்கியால் அவர்களை கையாள முடியும் என நிக்கிக்கு இப்படி ஒரு ரோல்.

அந்த க்ரூப்போட பவர் என்னவென்றால் நிக்கிய மாஃபியா கேங் ஆள் என கவர்மென்ட் ரெக்கார்ட் வரைக்கும் இன்க்ளூட் செய்ய முடிந்ததுதான்…. ஆக கவர்மென்டில் கூட அந்த கேங்கின் ஆட்கள் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அதனால் அந்த கேங்கை சின்னதாக நினைக்க முடியாது….

அதனால் தான் நிக்கி கவர்மென்ட்ல இருந்து தருகிற செக்யூரிடி பீபுளை கூட முழுசா நம்புவது இல்லை….வீட்டுக்குள்ள யாரையுமே அனுமதிக்றதும் இல்லை….. கடைசி வரைக்கும் இப்படியேன்னா எப்படியாம்? எப்படி யோசித்துப் பார்த்தாலும் இசைக்கு எதுவும் தெரியவில்லை.

ஆனால் திடுமென மனதில் ஒரு புது பயகுழப்பம்.

இப்படி ஒரு சூழ்நிலை என்பதால் நிக்கியின் வீடு அதீத பாதுகாப்பிற்குட்பட்டது. வீட்டை சுற்றி வெளியே இருக்கும் செக்யூரிடி  பீபுளையும் தவிர ஏராளமான டெக்கி டிவைசஸ்….சைன்டிஃபிக் ப்ரொடக்க்ஷன் என எதையெல்லாமோ சொல்லி இருந்தான் நிக்கி. இவள் கதவை உள்ளே பூட்டி இருந்த போதும் அவனால் உள்ளே வரமுடிந்ததே அந்த அளவுக்கு நிறைய உண்டு….. அதில் இந்த சதீஷ் எப்படி இஷ்டபட்ட நேரமெல்லாம் இப்படி புகுந்து வருகிறான்??

சதீஷ் பேக்ரவ்ண்ட் ஒன்றும் படு பரிசுத்தமாக இருக்கும் என்று இவள் எதிர் பார்க்கவில்லை தான். ஆனால் அது படுமோசமாக இருக்குமோ என இப்போது பயம் வருகிறது….

“நம்ம வெட்டிங்க்கு சதீஷ் வர ஆசைப் படுவாங்கன்னு நான் தான்  அலவ் பண்ண சொல்லி வச்சிருந்தேன்….” நிக்கி சொல்லி இருந்தான் தான். அது அன்று ஒரு நாள். இப்ப எப்படி வந்தான்? எப்படி போனான்?

இதற்குள் ஆசிரமம் வந்துவிட குறிப்பிட்ட நபரை பார்க்க சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.