12. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
குமார் சரியான நேரத்திற்கு சிந்தனாவைப் பார்க்க வந்துவிட்டான்.
“வாங்க குமார்.”
“மேடம். உங்க அக்கா சொன்னா நந்தினி கேட்பாளா?” ஏக்கம் தொனிக்க கேட்டான்.
சிந்தனாவுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. அதே சமயத்தில் சற்றும் குறையாத கோபமும் இருந்தது.
‘அது எப்படி இது போன்ற ஆண்கள் தவறையும் செய்துவிட்டு மன்னிப்பு கேட்ட உடனே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனைதான். தங்கள் தவறால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்புறம் என்ன தயக்கம் டாக்டர்?”
“நோயாளியும் எங்களுடன் ஒத்துழைத்தால்தானே எங்களால் காப்பாற்ற முடியும்?”
“என்ன செய்யறார் டாக்டர்?”
“சின்ன குழந்தை போல் அடம் பிடிக்கிறார். வீட்டுக்குப் போக வேண்டுமாம். அவரால் இங்கே தங்க முடியாதாம். வீட்டிலேயே மெடிசின்ஸ் எடுத்துப்பாராம்.”