“அக்கா! செமயா இருக்கீங்கக்கா.. உம்மா..” என ஷண்மதிவின் கழுத்தை கட்டிக் கொண்டு முத்தமிட்டு போட்டோக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தாள் .
“ சும்மாவே ஷண்மதியை சைட் அடிப்பவன், இன்று லைசென்ஸ் உடன் வாய்ப்பு கிடைத்தும் பிரயோஜனமில்லால், அவன் செல்ல மகியையும் ஒன்னும் சொல்ல முடியாமல் பேக்க பேக்க என விழித்துக்கொண்டு நின்றான், கண்ணன்.
சரியாக அந்த நேரம் பார்த்து ” அம்மா!!!!” என்று மகி தன் தலையைப் பிடித்துக் கொண்டு கத்த, ஒரு கையால் அவள் காதை திருகியப்படி மறுக்கையால் அவள் வாயைப் பொத்தி மேடையில் இருந்து இழுத்து சென்றான் அவன்.
“அப்பாடா...... இதற்கு தானே ஆசைப் பட்டாய் பால குமாரா...” என்று உள்ளுக்குள் ஒரு குத்தாட்டமிட்டு , ஷண்மதி அருகில் சென்று தோள் உரசி நின்று அவளை முகம் சிவக்க வைத்தான் அவள் குறும்பு கண்ணன்.
மேடையில் இருந்து இறங்கி, அவள் வாய்யை மட்டும் ரிலீஸ் செய்தவன்,
“ ஹேய் குண்டு போண்டா !! ஸ்டேஜ்ல அண்ணி கூட நீ எதுக்கு போஸ் கொடுக்குற? இன்னைக்கு அவங்க ரிசப்ஷன். சோ, அவங்கள கொஞ்சம் ப்ரீய விடு இம்சை.. “
“டேய் தீவட்டி தலையா..நா ஒன்னும் குண்டு இல்ல.. நீ தான் ஹிப்போ!! தென், நா ஏன் போகக்கூடாது ?வொய்? வொய்? இது எங்க அத்தான் மேரேஜ். நா போவேன். நீ எதுக்குடா என்னைய கொட்டுன தடியா….”
“ஏது?? அவன் உனக்கு அத்தான், நான் உனக்கு டா வா உன்ன...............” என்று கூறியபடி அவள் காதை மேலும் திருக,
“ஆ................ அம்மா வலிக்குது!!! ஹேய், கைய எடு! ஒரு பொண்ணைக் கொடுமை படுத்துறீயே..கைய எடு! வலிக்குதுடா குரங்கு..”
“ தாவணி கட்டினதால எல்லாம் நீ பொண்ணுங்க லிஸ்ட்ல சேர முடியாது ரௌடி மங்கம்மா. நீ ஃபர்ஸ்ட் சாரி சொல்லு, விடுறேன் “அவன்
“டேய் கருவாயா.. கைய எடுடா .. “என அவள் உரக்க கத்த,
“ஏய்!! என்ன சொன்ன கருவாயன? இரு டி உன்ன என்ன பண்றேனு பாரு !!” என்று யார் கண்ணிலும் படாதபடி அவளை பின் பக்கம் இழுத்து சென்று விட்டான் அவன் .
அவனிடம் இருந்து தப்பிக்க அவள் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் பலன் பூஜ்ஜியமே.
“ஐயோ!!!! இவன்ட சோலோ வா சிக்கிட்டோமே.. ஓ மை காட்……முருகா… சேவ் மீமீமீ!!!!!!!!!!!!!!“
தொடரும்