18. காதல் பின்னது உலகு - மனோஹரி
அன்று எல்லோரும் கிளம்பிச் சென்றபின்…. ஹால் சோஃபாவில் உட்கார்ந்திருந்த நிலவினையை மொத்தமாய் கைகளில் அள்ள முயன்றான் அவள் கணவன்….. அவன் தொட்ட அதே வேகத்தில் அவனை பிடித்து தள்ளினாள் இவள்.
“கீழ விழுந்தப்பவே கையதான் நீட்னீங்க சரியான பிறகு இப்ப என்னதுக்காம் இதெல்லாம்..ஒன்னும் வேண்டாம்…” எழுந்து மெல்ல உள் அறை கட்டிலைப் பார்த்து சென்றாள்.
“ஹேய் கோபமா வினு….? அப்ப எல்லோரும் இருந்தாங்கல்ல…..நீ எப்டி ஃபீல் பண்ணிவியோன்னு இருந்துச்சு…”
“நான் எப்டி ஃபீல் பண்ணுவேன்னு நான்தான சொல்லனும்….அதென்ன நீங்களா முடிவு செய்துக்கிறது?”
இதற்கு இவன் என்ன பதில் சொல்வானாம்? இவள் எதையும் சொல்ல வருகிறாளோ?
“என்னாச்சு வினு?” அவள் அருகில் சென்று நின்றவன்….
”எதுனாலும் நேரடியா சொன்னாதான புரியும்…..” அவள் தோள் பிடித்து மென்மையாய் தன் பார்த்து திருப்பினான்.
“அதுக்கில்ல…” இப்பொழுது வினியின் குரல் மிகவுமே இறங்கிவிட்டது.
“நான் சரியாதான் புரிஞ்சிருக்கனான்னு தெரியலை….ஆனா…..என்னமோ எனக்கு இப்டி தோணுது…..அபயன் இருக்றப்ப நீங்க என்ட்ட பேசுற பழகுற கம்ஃபர்ட் உங்களுக்கு அத்தான் முன்னால வரமாட்டேங்குதுன்னு தோணுது…..அவங்க மேரேஜுக்கு முன்னால நமக்கு மேரேஜ் ஆகிட்டுன்னு கில்டியா ஃபீல் பண்றீங்களோன்னு…..” தலை குனிந்து இவன் முகம் பாராமல் சிறு குரலில் சொல்லிக் கொண்டிருந்தவள் தலையில் கை வைத்து சின்னதாக அதை ஆட்டினான்…
“உனக்கு ஏன் இப்டிலாம் தோணுது குட்டிப் பொண்னு?”
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்….. “நிஜமா அப்டிலாம் எதுவும் இல்லையா….?” சற்று பரிதாபமாக கேட்டாள்… ‘வழக்கம் போல நம்ம கற்பனை ஹார்ஸ் ஃபுல் ஃபார்ம்ல புல் மேஞ்சுட்டு போலயே…..’
அவன் முகத்திலோ இவளை ரசிக்கும் ரசனையும் ஒரு கனிவும்….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“நான் மேரேஜுக்கு சம்மதிச்சதுல அவனுக்கு எக்கசக்க நிம்மதி….. இதுல அவன் முன்னால நான் ஏன் கில்டியா ஃபீல் பண்ணப் போறேன்….. அதோட இப்பவும் அவன் மனசு மாறத்தான் வெயிட் செய்துட்டு இருக்கோம்…. ஆனா “
அவன் மீதிருந்த இவள் பார்வை கூர்மையாகிறது…
“என் மேரேஜ்ன்றது என் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது…..அது என்னை மேரேஜ் செய்ற பொண்ணு சம்பந்தபட்டதும் தான?…..வீட்டு சூழ்நிலைக்காக நான் அதிக்கு முன்ன மேரேஜ் செய்யனும் வேணும்னா முடிவு செய்துக்கலாம்…. ஆனா மேரேஜ்னு செய்றப்ப அது முழு மேரேஜாதான் இருக்கனும்…… இல்லனா அது நியாயம் கிடையாது இல்லையா?”
“…………..”
“என்னை நம்பி வர்ற என் வைஃப்க்கு நான் என்ன கொடுக்கனுமோ அது அன்போ பாசமோ காதலோ…..எதுனாலும் கொடுக்க வேண்டியதை முழுசா கொடுக்காம அதிக்கு இன்னும் மேரேஜ் ஆகலை…..அதனால நான் விலகி நிப்பேன்னு நினைக்கிறது சரி கிடையாது இல்லையா……..?” அவன் தன்னிலை விளக்கம் சொல்ல
‘ஓ எல்லாம் எனக்காகத்தானா? ‘ என பாய்கிறது இவளது எண்ணம்…. “ஆனா நானே அப்டி அத்தான் மேரேஜ் வரைக்கும் வெயிட் செய்யலாம்னு நினச்சா…..?” தயங்கித்தான் எனினும் கேட்டாள்….. என்ன காரணம் என்று தெரியவில்லை இவளுக்கு ஏதோ ஒன்று இந்த விஷயத்தில் அலைப்புறுகிறது...
அவன் முகத்தில் இப்போது இன்னுமாய் கூடிப் பரவுகிறது காதலும் கனிவும் புன்னகையும்….
“வினு நம்ம மேரேஜ் ஒரு வகையில் ரொம்பவே ஃபாஸ்ட்…. உங்க வீட்ல சீக்கிரம் வைக்கலாம்னு சொல்றப்ப …….எங்க வீட்டு சூழ்நிலைக்கு அதை ரொம்ப விரும்பியே இங்கயும் சரின்னு சொல்ல….. சட்டுன்னு முடிஞ்சுட்டு….அதனால நமக்கு கொஞ்சம் டைம் வேணும்தான்……அத ரீசனா சொல்லு எனக்கு முழு சம்மதம்…..ஆனா அதிய ரீசனா சொல்ல வேண்டாம் வினு ப்ளீஸ்….. கூடப் பிறந்தவங்களுக்காக….பேரண்ட்ஸுக்காக விட்டு கொடுத்துப் போகலாம் தப்பில்ல…பட் தியாகம் செய்யக் கூடாது….. எதோ ஒரு சூழ்நிலையில இவங்களுக்காக நாம இதெல்லாம் செஞ்சோம்னு தோணுச்சுன்னா அதோட அந்த உறவு கசந்துடும்…..”
சொன்னவன் அவள் முகம் அருகில் குனிந்து…..கண்களை மட்டுமாய்ப் பார்த்து “அதோட நீ சொல்ற விஷயத்த தியாகம்னு கூட சொல்ல முடியாது….இதனால யாருக்கு என்ன நல்லது நடக்கும்?”
அவன் குரலா… கேள்வியா… அவன் அருகாமையா….விழிகளை தாழ்த்திக் கொண்டாள் அவள்….
இப்போது இவள் இரு கைகளை மலர் இதழ் வருடலாய் பற்றியவன் “அதிக்கு மேரேஜாகி அடுத்து நமக்கு மேரஜாகி இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்தான்……ஆனா அப்டி இல்லைன்றதுக்காக வருத்தப்படுறேன்னு யோசிக்காதே குட்டிப் பொண்ணு… கம்பல்ஷன்காக முந்தினது நம்ம வெட்டிங் டேட் தான்….. மத்தபடி .நான் உன்னை ரொம்பவும் விரும்பிதான் கல்யாணம் செய்துகிட்டேன்…. “
அவன் அருகில் வர வர தாழ்ந்து போயிருந்த நிலவினியின் இமைகள்….இப்பொழுது சட்டென நிமிர்ந்து பார்க்கிறது…. ‘காதல் கல்யாணம் என கேள்விப் பட்டாள்தானே? ‘ அதுதான் இவள் கண்ணில் இப்போது ஆசைக் கேள்வியாய் மின்னுகிறது….