(Reading time: 19 - 38 minutes)

18. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

திடிரென்று யுக்தா கேட்ட கேள்வியில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழித்தாள் பிரணதி... இவளின் பதிலை எதிர்பார்த்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா..

"நீங்க ரொம்ப ஷார்ப் அண்ணி... கரெக்டா கண்டுப்பிடிச்சீட்டிங்களே... ஆனா எனக்கு தான் எதுவும் தெரியாம இருந்துட்டேன்... இருந்தாலும் நான் கொஞ்சம் லேட் பிக்அப் அண்ணி..."

பிரணதி சொன்ன பதிலால்... உங்களுக்குள்ள ஏதாவது இருக்கான்னு கேட்ட கேள்விக்கு... ஆமா இருக்குன்னு சொல்லனும்.. இல்ல எதுவும் இல்லைன்னு சொல்லனும்... ரெண்டும் இல்லாம இது என்ன பதில் என்று மனதிற்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் யுக்தா..

"என்ன இவ இப்படி ஒரு பதில் சொல்றாளேன்னு யோசிக்கிறிங்களா அண்ணி... நான் உங்களுக்கு புரியற மாதிரியே சொல்றேன் என்ன நடந்துதுன்னு... " என்று வரூனையும் அவளையும் பற்றி சொல்ல ஆரம்பித்தாள் பிரணதி...

"நீங்க நினைச்சா மாதிரி தான் அண்ணி நானும் அப்போ யோசிச்சேன்... வரூன் ஏன் நம்மக்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லனும்னு... அப்புறம் கொஞ்சநாள் அதை யோசிச்சிட்டு விட்டுட்டேன்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அப்புறம் +2 என்பதால படிப்புல கவனத்தை செலுத்த ஆரம்பிச்சிட்டேன்... படிப்பும் முடிஞ்சுச்சு... காலேஜ் சேர்ந்தப்ப தான் காலேஜ் ப்ரண்ட்ஸ் எல்லோரும் என்ன பேஸ்புக்ல அக்கவுன்ட் ஓபன் பண்ண சொன்னாங்க... அப்படியே ஸ்கூல் ப்ரண்ட்ஸும் ப்ரண்ட் லிஸ்ட்ல சேர்ந்தாங்க... அன்னைக்கு வரூனைப் பார்க்க கூட ஒரு ப்ரண்ட் வீட்டுக்கு போனதா சொன்னேன் இல்ல...

அவளும் என்னோட ப்ரண்ட் லிஸ்ட்ல இருந்தா... வரூனும் அவளோட பேஸ்புக்ல ப்ரண்டா இருந்தாங்க... அப்படித்தான் எனக்கு அவங்க ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தாங்க... நானும் தெரிஞ்சவங்க என்பதால அதை அக்சப்ட் பண்ணேன்...

அடிக்கடி வரூன் மார்னிங் விஷ் பண்ணி மெசேஜ் அனுப்புவாங்க... நானும் அதுக்கு ரிப்ளை பண்ணுவேன்... அப்படியே நாங்க சேட் பண்ண ஆரம்பிச்சோம்... ஆனா எங்க சேட்டிங் ஒரு லிமிட்ல தான் இருந்தது அண்ணி... அண்ணாவோட ப்ரண்டா நான் எப்படி பேசுவேனோ அப்படித்தான் சேட் பண்ணிக்கிட்டு இருந்தேன்... வரூனும் அந்த லிமிட்டை க்ராஸ் பண்ணதில்ல...

பொதுவா எங்கப் பேச்சு அண்ணா பத்தி தான் இருக்கும்... அண்ணா அந்த சப்னாவை மேரேஜ் செஞ்சுக்க அப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கிடுச்சு... நீங்க என்னடான்னா அண்ணாவே சப்னா பத்தி தெரிஞ்சுக்கும்னு சொல்றீங்களேன்னு கேட்பேன்...

அதுக்கு வரூன் சொல்வாங்க... அன்னைக்கு என்மேலே இருக்குற கோபத்துல சப்னாவை லவ் பண்றதா சொல்லிட்டான்... ஆனா அவனுக்கே அதுல சந்தேகம் தான்... அதான் அங்கிள்க்கிட்ட இப்பவே மேரேஜ்க்கு சம்மதம் வாங்கிட்டான்... கவலைப்படாத அவன் டைம் கேட்டிருக்கான் இல்லை... அதுக்குள்ள சப்னா பத்தி புரிஞ்சுப்பான்...

அப்படி ஒருவேளை கல்யாணம் வரைக்கும் வந்தா... நான் எதுக்கு இருக்கேன்... எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு வரூன் சொல்வாங்க... இருந்தாலும் சப்னாவை எனக்கு பிடிக்காது... அம்மாவும் அப்பாவும் கூட அவ உனக்கு அண்ணியா வரப் போறவ... அதுக்காகவாவது அவக்கிட்ட பேசலாம் இல்லன்னு சொல்வாங்க... ஆனா என்னால முடியாதுன்னு சொல்லிடுவேன்...

அண்ணாவும் சப்னாக்கிட்ட பேசுன்னு என்னை கட்டாயப்படுத்தினதுமில்ல... இப்படியே போய்ட்ருந்த அப்போ தான் நீங்க வந்தீங்க... உங்களுக்கும் அண்ணாக்கும் கல்யாணம் செய்யறதா அம்மாவும் சுஜாதா அத்தையும் பேசியிருந்ததாகவும் இப்போ அது அண்ணாவோட காதலால நடக்கப்போறதில்லன்னும் அம்மா அப்பா பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்... அதைப்பத்தி கூட வரூன் கிட்ட சொல்லியிருக்கேன்... வரூன் கூட அப்படி நடந்திருந்தா நல்லா தான் இருந்திருக்கும்னு சொல்லுவாங்க...

ஆனா திடிரென்று ஏதேதோ நடந்து உங்களுக்கு அணணனுக்கும் கல்யாணம் நடந்துச்சு...  இது எல்லோருக்கும் சங்கடமான சூழ்நிலைன்னாலும் அந்த சப்னாக்கிட்ட இருந்து அண்ணன் தப்பிச்சதுல எனக்கு சந்தோஷம் தான்... அதை நான் வரூன்கிட்டயும் ஷேர் பண்ணிக்கிட்டேன்... உங்களைப் பத்தி வரூன்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லனாலும் கொஞ்சம் மேலோட்டமா சொல்லியிருக்கேன்...

வரூனும் கடவுள்னு ஒருத்தர் இருக்காரு... அந்த சப்னாக்கிட்ட இருந்து உங்க அண்ணாவை காப்பாத்தறதுக்கே யுக்தாவை அனுப்பிச்சிருப்பாரு... இப்போ என்ன நடந்திருந்தாலும் பரவாயில்லை... எல்லாம் சீக்கிரமே சரியாயிடும்னு சொல்வாங்க... உங்க போட்டோ கூட வரூன்க்கு நான் தான் அனுப்பினேன்... உங்க ரெண்டுப்பேருக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்குன்னு கூட வரூன் சொன்னாங்க...

கடந்த 4 நாட்களுக்கு முன்ன வரை நாங்க இப்படி தான் அண்ணி பேசிக்கிட்டு இருந்தோம்... ஆனா அதுக்கப்புறம் தான் வரூன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரிந்தது..." என்று யுக்தாவை பார்த்தாள்.... பின் தொடர்ந்து கூற ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.