07. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ
“யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்
என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்
எங்கே உன்னைக் கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்”
மகி சின்ன வயசுல இருந்தே என் அப்பாவோட வேலையை பாத்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு போலீஸ் வேலை நா ரொம்ப இஷ்டம்…கொஞ்ச நாள்ல அது வெறியாவே மாறிடுச்சு..அப்பாவும் என்ன ரொம்பவே என்கரேஜ் பண்ணாரு,..அப்படி இருக்கும் போதுதான் என்னோட 13 வயசுல அப்பாவுக்கு பயங்கர விபத்து நடந்தது..அவரு டியூட்டி முடிஞ்சு வர அப்போபெரிய கன்டெய்னர் லாரி அடிச்சு போட்டுட்டு போய்டுச்சு..அக்கம் பக்கத்துல இருந்தவங்க கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க..அப்பா ரொம்ப சீரியஸ் ஆன நிலைமை.,அம்மாவுக்கு என்னையும் அக்காவையும் வச்சுட்டு என்ன பண்றதுனே தெரியலை..டாக்டர்ஸும் கை விட்டுடாங்க..எங்களோட ஒரே நம்பிக்கை கடவுள் மட்டும்தான்..அதிசயம் எதாவது நடந்தா தான் உண்டுநு நினைச்சோம்..ஆனா அதுவும் நடந்தது..கொஞ்சம் கொஞ்சமா அப்பாக்கு நினைவு திரும்ப ஆரம்பிச்சது..கிட்டதட்ட மூணு மாசம் ஆச்சு அவர் ஓரளவு சரியாகவே..இதெல்லாத்தையும் விட எங்களுக்கு பெரிய அதிர்ச்சி அது விபத்து இல்ல திட்டம் போட்டு செய்த கொலைமுயற்சிநு டிப்பார்ட்மென்ட்ல அப்பாவோட க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மூலமா தெரிய வந்ததுதான்,.அப்பா பாத்துட்டுஇருந்த கேஸ்ஸோட முக்கியமான அக்யுஸ்ட் தான் கூலிப்படைய வச்சு இப்படி பண்ண வச்சுருக்கான்,.அப்பாக்கு இதெல்லாம் சகஜம்நு ஈஸியா எடுத்துக்க முடிஞ்சுது ஆனா அம்மா ரொம்ப டிப்ரெஸ்ட் ஆயிட்டாங்க..அப்பாவ வேலைய விட்டுட சொன்னாங்க..யாரு என்ன சொல்லியும் கேக்கவேயில்லை…கடைசியா அப்பாதான் என்னென்னவோ சொல்லி அம்மாவ அமைதியாக்கினாரு..ஆனாலும் அம்மா பயத்துலயே இருந்தாங்க..அத. என் மேல திணிக்க ஆரம்பிச்சாங்க,நானும் அப்பாவ மாறியே போலீஸ் ஆகனும்ங்கிறத அவங்க விரும்பல..முதல்ல நாங்க யாருமே அத பெருசா எடுத்துக்கல..ஆனா அம்மா அவங்க முடிவுல ஸ்ட்ராங்கா இருந்துட்டாங்க..அவங்கள மீறி என் கனவு தான் முக்கியம்நு என்னாலயும் இருக்க முடில.ரொம்பவே குழம்பி போய்ட்டேன்..எப்பவும் போல அப்பா தான் என்ன கைட் பண்ணாரு..
ராம்.,மக்களுக்கு நல்லது பண்றதுக்கும்,அட்வென்சரஸ் வேலை பண்றதுக்கும் போலீஸாதான் இருக்கனும்நு இல்ல எவ்வளவோ துறைகள் இருக்கு..அப்படி எதாவது ட்ரை பண்ணு,கண்டிப்பா சக்ஸஸ் ஆவ..கொஞ்ச வருஷம் போச்சுனா அம்மா மனசும் மாறிடும் கவலைபடாதடா..
ம்ம்ம்ம் சரிப்பா…
சரிநு சொன்னாலும் என்னால உடனே மாற முடில…நெட்ல நிறைய ஸர்ச் பண்ணிணேன் ஒரு முடிவுக்கு வந்தேன்…நா சூஸ் பண்ணிண டிகிரி கிரிமினல் லா அண்ட் என்போர்ஸ்மென்ட்…இந்தியாலயே பெஸ்ட் காலேஜ் பார் சிவில் ஸ்டடீஸ் டெல்லில போய் படிச்சேன்..அண்ட் படிச்சு முடிச்ச கையோட வேலையும் கிடச்சுது ஐ ஸ்பை டிடெக்டிவ் ஏஜென்சில..யெஸ் மகி ஐ அம் அ சீனியர் டிடெக்டிவ் எக்ஸிகீயூட்டிவ்…நானும் பரணியும் அங்க தான் ப்ரெண்ட்ஸ் ஆனோம் நாங்கதான் டிப்பார்ட்மெண்ட் டாப்பர்ஸ்..சோ சேம் கம்பனிலயே ஜாப் கிடச்சுருச்சு…நீ நினைக்கலாம் இதெல்லாம் பெரிய வேலையா இத ஏன் மறைக்கனும்நு…பட் நாங்க இருக்குறது க்ரைம் சைட்..ஆல்சோ லிங்க்ட் வித் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்…முதல்லலா சின்ன கேஸஸ் தான் பாத்துட்டு இருந்தோம்,ஒருநாள் ACPகிட்ட இருந்து கால் வந்தது..நானும் பரணியும் போனோம்…