21. காதல் பின்னது உலகு - மனோஹரி
ஷீலாவின் அறையை விட்டு வெளியே வந்த நிலவினியின் முகம் யவ்வன் எதிர்பார்த்தது போல் கொஞ்சம் கூட உர் என இல்லை…. ‘கண்டிப்பா இது சரி இல்லையே‘ என அவனுக்குள் ஒன்று ஓங்கி சொன்னாலும்….
இந்த நிமிடம் இவனவளாக இவனை நெருங்கி நடந்தபடி, சுற்று புறத்தை பார்த்தபடி வரும் அவள் துறு துறு வண்டுக் கண்களும்…. புது மகிழ்ச்சி பொலிந்து நிற்கும் செழித்த சிறு கன்னங்களும்…., இவன் அருகாமையில் சிணுங்கி தலைகாட்டும் அவளது அந்த சிறு வெட்கமும்… இவனை அள்ளிக் கொள்ளத்தான் தள்ளுகிறது…
அதோடு ஹாஸ்பிட்டல் தாண்டி காரில் ஏறியதும் அவள் கவ்ண்டர் கொடுக்காவிட்டாலும் சரண்டர் கொடுத்தான் குட் கணவனாக
“வினு உன்னை ஏமாத்தனும்னு நான் எதுவும் ப்ளான் செய்யல குட்டிப் பொண்னு……எப்டியோ நான் போட்ட ஷேர்ட்ல எறும்பு நிறைய இருந்திருக்கும் போல….அது கடிக்கவும் தான் கவனிச்சேன்…அதுக்காக அதை கழற்றிட்டு உட்காந்திருக்கப்ப தான் நீ வந்த….. உன்ட்ட சொல்லத்தான் நினச்சேன் அதுக்குள்ள எனக்கு ஏதோ அலர்ஜி ஆகிட்டுன்னு நீயா வந்து என்னல்லாமோ செய்தியா…..”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
என்ன என்பது போல் அவனைப் பார்த்தவள் மனக்கண்ணில் அப்போது அவனுக்கு சிவந்திருந்த இடங்களை தன் கைகளால் இவள் தொட்டுப் பார்த்தது….ஓடிச் சென்று ஆலிவ் ஆயில் கொண்டு வந்து போட்டது எல்லாம் ஞாபகம் வர….
“அதான் விளையாட்ட கன்டின்யூ செய்யலாம்னு தோணிட்டு….” கண் சிமிட்டினான் இப்போது….
“நான் எப்பவும் போல நல்ல பையனா ஸ்ட்ராங்காதான் தான் இருந்தேன் வினு….” கிண்டலாய்
பரிதாபமான பாவத்தில் சொன்னவன், இப்பொழுது ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மறுகையால் இவள் கையை மெல்லப் பற்றி…..
“ஆனா இந்த தவ்ஸண்ட் வாட்ஸ் கைட்ட தோத்துப் போய்ட்டேன்….” என்று இவள் கண்களைப் பார்த்த போது கிண்டலுக்கு உள்ளே சற்று ஆசையும் ஒளிந்து தான் கிடந்தது.
அவன் கையிலிருந்து மனையாள் மெல்ல தன் கையை உருவிக்கொண்டாலும், அவன் பார்வைக்கு மறைத்து திருப்பிய அவள் முகத்தில், பரவ தொடங்கி இருந்த செம்மை கணவன் கண்ணுக்கு கிடைக்காமல் போகவில்லை….
ஆக இவன் சரண்டரும் ஆயாச்சு பொண்ணும் வெட்கமும்பட்டாச்சு அதோட அந்த கேம் முடிஞ்சுப் போச்சு என அப்போதைக்கு அதற்கு இடைவெளி விட்டான் யவ்வன்….. ஆனால் வினி என்ன செய்தாளாம்?
அன்று மதியம் அவனது அத்தை வீட்டில் விருந்தென்று எல்லாம் முடிந்து, அதன் பின் இவர்கள் வீட்டின் தரை தளத்தில் யவ்வனின் அம்மா அப்பாவோடு சிறிது நேரம் பேசிப் பொழுதை கழித்துவிட்டு, மாலை நேரம் இவர்கள் போர்ஷனுக்கு வரும் போது நிலவினி இதை எதிர்பார்த்தாள்.
கொஞ்சம் ஆசையாகவே எதிர் பார்த்தாளோ?
அவன்தான் சொல்லி இருக்கானே பல்ப் கொடுத்தவங்க வாங்கினவங்களுக்கு ஏதாவது கொடுக்கனும்னு…
காலைல இவ வாங்கின பல்புக்கு, தனியா பார்க்கிற இப்ப கணக்கு செட்டில் செய்வான்தானே…..
இன்னைக்கு என்ன செய்வான்?!!!!
உதடை உள்ளுக்குள் கடித்த படி இவள் இல் அட் ஈஃஸாய் தங்கள் போர்ஷன் ஹாலில் இடப்பக்கம் இரண்டு எட்டு……பின் வேண்டாம் என வலபக்கம் இரண்டு எட்டு எடுத்து வைத்து……என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த நேரம்… இவள் வந்து சில நிமிடங்கள் கழித்து துள்ளலாக உள்ளே வந்த அவனோ….
அந்த செட்டில் செய்ய வேண்டிய கணக்கைப் பற்றி எதுவும் சொல்லாமல் செய்யாமல்…. “கிளம்பு கிளம்பு…..இப்ப கிளம்பினாதான் சூப்பரா இருக்கும்…..”என பரபரத்தான்… துறு துறு என அவன்….
‘மதியம் அத்தை வீட்ல விருந்துன்னு வரைக்கும் சொல்லி இருந்தான்தான்….ஆனா இதைப் பத்தி எதுவுமே சொல்லலையே…. ’
“எங்க?” என ஆச்சர்யமாய் கேட்டாலும் அவன் உற்சாகம் இவளுக்குள்ளும் குமுழி இடத்தான் செய்கின்றன.
“அதெல்லாம் சர்ப்ரைஸ்….” என்றவன் அவனுக்கு இருந்த அதே உற்சாகத்தில் இவள் இரு தோள்களை பின்னிருந்து பற்றி தங்கள் அறைக்குள்ளாக தள்ளிக் கொண்டு போனான்.
“ரொம்ப நாளா ஆசை குட்டிப் பொண்னு உன்ன இங்க கூட்டிட்டுப் போகனும்னு…….” பொங்கி வடிகிறது ஆர்வம் அவன் குரலில்… “இன்னைக்கு காலைல நீ பல்ப் வாங்குனதும் டிசைட் செய்துட்டேன் இன்னைக்கு அங்கதான்னு”
‘ரொம்ப நாளாவா….? கல்யாணம் ஆகி இன்னைக்குதான் மூனாவது நாள்…..’ அப்டின்னு தோணுன கேள்வியை இவ கேட்கவே இல்லை… ‘பல்ப்புக்கு கணக்கு செட்டில்மென்ட்னா? ’ என அப்ரப்ட்டாய் நின்று போனது அவளது ஆராய்ச்சி தாட்….
“இன்னைக்கு வின்ட்ல வேற சில்நெஸ் கூடி இருக்கு அங்க ரொம்பவே நல்லா இருக்கும்…. ” அவன் பரவசம்….
‘இவன் என்ன ப்ளான்ல இருக்கான்?’ அவசரமாய் நகம் கடிக்க வந்த எண்ணத்தை அப்போதைக்கு தள்ளிப் போட்டாள் வினி…