(Reading time: 16 - 32 minutes)

23. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

திக்கு பிரயுவை எண்ணி கொஞ்சம் கவலையாக இருந்தது. அவன் பிரயுவிடம் மனம் விட்டு பேசி, அவளின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றால், அவள் hospital இல் தங்கி விட்டாள்.

தன் மாமனாருக்கு அட்டாக் வந்த அன்று பிரயுவின் தங்கைகள் இருவரும் அவளை குறை சொல்லி பேசியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தது. ப்ரயு ட்ரைனிங் போவதை பற்றி சொல்லாதது அவருக்கு மட்டுமல்ல .. எல்லோருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அது மட்டுமே அவரின் உடல்நிலைக் குறைவிற்கு காரணம் என்று தோன்றவில்லை. மேலும் பிரயுவின் தங்கைகள் அன்றைய அதிர்ச்சியில் பேசியதாகவும் தெரியவில்லை. அவளை ஏற்கனவே குறை சொல்லி கொண்டிருப்பதாக தோன்றியது. ப்ரயு இதை பற்றியெல்லாம் அவனிடம் எதுவுமே சொன்னதில்லை.

அப்போதுதான் அவனுக்கு தோன்றியது. அவள் எல்லோரிடம் இருந்தும் விலக ஆரம்பித்து விட்டாளோ என்று.. ஏன்..? அவளை யார் என்ன சொன்னார்கள்? இதை பற்றியெல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவர் discharge ஆகி வீட்டிற்கு சென்ற பிறகு பிரயுவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டான். ஆனால் பிரயுவும் அங்கே செல்வாள் என்று எண்ணவில்லை. முதலில் மறுக்க எண்ணியவன், அவளின் ஆதிப்பா என்ற அழைப்பில் அவனால் மறுக்க இயலவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

மூன்று வருடங்கள் அவளை விட்டு தனியாக இருந்த ஆதிக்கு, இங்கே வந்த பிறகு மூன்று நாட்கள் அவளை விட்டு இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், அவள் அவனோடு அவன் வீட்டில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நிறைவாக இருக்கும். மேலும் இங்கே இருக்கும் பொழுதுகளில் அவனின் தேவைகளை அவள் செய்து கொடுப்பாள் என்பதால் அவளை மிகவும் மிஸ் செய்தான்.

இந்த மூன்று நாட்களாக போனில் அழைத்தாலும் அவள் அதிகமாக பேசுவதில்லை. யாராவது உறவினர் வந்து கொண்டிருப்பதால், அவர்களை கவனிக்க நேரம் சரியாக இருந்தது. தந்தையை பார்க்க வந்தாலும், அவர் அதிகம் அலட்டாதபடி , அவளோ அவள் அம்மாவோ தான் உறவினர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அவர்களின் அக்கறையை நாம் மதிக்காமல், கிளம்புங்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அவர்கள் கிளம்பும் வரை அவர்களோடு டைம் ஸ்பென்ட் செய்ய வேண்டியிருந்தது. அதனால் ஆதி அவளை அழைக்கும் போது பேசி உடனே வைத்து விடுவாள்.

மூன்று நாட்கள் கழித்து இனி தாங்காது என்று எண்ணியவனாக , வேலை முடிந்து வரும்போது அவரை பார்த்துவிட்டு வருவதாக தாயிடம் தெரிவித்து விட்டு, நேராக மாமனார் வீட்டிற்கு சென்றான்.

வீட்டு கதவு லேசாக திறந்திருக்கவும் அவன் பெல் அடிக்காமல் உள்ளே வந்து விட்டான். மாமனார் அறையில் பேச்சு குரல் கேட்கவும் முதலில் அவரை பார்த்து வர எண்ணி அங்கே சென்றான். உள்ளே பிரயுவின் அம்மா, அவள் அப்பாவிடம்

“ஏங்க .. உங்களுக்கு திடீரென்று இப்படி ஆச்சு? நீங்க அவ்ளோ சீக்கிரம் தைரியம் இழக்க மாட்டீங்களே? என்ன ஆச்சு?”

“ப்ரத்யா எங்கே?”

“அவள் மாடியில் துணி எடுத்து வர போய் இருக்கிறாள்?”

“ஏன்மா.. உனக்கு ப்ரயு செஞ்சது அதிர்சியா இல்லியா?”

“அதிர்ச்சிதான்.. அதனால் தான் எங்கே இருக்கிறோம், என்ன செய்யறோம் நு தெரியாமல் அவளை அடித்து விட்டேன்.. ஆனால் எனக்கு அதிர்ச்சி அவள் மாப்பிள்ளையிடம் கூட சொல்லவில்லை என்பதுதான்”

‘தெரியும்.. அதை நினைத்து கொண்டே தான் நான் வீட்டிற்கு வந்தேன்”

“நம்ம மாப்பிள்ளை இதை பெரிய பிரச்சினை ஆக்கவில்லை.. இல்லை என்றால் அவள் வாழ்க்கை என்ன ஆகும்?” என்று கவலையோடு பேச,

அப்போது அவர்கள் கவலையை போக்க எண்ணி, உள்ளே செல்ல எட்டு எடுத்தவன் , தன் மாமனாரின் பேச்சால் நின்றான்.

“இப்போ அவ நல்ல இருக்கான்னு நினைக்கறியா?” என்றார்.

“ஏன் அப்படி சொல்றீங்க? அவர்தான் இங்கேயே வந்துட்டாரே? வந்தும் பத்து நாள் ஆச்சு. இனிமேல் என்ன பிரச்சினை அவளுக்கு?”

“உனக்கு புரியலையா? மாப்பிள்ளை வரது நமக்கு மட்டும் தெரியலன்னா பரவால்ல .. பிரயுவிற்குமே தெரியல.. அதோட அவள் வேலை விஷயத்தை நம்மகிட்ட மட்டும் இல்ல ..அவங்க வீட்லேயும் சொல்லல.. இதுலேர்ந்து என்ன தெரியுது? அங்கயும் அவ யார்கிட்டயும் பேசுறது இல்ல.. நான் யோசிச்சது இதை தான்.. “

“ஹ்ம்ம்.. நீங்க சொல்றது புரியுது.. நம்ம மேல தான் அவளுக்கு உடம்பு சரியில்லாதப்ப அவள இங்கே வச்சு பார்துக்கலன்னு கோபம்.. அவங்க கூட என்ன பிரச்சினைன்னு புரியலேயே?”

“அந்த சமயம் நாம பண்ணது சரியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.