07. புத்தம் புது காலை - மீரா ராம்
“அப்புறம் சம்மந்தி… நிச்சயம் நல்ல படியா முடிஞ்சது… நாங்க கிளம்புறோம்…” என சண்முகம் ரவீந்திரனிடம் சொல்ல, திலீப்பின் பார்வை சரயூவிடத்தில் வந்து நின்றது…
“நான் போகணுமா?....” என்பது போல் அவன் பார்க்க, அவள் என்ன செய்வது என அறியாமல் திணறிக்கொண்டிருந்தாள்…
“ஹேய்… காயூ… அங்க பாரு… மாப்பிள்ளை கொடுக்குற லுக்கை?...”
“ஹாஹா…. நானும் பார்த்துட்டு தான் இருக்குறேன் வித்யா… பாவம் தான் மா…….மா…………”
“அவராவது பரவாயில்லைன்னு தான் எனக்கு தோணுது… இங்க நம்ம சரயூ நிலைமை தான் ரொம்ப மோசமா இருக்கு காயூ…”
“ஏன் வித்யா அப்படி சொல்லுற?... அவளுக்கென்ன… நல்ல சப்பாத்தி மாவை பிசையுற மாதிரி கையை பிசைஞ்சிட்டு வேடிக்கை பார்த்துட்டு தான இருக்குறா….”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“பின்ன இந்த ரேஞ்சுக்கு போனா புத்தூருக்கு போயி மாவுக்கட்டு தான் போடணும் இவளுக்கு… நீ வேணா பார்த்துட்டே இரு காயூ… கடைசியில அதுதான் நடக்கப்போகுது…”
என இருவரும் பேசி சிரித்துக்கொண்டிருக்கையில், திலீப்பை அழைத்துக்கொண்டு அவனின் அப்பா சண்முகம் கிளம்பினார்…
அவன் சென்றதும், ஏதோ ஒரு கவலை மனதை ஆக்கிரமிப்பதை உணர முடிந்தது சரயூவினால்…
இது ஏன் எதற்கென்று அவளுக்கு அந்நேரம் புரியவில்லை…
வித்யாவும் காயூவும் மாறி மாறி உன் விரல் எல்லாம் உங்கிட்ட தான இருக்கு… கீழே ஏதும் விழுந்துடலையே… என கிண்டல் செய்த போதும் அவள் மனதில் எதுவும் பதியவில்லை…
அவர்களிடமிருந்து விலகி தனதறைக்கு சென்று கட்டிலில் அமர, அவள் மனதும் ஏனோ பாரமானது போல் ஒரு உணர்வு…
“என்ன இது… இதுநாள் வரை இப்படி ஒரு உணர்வு எனக்கில்லையே… எதற்காக என்னவோ போல் இருக்கு எனக்கு?...” என தலையை பிடித்துக்கொண்டு அவள் யோசிக்க ஆரம்பித்த வேளை,
“அது இதற்காகத்தான்….” என்பது போல் திலீப் கொடுத்த போன் சத்தமிட்டது….
திடீரென்று கேட்ட சத்தத்தில் சற்று திகைத்தவள், அது அவன் வாங்கி கொடுத்த போனிலிருந்து தான் வருகிறதென்று தெரிந்ததும் சட்டென்று உதித்த புன்னகையுடன், அதனை எட்டி எடுத்தாள்…
“ஹாய்… செல்லம்… என்ன பண்ணுற?...” என எதிர்முனையில் இருந்து கேள்வி வந்துவிட்டது இவள் இங்கே ஹலோ சொல்வதற்குள்…
“எது செல்லமா?...” என மனதிற்குள் நினைத்தவள், வெளியே அவனிடம் எதுவும் சொல்லவில்லை…
“ஹேய்… உன்னைத்தான்… சரயூ பொண்டாட்டி… லைனில் இருக்குறீயா இல்லையா?...”
“என்னது பொண்டாட்டியா?...” என இம்முறையும் மனம் கூக்குரலிட, அவளது உதட்டில் மட்டும் ஏனோ புன்னகை நிலைத்து நின்றது…
“சரயூ……” என அவன் மென்மையாக அழைக்க, இங்கே அவள் மனதில் அதுவரை குடி கொண்டிருந்த பாரம் அனைத்தும் சட்டென வெளியேறியது போன்ற உணர்வு….
“உங்கிட்ட பேசணும் போல இருந்துச்சு…. அதான் போன் பண்ணினேன்…”
“…………..”
“ஹேய்,,,, என்ன… பேசமாட்டீயா?...........” என மிக மென்மையாக கேட்க இங்கே அவள் நிலைமையோ சற்று திண்டாட்டமாய் அமைந்து போனது…
இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், எதாவது நினைத்திடுவோனோ என பயம் தோன்றிய மாத்திரத்தில், “ம்ம்ம்…….” என்றாள் அவள்…
“என்ன ம்ம்?..... பேசுடி….” என அவன் மறுமுனையில் சொல்ல, இங்கே அவளோ போனை பார்த்து சிரித்தாள்….
“பேசு பேசுன்னா…. என்ன பேச?... பேச முடிஞ்சா தான பேச முடியும்?...” என அவள் மனம் உரைத்த அடுத்த நொடியே, “ஆமா…. ஏன் உன்னால பேச முடியலை… எதுக்காக?..” என கேள்வியும் கேட்டது அவளிடத்தில்…
“உங்கிட்ட பேசத்தான் நான் போனே வாங்கி கொடுத்தேன்… நீ என்னடான்னா பேசவே மாட்டிக்குற?...” என அவன் சற்றே அலுத்துக்கொள்ள,
“சொல்லுங்க….” என்றாள் அவள் அமைதி கூட்டிலிருந்து வெளிவந்து…
“சொல்லுறேன்… அதுக்காகத்தான் போன் பண்ணினேன்…” என்றவன்,
அவள், “என்ன சொல்லப்போகிறான்???.....” என யோசித்த நேரம்,
“சொல்லியிருப்பாங்களே… நான் அமைதி பேசவே மாட்டேன்னு….” என கேட்க
“ஆம்….” என்றாள் அவள்…
“அது உண்மைதான்… ஆனா ஏனோ உங்கிட்ட பேசணும், பழகணும், கூடவே இருக்கணும்னு எனக்கு தோணுது உன்னை பார்த்துட்டு வந்ததுல இருந்து…. எதனாலன்னு எனக்கு சொல்லத்தெரியலை… இனி எனக்காக ஒருத்தி, என் உலகத்துல தனியா இருந்த என்னோட வந்து வாழப்போற மனைவின்னு மனசு சொல்லிட்டே இருக்கு… அதிகம் பேசமாட்டேன் தான்… ஆனா உங்கிட்ட நல்லா பேச முயற்சி செய்யுறேன் கண்டிப்பா… ஏன்னா இனி நீ வேற யாரோ இல்லல்ல….” என திலீப் தன் மனதில் இருப்பதை சொல்ல, அவள் என்ன பேச என்று தெரியாமல் இருந்தாள்…
இத்தனை நாள் நான் இப்படித்தான்… இனி உனக்காக நான் மாற்றிப்பேன் என்று சொல்லுபவனிடத்தில் என்ன பேச, எப்படி பேச என்று புரியாதிருந்தாள் அவள்…
ஒன்று மட்டும் புரிந்தது, அது அவன் அவள் மீது வைத்திருக்கும் அந்த காதல்…