15. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்
இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்..
இன்னமும் ராமால் தன் செவிகளையே நம்ப முடியவில்லை..என்ன கேட்டுவிட்டாள்..கண்களில் நீர் துளிர்த்தது..அதற்குள் மருத்துவரிடம் விஷயம் அறிந்த பரணியும்,சாக்ட்சியும் உள்ளே நுழைந்தனர்..அவர்களின் கண்களும் கலங்கியிருந்தது..
பரணி என்னாச்சுடா என் மகிக்கு..என்னவோ போல பேசுறாடா..என்று பேசிக் கொண்டே போக தன் நண்பனை இறுக கட்டிக்கொண்டான் பரணி..அவனாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை ராம் எப்படி எடுத்துக் கொள்வான்..அவனின் உயிரல்லவா இப்படி உடைந்து கிடக்கிறது..அவனை தேற்றுவதற்கு வார்த்தைகள்தான் கிடைக்குமா என்று நினைக்க நினைக்க கண்ணீர் நிற்காமல் வழிந்தது பரணியிடம்..சாக்ட்சி கண்களால் இறைஞ்ச நிலை உணர்ந்தவன் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு விலகி நின்றான்..வெளியே வாங்க ராம் நாம பேசலாம் அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் என்று டாக்டர் அழைக்க அனைவரும் வெளியே சென்றனர்..
ராம் கன்ட்ரோல் யுவர் செல்ப்..இனிதான் நீங்க தைரியமா இருக்கனும்..அவங்க கூடிய சீக்கிரம் குணமாகுறது உங்க கைல தான் இருக்கு..அக்சூவலி அவங்க தலைல பட்ட அடினால மெமரி லாஸ் ஆயிருக்கு..இட்ஸ் கால்ட் ரெட்ரோக்ரேட் அம்னீஷியா அதாவது ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்..அவங்களுக்கு தான் யாரு என்ன பண்றோம் எல்லாமே தெரியும் பட் கடந்த இரண்டு வருஷத்துல நடந்த நிகழ்வுகள்,சந்தித்த மனிதர்கள் எல்லாம் மறந்திருக்கும்..அதனாலதான் உங்க யாரையுமே அவங்களுக்குத் தெரில..பட் டோன்ட்வொரி இது டெம்பரவரிதான் எனி டைம் க்யூர் ஆய்டலாம்..அதுவரை அவங்களுக்கு சப்போர்டிவ்வா இருங்க..டேக் கேர் ஆப் கெர்..என்று கூறிவிட்டு நகர்ந்தார்..
ராமிடம் எந்த அசைவுமில்லை அப்படியே கண்களை மூடி பின்னால் சாய்ந்துவிட்டான்..ஏனோ மனதினுள் வெறுமை ஆக்ரமித்ததை போலிருந்தது..சில நிமிடங்கள் அப்படியே கரைய நீண்ட மூச்சை வெளியிட்டவன் எழுந்து வெளியே செல்ல எத்தனிக்க,பரணி அவன் கைப்பற்றி நிறுத்தினான்..
ராம் எங்க போற??
அமர்நாத் பவன்க்கு..
வேண்டாம் ராம் அவசரபடாத..
இன்னும் என்ன நடக்குறதுக்காக பொறுமையா இருக்கனும் பரணி..என் மகி ஒரேடியா என்ன விட்டு போறதுக்காகவா..என்ன திமிர்டா அவனுக்கு..தப்பு பண்றது அவன்..தண்டனை எனக்கா??அதுவும் என் மகிக்கா??இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்..
ராம் உனக்கிருக்குற அதே அளவு கோபம் எனக்கும் இருக்கு..ஆனா அதை காட்ட வேண்டிய நேரமோ விதமோ இதில்ல..எப்போ என்ன பண்ணணுமோ பண்ணலாம்..இப்போ நீ மகியோட இருக்க வேண்டிய நேரம்..போ போய் அவள்ட்ட பேசு..என உள்ளே அனுப்பி வைத்தவன் முதல் வேலையாக ACPஐ அழைத்தான்..
சொல்லுங்க பரணி என்ன திடீர்நு கால் பண்ணிருக்கீங்க??
இன்னும் என்ன சார் ஆகனும்..என கோபமாய் ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடிக்க மறுமுனையில் அவரோ ரியலி சாரி பரணி..ராம் எப்படி இருக்காரு..
ம்ம் என்ன சொல்றது இருக்கான்..
ஓ.கே பரணி இதுக்குமேல நீங்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க அவங்களுக்கு எதிரா ஸ்ட்ராங்கா ஒரு எவிடென்ஸ் கிடைச்சாலும் போதும்..நா கமிஷ்னர்ட்டயும் பேசிட்டேன்..உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நாங்க செய்ய காத்துகிட்டு இருக்கோம்..