(Reading time: 15 - 30 minutes)

17. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)
மடி மீது தூங்கச் சொல்கிறாய்
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்
பெண்ணே
ஏனடி என்னைக் கொல்கிறாய்
உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகு போல் நான் உருகினேன்
என் கவிதையே என்னைக் காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய்
என் இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதில் என்ன அதை நீயே சொல்லடி

தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே (2)
வெள்ளை நிறத்து தேவதையே
வண்ணங்களைத் தந்து விட்டு என்னருகில் வந்து நில்லு
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே(2)

தர்வா விநாயக்கிடம் அந்த டைரியை காட்டி கொதித்துக் கொண்டிருந்தான்…மாமா நா எவ்வளவோ சொன்னேன் கேட்டீங்களா??அசால்ட்டா விட்டீங்க இப்போ பாருங்க எதெல்லாம் தெரிய கூடாதோ அது எல்லாமே கண்டுபிடிச்சுருக்கான்..இப்போ என்ன பண்றது..

இல்ல அதர்வா அவனபத்தி நல்லா விசாரிச்சேன் எங்க டிபார்ட்மெண்ட் கிடையாதுநு கன்பார்ம் ஆன அப்பறம் தான் விநாயக் சாரே அமைதி ஆனாரு..-DCP

உங்க ஆள் இல்லனா வேற யாருக்காக இதெல்லாம் பண்றான்??அவனோட நோக்கம் நிச்சயமா பணமில்லை..வேற எதுக்காக இப்படி பண்ணணும்??எப்போ என்ன பண்ணுவானோனு இருக்கு..

அதர்வா கவலபடாத அவன நாங்க பாத்துக்குறோம் நீ டென்ஷனாகாம இரு -DCP

என்னவோ பண்ணுங்க பட் இனியும் அவன சாதாரணமா நினைச்சுடாதீங்க..என்றவாறு வேகமாய் வெளியே சென்றுவிட்டான்…

என்ன ரஞ்சித் என்ன நடக்குது??

விநாயக் சார் நா தான் சொல்றனே அவனபத்தி டீடெய்ல்டா விசாரிச்சாச்சு பக்காவா ப்ளான் பண்ணிதான் உள்ள வந்துருக்கான்..அதனாலதான் நம்மளால ட்ரேஸ் பண்ணமுடில..கண்டிப்பா யாரோ அவனுக்கு ஹெல்ப் பண்றாங்க..

ம்ம்ம் இந்த பாயல் வீட்டுக்கே போய்ருக்கான்னா அப்போ அவளையும் தேட ஆரம்பிச்சுருப்பானோ??

கண்டிப்பா சான்ஸஸ் ஆர் தேர் ஒரே நல்லவிஷயம் அவள கெஸ்ட் ஹவுஸ்ல இருக்குறதுதான்..வேணா இடம் மாத்திரலாமா சார்..

இல்ல ரஞ்சித் இப்போ அவள நாம வெளிய கொண்டு வரது சரியாயிருக்காது..சரி எப்படியும் நானே அதர்வாவ மாட்டிவிட்ருப்பேன்..இப்போ ராம் அந்த வேலைய குறைச்சுட்டான்..அவ்ளோதான் வித்யாசம்..என்றபடி சேரிலிருந்து எழுந்தார் விநாயக்..

சார்??????

எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுறீங்க ரஞ்சித்??இது எனக்கும் அதர்வா குடும்பத்துக்கும் இருக்குற பழைய கணக்கு..இல்லனா ராம் மாறி  எவனோ ஒருத்தன் எஸ்.எம். குரூப்க்குள்ள நுழையுறத பாத்துட்டு சும்மாயிருப்பேனா..பிரச்சனைனு வந்தாலும் அதர்வா தான் மாட்டுவான் நாம ஸேவ்..என்ன சொல்றீங்க??

அரைகுறையாய் தலையசைத்தார் DCP ரஞ்சித்..

இங்கு நிலைமை இவ்வாறாக இருக்க அங்கு ராம் அமர்நாத்தின் முன் அமர்ந்திருந்தான்..சாரி A.K உங்களை ஏமாத்தனும்னு நினைக்கல நா வந்த வேலை அப்படிபட்டது உங்ககிட்டயே வந்து உங்க பையனுக்கு எதிரா வேலை பாக்கதான் வந்துருக்கேன்னு எப்படி சொல்றது அதான்..மத்தபடி..

ராம் நீ இவ்ளோ விளக்கம்லா குடுக்க வேண்டிய அவசியமேயில்லை..உன்கூட பழகின இந்த நாட்கள்ல உன்னை பத்தி நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்கேன்..சோ பீ கூல்..ஆமா மகி எப்படியிருக்கா??

ம்ம் நல்லாயிருக்கா A.K..ரொம்ப குழப்பத்துலயிருந்தா இப்போதான் கொஞ்சம் நார்மலாயிருக்கா..

பாவம் நல்ல பொண்ணு..பத்திரமா பாத்துக்கோ ராம்..

சரி சார் நா கிளம்புறேன்..டேக் கேர்..

இவ்வாறாக நாட்கள் செல்ல அன்று பேசியபின் ஒரு வாரமாய் ரஞ்சித் வரவேயில்லை என்னவென்று கேட்டதற்கு குடும்ப விஷயமாய் வெளியூர் சென்றிருப்பதாக கூறினார்..விநாயக்கிற்கோ மனதில் ஒரே குழப்பம் நம்மளபத்தி சொன்னது தப்பா போச்சே..அப்படி எங்க போய்ருப்பான் இவன்..இன்னும் ரெண்டு நாள் பாப்போம் வரலனா அவன தேடி அவனுக்கும் முடிவு கட்ட வேண்டியதுதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.