08. என் காதல் பொன்னூஞ்சல் நீ - ப்ரியா
சீற்றத்துடன் அவளை பார்த்தவன் குழம்பி இருக்கும் அவள் முகத்தில் எதுவோ தெரிய கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்த முயன்றான். ஏற்கனவே அவளிடம் கோபப்பட்டு இவ்வளவு தூரம் வந்தது போதும் என்று அவன் மனதை கட்டுப்படுத்த, கையில் ஐஸ்க்ரீமுடன் பரத் அனன்யாவை தேடி வந்திருந்தான்.
"அம்மு??!!" என்று பயம் கலந்திருந்த அவள் முகத்தை பார்த்து அவன் கூப்பிட, சட்டென சுதாரித்தவள்,
"ஹே லூசு இங்க எதுக்கு வந்த நானே வந்திருப்பேனே" என்று அவன் வேதாந்த்தை பார்க்கும் முன்னே அவளை நகர்த்தி சென்று விட்டாள் அனன்யா.
அன்றைய நாளுக்கு பிறகு அலுவலகத்திலும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேரே பார்ப்பதை தவிர்த்தனர்!! எது சொல்வதனாலும் யாரோ ஒருவர் இருக்கும் போதோ இல்லை மீட்டிங் இருக்கும் போதோ உரையாடல் நிகழுமாறு பார்த்துக் கொண்டனர்.. இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்ப்பதில் தெளிவாக இருக்க, விடை தெரியாத கேள்விகள் அவர்களை குழப்பிய வண்ணம் இருந்தது.
விதார்த்திடம் இருந்து அனன்யாவிற்கு எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருக்க, அவளும் தன் கவலையில் உழன்று கொண்டிருந்தாள். இதற்கிடையில் வேதாந்த்தை பற்றி தனியாக யோசிக்கும் நிலை அவளுக்கு இருக்கவில்லை.
பரத்தும் மேகலாவும் அவளை மாறி மாறி பார்த்துக் கொண்டாலும், முதல் காதல் தந்த வலி அதுவும் என்ன ஏது என்று புரியாமல் விழுந்த இந்த அடியாள் மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.
அந்த வார இறுதியில் தன் சொந்த ஊருக்கு சொல்வதற்காக பரத்தும் அனன்யாவும் தயாராகி கொண்டிருக்க, ஆதிரா அவர்களுக்கு உதவி கொண்டிருந்தாள்.
அப்போது வந்தது அந்த குறுஞ்செய்தி!! அனன்யாவின் கைபேசிக்கு.. விதார்த்துடைய நண்பன் சங்கரின் எண்ணில் இருந்து..!!
'நான் நாளைக்கு ஊருக்கு வரேன்மா உன்கிட்ட நிறைய பேசணும்'
அவள் அதை பார்த்து விட்டு அப்படியே அமர்ந்து விட, அவளை கவனித்து கொண்டிருந்த ஆதிரா பரத்தை சைகையில் அழைத்து அவளை காணுமாறு கூறினாள்.
"அணு என்ன ஆச்சு?"
"சங்கர் அண்ணா.."
"சங்கரா???"
"தேவோட பிரென்ட்"
"ப்ச் ஆரம்பிச்சுட்டியா இப்போ எதுக்கு அவனை பத்தி யோசிக்கிற?", பரத் கடுப்பாக,
"இல்லை.. சங்கர் அண்ணா நாளைக்கு ஊருக்கு வர்றேன் உங்கிட்ட பேசணும்னு மெசேஜ் பண்ணி இருக்காரு"
"அதுக்கு?" அதிரா கோபத்தை உள்ளடக்கி கேட்க,
"நான் இங்கேயே இருக்கேன், பரத் மட்டும் போகட்டும்" என்று இருவரின் முகத்தையும் பார்த்தபடி அவள்கூற, இருவருக்குமே சுள்ளென கோபம் தலைக்கேறியது.
"பைத்தியமா டி நீ? நானும் நாளைக்கு போய்டுவேன் நீ மட்டும் தனியா அவரை பார்க்க போறியா? ரெண்டு நாள் நாங்க இருக்க மாட்டோம் நீ எப்படி தனியா இருப்ப?"
"நான் இருந்துக்குவேன் ப்ளீஸ்"
"அம்மு ப்ளீஸ் கிளம்பு என் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருக்கேன்"
"ப்ளீஸ் பாத்தி நீ மாட்டும் போயிடு வாடா ப்ளீஸ் ப்ளீஸ்" என்று அவள் கெஞ்சவும், பாரத்தின் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.
"என்னது?"
"........."'
"எப்போ? உடனே கிளம்பி வரேன் நீங்க பயப்படாதீங்க.. எஸ் எஸ் வந்ததுடறேன்"
"........."
"அழாதீங்க, சீக்கிரம் வரேன், தம்பிய பாத்துக்க சொல்லுங்க"
அவன் பேசுவதை கேட்டு பதட்டமான இருவரும் அவன் முகத்தை பார்க்க, போனை வைத்தவன்,
"அப்பா கீழ விழுந்துட்டாராம்.. கொஞ்சம் நல்ல அடி போல இருக்கு, அம்மா பயப்படறாங்க நான் உடனே போகணும்" என்று அனன்யாவின் முகம் பார்த்து அவன் சொல்ல,
"உடனே கிளம்பு என்ன பத்தி யோசிக்காம" என்று தான் வரப்போவதில்லை என்பதை சொன்னாள்.
ஒரு பெருமூச்சுடன் கிளம்பியவன், அவளை ஆழமாய் ஒரு முறை பார்த்து
"எப்போ என்ன ஆனாலும் கூப்பிடு.. ஓடி வந்துடுவேன் அம்மு .. பார்த்துக்கோ" என்று இயல்புக்கு மாறாய் கூறி விட்டு போக ஏதோ நடக்க போகிறது என்பதை அவள் மனம் தெளிவாய் சொன்னது..
அது விரைவிலேயே நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை..!! அதும் நாளையே நடக்கும் என்று..!!!
ஊஞ்சல் ஆடும்..!!!!
Next episode will be published on 8th Nov. This series is updated fortnightly on Tuesdays @ 1pm.
{kunena_discuss:884}