(Reading time: 19 - 38 minutes)

19. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

பொய் சொல்ல கூடாது காதலி
 பொய் சொன்னாலும் நீயே என் காதலி (2)
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் 
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை 
பொய் ஒன்றே ஒப்பித்தாய் அய்யய்யோ தப்பித்தாய் 
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் 

பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி 

ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே 
நீ ஒற்றை துளியா கோடி கடலா 
உண்மை சொல்லடி பெண்ணே 
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே 
நெற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே 
அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே
வெட்கம் விட்டு வா வெளியே 
நில் என்று கண்டித்தாய் உள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான் சொல்லாமல் வஞ்சித்தாய்

மாமா எல்லா வொர்க்கும் முடிஞ்சுது.,மார்க் இங்க வந்து நம்ம ப்ராஜெக்ட் ஸ்சைன் பண்ணா போதும்..அடுத்த ஸெகண்ட் அமவுண்ட் அக்கௌண்ட்க்கு ட்ரான்ஸ்வர் ஆயிடும்..எங்கப்பா அவரு வாழ்க்கை புல்லா சம்பாதிச்சத இந்த ஒரு ப்ராஜெக்ட்ல நா முடிச்சுருவேன் மாமா..எல்லாமே உங்களால தான்..ரொம்ப தேங்க்ஸ் மாமா..

இருக்கட்டும் அதர்வா..நீ யாரு என் அக்கா பையன்..எனக்கும் பையன் மாதிரி தான்..உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்..என்றவாறு DCPஐ அர்த்தமுள்ள பார்வை பார்த்தார் விநாயக்..DCPயோ உணர்ச்சியற்ற குரலில்..ம்ம் அதெல்லாம் சரி தான் நா ஒண்ணு சொல்லனும்னு நினைச்சேன்..நாம அந்த பாயலை வேணா இடம் மாத்திரலாமா??

விநாயக் அவரை சந்தேகமாய் பார்க்க அதர்வாவோ குழப்பமாய் பார்த்தான்..என்ன DC சார் திடீர்நு..-விநாயக்..

திடீர்நுல்லாம் இல்ல சார் கொஞ்ச நாளாவே மைண்ட்ல போய்ட்டு தான் இருக்கு..இப்போலா அந்த ராம் கூடவே சுத்துவானே அவன் பேரு கூட ஆங் பரணி..அவன் அடிக்கடி அமர்நாத் பவனுக்கு வரானாமே..சாக்ட்சிக்கும் அவனுக்கும் லவ்னு ஏதோ கேள்விப்பட்டேன்..இதுக்கு முன்னாடி எப்படியோ இப்போ அந்த மகி மேல வேற கை வச்சுட்டானுங்க..அவன் சும்மாயில்லாம எதாவது நோண்ட ஆரம்பிச்சா எதுக்கு தேவையில்லாம மார்க் வர நேரத்துல பிரச்சனை அதான் சொன்னேன் மத்தபடி உங்க இஷ்டம் சார்..

அவர் பதிலில் ஏதோ சமாதானமாக யோசனையில் ஆழ்ந்தார் விநாயக்..ம்ம் மாமா எனக்கென்னவோ சார் சொல்றது கரெக்ட்நு படுது.,இன்னும் ஒரு வாரமோ பத்து நாளோ அதுக்கப்பறம் அவ கதைய முடிச்சுருவோம்..-அதர்வா..

நானும் கேள்வி பட்டேன் உங்கப்பா கூட கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிட்டாராமே..எதுக்கும் DC சார் சொல்றத செய்றது பெட்டர்நு தான் தோணுது..ஆனா இப்போ எங்க கொண்டு போறது..ஹாஸ்பிட்டல்க்கு கொண்டு வந்தாலும் சரிபடாது..ம்ம்ம் என்ன பண்ணலாம்..

சார் வேணா எங்க வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஸ்டோர் ரூம்ல போட்டுறலாம்..எங்க வீட்லயும் யாரும் இல்லை..ஊர்ல இருக்காங்க வர 20 நாள் ஆகும்..அதுக்குள்ள நம்ம பிஸினஸ் முடிஞ்சுரும்..என்ன சொல்றீங்க??-DC

சரி DC சார்..அப்போ அப்படியே பண்ணிருவோம்..ம்ம் அவளுக்கு ஆயிசு கெட்டி போல தப்பிச்சுட்டேயிருக்கா..இன்னைக்கு நைட் நம்ம பசங்கள வச்சு இடம் மாத்திருவோம்..

பேசியபடியே இரவு அமர்நாத் பவனின் கெஸ்ட் ஹவுஸிலிருந்து பாயல் இடம் மாற்றப்பட்டாள்..அவர்கள் அவளை தூக்கிச் செல்வதை மாடியில் தற்செயலாக வெளியே வந்த சாக்ட்சி பார்த்துவிட்டாள்..உடனடியாக பரணியை அழைக்க அவன் மொபைல் நாட் ரீச்சபிளில் இருந்தது..ராமை அழைக்கவா என யோசித்தவள் வேறு வழியின்றி அழைத்தாள்..

அண்ணா அந்த பாயல்ல எங்கேயோ தூக்கிட்டு போறாங்கண்ணா..பாவம் அவங்க இப்போ என்ன பண்றது??

டென்ஷன் ஆகாதடா..ரிலாக்ஸ்..இன்னும் ரெண்டு மூணு நாள் தான் எல்லாம் முடிஞ்சுரும் அவளுக்கு ஒண்ணும் ஆகாது கவலபடாம இரு..என ஆறுதல் கூறி போனை வைத்தான்..அதற்கிடையில் அமர்நாத்திடமிருந்து ராமிற்கு அழைப்பு வந்தது..

சொல்லுங்க A.K..

ராம் சாக்ட்சி கல்யாண விஷயமா பேசலாம்நு பண்ணிணேன்..

என்னனு சொல்லுங்க சார்..

கல்யாணம் பொறுமையா எப்போ வேணா வச்சுப்போம்..பார்மலா ஒரு என்கேஷ்மெண்ட் மட்டும் இப்போ பண்ணிடலாம் ராம்..

என்ன சார் திடீர்நு நிலைமை உங்களுக்கே தெரியும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.