21. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ
ஸ்நேகிதனே ஸ்நேகிதனே ரகசிய ஸ்நேகிதனே
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு ஸ்நேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே
சின்ன சின்ன அத்துமீறல் புரிவாய்
என் cell எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூ பறிக்கும் பக்தன் போல மெதுவாய்
நான் தூங்கும் போது விரல் நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் olive எண்ணை பூசி
சேவைகள் செய்ய வேண்டும்
நீ அழும் போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ராம் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது..மகி அவனை குழந்தையை போல் பார்த்து கொள்ள ஓரளவு வலி மறந்து நன்றாகவே இருந்தான்..என்ன தான் அவனை நன்றாக கவனித்துக் கொண்டாலும் கடந்த ஒரு மாத காலமாக என்ன நடந்தது என்று கேட்டு துளைத்தெடுத்துவிட்டாள் மகி..அவனும் பொறுமையாய் பதில் கூற,ஆனாலும் குட்டிமா ஒரு மாசம் நீ என்ன படுத்தினதுக்கு இந்த நாலு நாள்ல உன் பெண்ட் நிமிர அளவுக்கு என்ன கவனிச்சுக்குற பாத்தியா..கடவுள் இருக்காரு..என சிரித்தான்..
ம்ம்ம் எதுல ரிவெண்ஞ்ச் எடுக்கனும்னே இல்லாம போச்சு..போங்கப்பா நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா உங்கள பாத்தப்போ..
நானாவது பரவால்லம்மா கட்டு மட்டும் தான் போட்டிருந்தேன்..நீ என்ன பாத்து யாருநு கேட்ட..அதுக்கு இது தேவல..
சாரிப்பா ரொம்ப கஷ்டப்பட்டுருப்பீங்கள..
ஹேய் மகி எது எப்படி இருந்தாலும் நீ என் கூடவே தான இருந்த அதுவே நிம்மதியா இருந்தது..அப்பப்போ நா எங்கேயாவது போய்ட்றேன்னு சொல்லி அழுவ..அப்படி எதுவும் நடந்திருந்தா நா உயிரோடயே இருந்திருக்க மாட்டேன்டா..
என்ன ராம் நீங்க என அவள் கண்களில் கண்ணீர் எட்டிபார்க்க ..சகஜமாக்க எண்ணியவனாய் ஆனாலும் என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ டா அப்போ கூட ஒரு ஆப்ஷன் குடுத்தா எனக்குநு ஒரு லைவ் அமைச்சுக்க சொன்ன..ம்ம் ஜஸ்ட் மிஸ் ஆய்டுச்சு..கேஸ் முடியட்டுமேநு வெயிட் பண்ணேண்..அதுகெல்லாம் ஒரு குடுப்பனை வேணும் என்று பாவமாய் கூற..
அடப்பாவி சாமியார் மாறி இருந்தீங்க இப்போ என்னடானா இன்னோன்னு கேக்குதா என அவனை துரத்த இன்பமாய் பொழுதை கழித்தனர்..மதியத்திற்கு மேல் பரணியிடமிருந்து அழைப்பு வந்தது..
ராம் எப்படி இருக்க??
இப்போ பரவால்ல மச்சான்..ஆமா நீ ஏன் வீட்டுக்கு வரவேயில்லை மகி கூட கேட்டுட்டேயிருந்தா..
உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேநு தான்டா..பட் இப்போ உன் ஹெல்ப் கொஞ்சம் தேவை கமிஷ்னர் ஆபீஸ் வர வர முடியுமா ஜஸ்ட் டு த்ரீ அவர்ஸ்..
கண்டிப்பா வரேன்டா எதாவது ப்ராப்ளம்மா??
அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சி..விநாயக்கிட்ட ஸ்டேட்மெண்ட் வாங்க போறாங்களாம் அமர்நாத் சாரும் அங்க வர போறாரு..கமிஷ்னர் அவருக்கு க்ளோஸ்தான் பட் நீ இருந்தா இன்னும் பெட்டரா இருக்கும்நு சாக்ட்சி சொல்றா..அதான்..
ஓ..சரி பரணி நீ எப்போ வரநு சொல்லு நா ரெடியாயிருக்கேன்..
என்ன ராம் அதுகுள்ள ஆரம்பிச்சுட்டீங்களா??-மகி..
இல்ல குட்டிமா அமர்நாத் சாருக்காக தான் ஜஸ்ட் டூ அவர்ஸ் வந்துருவேன்..சில விஷயங்கள அவரு ஏத்துக்க கொஞ்சம் டைம் வேணும்டா நல்ல மனுஷன் நாம தான கூட இருக்கனும்..
அதற்கு மேல் மகி எதுவும் பேசவில்லை..ராமுமம் பரணியும் கமிஷ்னர் ஆபீஸை அடைந்த போது அங்கு மற்ற அனைவரும் ஏற்கனவே காத்திருந்தனர்..பொதுவான நலவிசாரிப்புகளுக்கு பிறகு ராம் அமர்நாத்திடம்,A.K அதான் உங்களுக்கு எல்லாமே தெரியுமே அப்பறம் ஏன் அவன் பேச்சை கேக்க வந்துருக்கீங்க??
இல்ல ராம் மனசு ஆற மாட்டேங்குது அப்படி அந்த விநாயக்கு நா என்ன பாவம் பண்ணேண் என் புள்ளையே இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருக்கான்..அவனை நாலு கேள்வி கேட்டாதான் என் மனசு ஆறும்….அவரின் பேச்சே அவரின் உறுதியை பறை சாற்ற அதற்கு மேல் ராம் பேசவில்லை..