13. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி
“குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது”என்ற பாடல் ஒலிக்க,வருத்தத்துடன் போனை தன் காதிலிருந்து சற்று தள்ளி வைத்தான் யஷ்வந்த்.
இது அவனுடைய அம்மாவின் காலர் டியூன். யஸ்வந்த்திற்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் டியூன்.
அவனது அப்பா,தாமரைக்கு ஒருபடி மிஞ்சி..”தென்னைய வைச்சா இளநீரு..பிள்ளையப் பெத்தா கண்ணீரு”என்று வேண்டுமென்றே முகத்தில் சோகத்தை தேக்கி,அவன் முன் பாடுவார்.
வேறு எதையுமே அவர் பேசுவதில்லை.யஸ்வந்த்திற்கு தான் நிம்மதி என்பதே இல்லாமல் போய்விட்டது.
அம்மாவின் மௌன விரதம் அவனை மிகவும் பாதித்துவிட,வீட்டிற்கு வந்தவன் ஹாலில் அமர்ந்திருந்த தாமரையின் காலுக்கடியில் அமர்ந்துவிட்டான்.
அப்போதும் அவர் அவனை கண்டுகொள்ளாமல்,தினசரிப் பத்திரிக்கையை எடுத்து வாசிக்க..அதை அவரது மகன் பிடுங்கவும்,மகனை முறைத்தார்.
“என்பக்கம் இருக்க நியாயத்தை கொஞ்சமாவது கேளுங்கம்மா..எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போலிருக்கு”என்றவனின் தோற்றம் அவனது பேச்சை உண்மை என்று தான் சொல்லியது.
தாய் மனம் பொறுக்காதில்லையா.இயல்பாக அவரது கரம் மகனது தலையை வருட,அதில் நிம்மதியடைந்தவனாய்..அவரது காலிலையே தலைவைத்துக் கொண்டான்.
“ரொம்ப குழம்பி போயிருக்கேன்மா”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்..
“யார் மேலையும் குற்றம் சுமத்த முடியல.யாரையும் சந்தேகப்பட முடியல.எந்த வழக்கிலையும் என்னால முழு மனசோட ஈடுபடவே முடியலை.நான் செய்தது சரியா தவறா ஒண்ணுமே புரியலை”
“எந்த கேசை எடுத்தாலும்,சீக்கிரம் முடிச்சிடுவேன்.ஆனால் இப்போ சுத்தி சுத்தி ஒரே இடத்தில வந்து நிற்கறேன்மா”
“அப்படி என்ன கேஸ்..அவந்திகாவோடாதா?”என்று தனது மௌனத்தை கலைத்தார்.
“இல்ல.இது வேற கேஸ்.ஆனால் நான் அவளால தான் குழம்பிப் போயிருக்கேன்.அவளைப் பத்தி முன்னாடியே நான் விசாரிச்சிருந்துக்கணும்.காதல் மயக்கம்,எதையும் யோசிக்க விடலை”
“என்கிட்ட படத்தில நடிக்கற ஆசை இருக்குன்னு பலமுறை சொல்லியிருக்கா.ஒருமுறை கூட நான் அதை தீவிரமா நினைச்சதில்லை.பொய் சொல்றான்னு நினைச்சிட்டேன்.”,
“சமீபத்தில அவளைப் பத்தி விசாரிச்ச போது தான்,பல விஷயங்கள் தெரிய வந்தது.அவ நிரேஷைக் கல்யாணம் செய்துக்கறதா இருந்திருக்காம்மா.நியூஸ் பேப்பர்ல கூட வந்திருக்கு.ரொம்ப நெருக்கமா இருக்க மாதிரி நிறைய போட்டோஸ் வேற இருக்கு”என்ற உடன் அவனது தலையை நகர்த்தியவர்..
“ஒரு பொண்ணு மேல வீணா பழியைப் போடாதே.உன்மேல தப்பு இருந்தா,தப்புன்னு ஒத்துக்க..அதை விட்டுட்டு.உன்னை நிரூபிக்கறதுக்காக,அந்தப் பொண்ணை அசிங்கப்படுத்தாதே”என்று கறாராக கூறினார்.
“கிடைச்ச தகவல் பொய்யா தான் இருக்கணும்னு,டீடைல் கொடுத்தவனை அடிச்சுட்டேன் தெரியுமா..ஆனால் உண்மைமா.எனக்கு மட்டும் பொய் சொல்லனும்னு ஆசையா என்ன..இப்போ நடக்கறது,அவ வாழ்க்கைல நடந்தது எல்லாமே பொய்யா இருக்கணும் என்பது தான் என்னோட ஆசையும்.அவளைப் பத்தி நினைச்சு நினைச்சே,நான் எல்லாத்தையும் மறந்துட்டு உட்கார்ந்திருக்கேன்”
“உண்ம்மையா காதலிச்சவன்,கல்யாண மண்டபத்தில அப்படி பேசியிருக்க மாட்டான்”
“யாருக்கும் விளக்கம் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன்.உங்ககிட்ட அவசியம் சொல்லணும்னு தோணுது.அப்போ தான் எனக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.”
“நான் நந்தனாவுக்காக அவந்திகாவை காதலிக்கலை.அப்படி இருந்திருந்தா,மணமேடை வரைக்கும் வந்திருக்கவே மாட்டேன்.கடைசி நிமிஷத்தில எல்லாமே மாறிப் போச்சு”
“அவந்திகா போட்டோவை எதிர்பாராம வர்ஷூ போன்ல நந்தனா பார்த்துட்டா.உண்மைய சொல்லட்டுமா..அதுக்கு அப்புறம் தான் அவ கண்ணை சிமிட்டவே ஆரம்பிச்சா..எப்படி நடந்தது.இதோட பின்னணி என்ன.அவந்திகா எதுவும் தப்பு செய்தாளா..நந்தனாவை எப்படி அவ மீட் பண்ணா..இதுக்கெல்லாம் விடை கிடைக்கனும்னு தான் அடிக்கடி அவந்திகாவை போய் பார்த்தேன்.ஆனால் அவகிட்ட அப்படி எந்த தப்புமே எனக்கு தெரியலை..”
“அவ தப்பு செய்திருந்தாலும்,செய்யலைன்னாலும் அவளை என்னால விட முடியாதுன்னு தோணுச்சும்மா.அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ண சொன்னதுக்கு வேற எந்த காரணமுமே இல்லை.ஆனாலும் உள்ளுக்குள்ள ஒரு சந்தேகம்.அதனால தான் மண்டபத்தில அப்படி நடந்துக்கிட்டேன்..”
“அந்த இடத்தில இருந்து அவ போவான்னு நான் எதிர்பார்க்கலை.போனதினால தான் எனக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பிச்சுது.அந்த சந்தேகத்தை மட்டும் அடிப்படையா வைச்சு,என்னால மேற்கொண்டு ப்ரோசீட் செய்யவே முடியலை.இதை கேசா எடுத்துக்கவும் முடியாது.என்னோட டிபார்ட்மென்ட் கீழ இது வராதுன்றது முக்கியமான விஷயம்”என்றான்.
முழுதாய் குழம்பிப் போயிருந்தவன்,குழம்பிப் போன மாதிரியே,அவனது தாயையும் குழப்பிவிட்டான்.
இன்னுமே அவருக்கு மகன் மீது நம்பிக்கை வரவில்லை.அதே நேரத்தில் போட்டோவில் மிகவும் நெருக்கமாக இருக்கும்,அவந்திகாவும் நிரேஷும் அவரை மேலும் குழப்பினார்கள்.
அந்த நெருக்கமான போட்டோ இன்றைய நாளிதழில் வந்தது தான்.
அதுவும் பிரிந்த காதல் ஜோடி மீண்டும் இணைந்தது என்ற தலைப்பில் வந்தது தான் அவரை உலுக்கிப் போட்டது.
ஒருவரின் புறத்தோற்றத்தையும்,கலகலப்பான பேச்சையும் மட்டுமே நம்பி எந்த முடிவையும் எடுக்கக் கூடாதோ!!
ஹாய் பிரண்ட்ஸ்..நேரமின்மையால் யாருக்கும் பதில் கூற முடியவில்லை..ud எழுதக் கூட நேரமில்லை..கிடைத்த நேரத்தில் இவ்வளவு தான் எழுத முடிந்தது.கொஞ்சம் ப்ரீ ஆகும் வரை..பொறுத்துக்கொள்ளுங்கள்..
தொடரும்
{kunena_discuss:1004}