(Reading time: 12 - 23 minutes)

"னக்கு தெரியும் என் மேலே நீ கோபமா இருக்கன்னு!என்னை மன்னிச்சிடுப்பா!ஆனா,நீ இங்கே உடனே வந்தாகணும்!"

"போனை வைங்க!எனக்கு நிறைய வேலை இருக்கு!"

"ருத்ரா நான் சொல்றதைக் கேளுப்பா!இங்கே..வி..விஷ்வாவுக்கு உடம்பு சரியில்லைப்பா!"-இது எந்த ஆண்மகனின் தைரியத்தையும் உலுக்கிப் பார்க்கும் வாக்கியம்!!பிறந்த சில மாதங்களே ஆன சிசுவின் உடல் நலம் குன்றி இருப்பது எவராலும் சகித்து கொள்ள இயலாதல்லவா??

"எ..என்ன?என்னாச்சு அவனுக்கு?"

"சரண்யா அவனை கொஞ்சம் கூட கவனிக்கறது இல்லைப்பா!வெளியில சொன்னா அசிங்கம்,அழகு போயிடும்னு தாய்பாலைக் கூட கொடுக்க மாட்றா!அவனோட உடம்பு ரொம்ப பலவீனமா ஆயிடுச்சுப்பா!அவ அதைப் பற்றி கவலைப்படுற மாதிரியே தெரியலை!எனக்கு பயமா இருக்குப்பா!"-அவர் கூறியது தான் தாமதம்,உடனே இணைப்பை துண்டித்துவிட்டு ஓடினான் ருத்ரா.

அப்போது மணி இரவு பத்து இருக்கலாம்!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நடுங்கும் குளிரில்,வெற்று உடம்பில்,நடு கூடத்தில் விஷ்வா கதறிக் கொண்டிருந்தான்.அவனோடு துணைக்கு எவருமில்லை!!உயிரே ஒடுங்கிப் போனது அவனுக்கு!!அவன் எதைக் குறித்தும் சிந்திக்கவில்லை,சற்றும் தாமதம் செய்யாமல் தன் புதல்வனை தூக்கினான்.அவனது முழங்கை அளவு தான் இருந்தான் அவன்.மிக மிக மிருதுவான தேகம்,அனலென தகித்துக் கொண்டிருந்தது.மனம் நொறுங்கி கண்ணீர் வடித்தான் ருத்ரா.

"விஷ்வா!"-குளிருக்கு அடக்கமான தந்தையின் தேகம்,சற்றே அவன் கதறலை கட்டுப்படுத்தியது.

"பயப்படாதேப்பா!அப்பா வந்துட்டேன்.இனி,உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்!"-அதைக்காணும் எவரின் தைரியத்தையும் சோதித்துவிடும் அந்நிகழ்வு!!

"ஏ...நீ ஏன் இங்கே வந்த?"-பின்னாலிருந்து அந்த அரக்கியின் குரல் ஒலித்தது.வெறுப்பின் உச்சத்தில் இருந்தவன்,எதையும் சிந்திக்காமல்,திரும்பி அவளை ஓங்கி அறைந்தான்.

"வாயை மூடு!ஒரு வார்த்தை பேசினா,கொன்னுடுவேன் உன்னை!"-அவள் அதிர்ந்துப் போய் அவனை பார்த்தாள்.

"என் பையனை எப்படி வளர்க்கணும்னு எனக்கு தெரியும்!இவனை நான் கூட்டிட்டு போறேன்!இவன் மேலே உரிமை எடுத்துட்டு வந்த,ருத்ராவைப் பற்றி தெரியும்ல!ஜாக்கிரதை!"-என்றவன்,தன் புதல்வனோடு அங்கிருந்து வெளியேறினான்.கடந்தக்காலம் அவனுக்கு காயத்தையே வெகுவாக அளித்திருந்தது.

தன் மேல் உறங்கிக் கொண்டிருந்தவன் சற்று சிணுங்க,சுய நினைவை அடைந்தான் ருத்ரா.

மெல்ல அவனது சிரத்தில் முத்தமிட்டான்.

"நீதான்டா எனக்கு உலகம்!உனக்காக எதையும் செய்வேன்!எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்!"-அவனிடம் மெல்லியக் குரலில் வாக்கினை நல்கினான் ருத்ரா.வருங்காலத்தில் அவனது வாழ்வினை திசை திருப்பும் வாக்காகவும் உருமாறலாம் அது!!!

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1070}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.