01. நீதான் என் சந்தோசம் - ராசு
அவர்கள் ஒரு நான்கைந்து பேர் கலகலத்தவாறு பேருந்து நிறுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் தோழிகள். ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள்.
இப்போது பணியை விட்டுத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
பட்டாம் பூச்சிகளாய் சுற்றித்திரிந்த கல்லூரிக்காலத்தை விட்டு வெளியில் வந்து சில காலங்களே ஆனவர்கள்.
அதனால் இன்னும் அந்த குறும்பு அவர்களை விட்டு விலகவில்லை.
அவர்களில் ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் இன்னும் குடும்பப்பொறுப்பை உணராதவர்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்று அவன் இரண்டு நாட்கள் பழசாகிவிட்ட காரணத்தால் இப்போதுதான் அந்த வசீகர இளைஞனை கவனிக்கிறார்கள்.
நாளை இன்னொருவனை பார்த்த பிறகு அவர்கள் கவனமும் திசைமாறிவிடும்.
அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வர ஏறினார்கள்.
வீட்டுக்கு சென்ற பிறகும் அவன் நினைவுகள் அவளை விட்டு அகலவில்லை.